Thursday, November 14, 2013

inconvenient spirituality நிச்சயமாக நீ சாமி கும்பிட்டாலும் கும்பிடாவிட்டாலும் அடையப்போகும் இடம் ஒன்றுதான்

நான் உங்களை தொந்தரவு செய்வதற்கு நீங்கள் என்னை மன்னிக்கவேண்டும் ஆனால் உண்மையில் மகிழ்ச்சி அடையவேண்டும்
 எதையும் புதிதாக அறிவதிலும் பார்க்க ஏற்கனவே நாம் அறிந்தவற்றை மறப்பது அவ்வளவு எளிதல்ல .
ஒரு குழந்தையின் விளையாடு பொருளை பறித்தால்அதற்கு கோபம் வருவது இயல்புதான் .
நீங்கள் சந்தோஷமாக கொண்டாடும் கோட்பாடுகள் நம்பிக்கைகளை எல்லாம் விட்டு சற்று மாற்றி யோசிப்பது அவ்வளவு எளிதல்ல ,
 ஏற்கனவே நாம் அறிந்த ஒன்று தற்போது தவறு என்று நமக்கு  தெரிய வருவதற்கு மிகுந்த நுட்பமான அறிவு வேண்டும் ,
அதை விட  தைரியம் வேண்டும்,
நாம் சரி என்று பரிபூர்ணமாக பல யுகங்களாக நம்பிய சமாசாரங்களை  திடீரென்று அவை எல்லாம் சுத்த ஹம்பக் என்று ஏற்று கொள்ள எல்லை இல்லாத துணிவு வேண்டும்,
முதலில் பயம் எங்கள் கண்களை திறக்க எம்மை அனுமதிக்காது ,
அப்படி விழிப்புணர்வு பெற்றாலும் அனுபவித்த இருட்டு சுகம் ஒரு போதையாக எம்மை தலை தூக்க விடாது,
இனிமேல் தூங்கவே முடியாது தொந்தரவு  தாங்கவே முடியாது என்ற நிலை வருபோது சிலவேளை நாம் எமது தூக்கத்தை விட்டு துயிலேழுவோம் . இங்கே நான் தூக்கம் என்று குறிப்பிடுவது சிந்தனை தூக்கத்தைத்தான் , ஆழமாக பதிக்கப்பட்ட நம்பிக்கைகள்  எமது ஆதார மெத்தைகளாக சொகுசான நித்திரையை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தந்து விட்டிருக்கிறது,
அந்த மெத்தையின் சுகத்தை நாம் அவ்வளவு இலகுவில் தியாகம் செய்துவிட முடியாது, பழக்க தோஷம் தலை தூக்க விடாது,
கண் முன்னாள் தெரியும் உலகத்தை விட கண்ணுக்கு தெரியாத விண்ணுலகம் சொர்க்க லோகம் ஆத்மா அநுபூதி என்பதாக பலவிதமான கோட்பாடுகள் பலவற்றையும் நம்புகிறோம் ,
இவை எல்லாம் உண்மையில் இருப்பதாகவே வைத்துகொள்வோம் ,
இவை எல்லாவற்றையும் விட இந்த மனித வாழ்வு அற்புதமானது,
கண்முன்னே பரந்து விரிந்து சதா ஜீவனுடன் காட்சி தரும் இந்த அற்புத வாழ்வை விட இந்த அற்புத உலகத்தை விட வேறு ஒன்றும் தற்போது தேவை இல்லை ,

Tuesday, November 5, 2013

இனி புதிதாக ஒரு விடயத்தையும் அறிய வேண்டியதில்லை ! ஆனால் தேடவேண்டியது உண்டு !


True wisdom comes to each of us when we realize how little we understand about Life, ourselves  and the world around us.
 As a human body it is an extraordinary piece of creation. But as a human being he is rotten because of the culture.

A messiah is the one who leaves a mess behind him in this world
Religions have promised roses but you end up with only thorns.
அடடா எனக்கு எல்லாம் தெரிந்து விட்டதே ? இனி புதிதாக தெரிவதற்கு என்ன இருக்கிறது ?  எனக்கு எல்லாம் தெரியும் !
எனது  மதத்திற்கு எல்லாம் தெரியும் .
எனது குருவுக்கு எல்லாம் தெரியும் ,
எனது கல்விக்கு எல்லாம் தெரியும் ,
எனது கலாச்சாரத்திற்கு எல்லாம் தெரியும் ,
இப்படியாக நான் சார்ந்துள்ள நம்பிக்கை கோட்பாடுகளுக்கு எல்லாம் தெரியும் ,
இனி புதிதாக ஒரு விடயத்தையும் நான் அறிய வேண்டியதில்லை ,
 மேற்கூறிய வாசகங்கள் எவ்வளவு அபத்தமானவை என்பதை நீங்கள் சிலவேளைகளில் புரிந்து கொள்வீர்கள் , ஏற்றுகொள்ளவும் கூடும் ,
இல்லை இல்லை நான் எப்போதும் புதிதாக எதையாவது கற்று அறிந்து கொள்ளவே விரும்புகிறேன் என்று நீங்கள் சிலவேளை சொல்ல கூடும்,

இந்த இடத்தில உங்களின் கருத்துக்கு நான் மறுப்பு சொல்லவேண்டிய கட்டாயத்தில் உள்ளேன் ,

நீங்கள் நிச்சயமாக உங்களுக்கு எல்லாம் தெரியும் என்றுதான் நம்புகிறீர்கள் .
ஏனெனில்  அடிப்படையில் நீங்கள் ஒரு நம்பிக்கை வாதியாகும் ,
நீங்கள் உங்கள் கடவுளை நம்புகிறீர்கள் '
உங்கள் குரு கூறும் உபதேசங்களை நம்புகிறீர்கள்.
உங்கள் சமுகம் உங்களுக்கு சொல்லித்தந்த  கோட்பாடுகளை நம்புகிறீர்கள் .
உண்மையில் நீங்கள் ஏற்கனவே  அறிந்த  உண்மைகளை எல்லாம் நம்புகிறீர்கள் .

இந்த நம்பிக்கையானது  உங்களுக்கு எல்லாம் தெரியும் என்ற கருத்தை உங்கள் மனதில் மிக மிக ஆழமாக பதித்துள்ளது,
இது சரியா தவறா என்பதல்ல பிரச்சனை  நீங்கள் அனேகமாக சஞ்சலத்திற்கு அப்பாற்பட்டு உங்கள் நம்பிக்கைகளை  போற்றி  மிகவும் சந்தோஷமாக உள்ளீர்கள்.
மகிழ்வாக இருப்பதற்கு அறிவாளியாக இருக்க வேண்டியது அவசியம் அல்ல.

பல ஆயிரம் ஆண்டுகளாக வழிகாட்டிகள் என்று கூறப்படுபவர்களால்  அறிவுரைகள் அல்லது சமய நம்பிக்கைகள் போன்ற ஆறுதல் மாத்திரைகளால்  சுகமாக உள்ளீர்கள்.

கேள்வி எதுவும் கேட்க வேண்டிய அவசியம் ஏதுமில்லை,
அப்படி தப்பி தவறி ஏதாவது கேள்விகள் எழுந்தாலும் சமயமும் சாஸ்திரமும் அல்லது கலாச்சாரமும் உங்களுக்கு வேண்டிய பதில்களை  லாரி லாரியாக அள்ளி தந்துவிடுகின்றன ,
இப்படிதான் யுகம் யுகமாக ஆப்பிள் கீழே விழுந்தலென்ன மேலே போனால் என்ன சாப்பிட கிடைத்தால் சரி என்று கோடானு கோடி மனிதர்கள் தூக்கத்தில் இருந்தனர் ,

அந்த போக்கிரி ஐசக் நியுட்டனுக்கு மட்டும் ஏன் அந்த ஆப்பிள்  கீழே விழுகிறது என்ற கேள்வி எழுந்தது ?

ஆப்பிள் என்றால் கீழேதான் விழும் அதிலென்ன அதிசயம் என்று எல்லோரும் சுகமாக நம்பி பொழுது , நியுட்டன் மட்டும் ஏதோ ஒன்று எனக்கு தெரியவில்லை என்று சந்தேகப்பட்டார் .
ஏன் ஆப்பிள் கீழே விழவேண்டும் ?
அது எனக்கு தெரியவில்லயே ?
என ஐசக் நியுட்டன் எண்ணிய பொழுதுதான்  அவர் விஞ்ஞானியாக உருவெடுத்தார் ,
எல்லாம் வழமை போல போய் கொண்டிருந்தால் அவை சரியாக போவதாக அர்த்தம் இல்லை,

Monday, October 28, 2013

முடிவான அபிப்பிராயங்கள் சிருஷ்டிக்கு எதிரானவை ! never approve or disapprove before starting the process

There are in fact two things, science and opinion; the former begets knowledge, the latter ignorance.”
― Hippocrates
 I never approve or disapprove of anything now !  Is is an absurd  attitude to take  towards LIFE . Oscar Wild

ஒரு  அனுபவத்தை 
அடைய தொடங்கும் முன்பே அது பற்றி அளவுக்கு
அதிகமாக  அபிப்பிராயங்களை  உருவாக்கி கொள்ளும்  பழக்கம் நம்மில் 
ஓரளவு இருக்கிறது,
இது  பாலகாண்டம் ஆரம்பிக்கையிலேயே  சமாதி காண்டத்தை  வாசிப்பது போன்றது,
இறுதி அத்தியாயத்தை முதலில் படித்து விட்டால் பின்பு  ஆரம்பத்தில் இருந்தே படிக்க வேண்டிய  அவசியம்  அவ்வளவாக இருப்பதில்லை ,
இந்த பிரபஞ்சமும் அப்படித்தான் இயங்குகிறது,
இங்கே முடிவுரையாக வருவது எமது  அதீதமான அபிப்பிராங்களும் அதன் காரணமாக நாம்   கொண்டிருக்கும் பழக்கவழக்கங்களும்தான்.
முதலிலேயே ஒன்றை தெரிந்து கொள்வோம் , வாழ்க்கை என்பது  ஒரு process அதாவது  அது ஒரு இயக்கம் , இன்னும் சரியாக சொல்லப்போனால் ஒவ்வொரு கணமும்  வாழ்வானது தன்னை தானே சிரிஷ்டித்துகொண்டு இருக்கிறது,
அதன் சிருஷ்டிக்கு  ஆதார விதையாக இருப்பது எமது மனதில் சதா   எழுந்த வண்ணம் உள்ள எண்ணங்களே ,
சிருஷ்டிக்குரிய  எண்ணங்கள் உருவான அடுத்த கணமே அந்த சிருஷ்டியின்  விளைவாக வரவேண்டிய  இறுதி  பயன் பற்றிய எமது  அபிப்பிராயங்கள்  அந்த சிருஷ்டியின் நோக்கத்தை  சிறுமை படுத்தி விடுகிறது.
அதாவது  ஆரம்பத்தில்  எதிர்பார்த்த  விளைவை இறுதியில்  அனுபவிக்க முடியாமல் போய் விடுகிறது, அபிப்பிராயங்கள் தீர்மானங்களும் உண்மையில் இரண்டு வேறு பட்ட விடயம்தான் , ஆனால் பல சமயங்களில் அவற்றிக்கு இடையே உள்ள இடைவெளி அவ்வளவு தெளிவாக இருப்பதில்லை .
மேலோட்டமான அபிப்பிராயங்கள்  காலப்போக்கில்  எமது குணாதிசயங்களை பொறுத்து அவை முடிவான தீர்மானங்கள் ஆகிவிடுவதுண்டு ,
அவை வெறும் அபிப்பிராயங்களாக இருக்கும் வரைக்கும் பெரிதாக ஒரு தாக்கத்தை அன்றாட வாழ்வில் உண்டாக்காது , அந்த அபிப்பிராயங்கள் ஒரு அழுத்தம் பெற்று ஒரு முடிவான அபிப்பிராயங்களாகி விடும் பொழுது அவை ஒரு வலிமையான உணர்ச்சியாக அல்லது சக்தியாக மாறிவிடுகிறது ,
பெரும் பாலும் எதற்கெடுத்தாலும்  அபிப்பிராயம் மேற்கொள்வது  எமது உலகத்தை  சின்னஞ்சிறிதாக்கி விடும்,
எமது மனதில் உருவாகும் எந்த ஒரு அபிப்பிராயமும் பூரணமான ஒரு சத்தியமாக இருப்பதில்லை, அது மிகவும் அபூர்வமாகவே சம்பவிக்கும்.

Wednesday, October 23, 2013

உலகம் தட்டையானது என்ற நம்பிக்கை மிகவும் சுகமானது

I love to disturb people, because only by disturbing them can I make them think. They have stopped thinking for centuries. Nobody has been there to disturb them. People have been consoling them. I am not going to console anybody, because the more you console them, the more retarded they remain.osho.

அறிஞர்களை அல்லது வழிகாட்டிகளை இரண்டு விதமாக பிரிக்கலாம் ,
நமக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறி நம்மை ஒரு சௌகரியமான மன நிலைக்கு இட்டு செல்பவர்கள் ஒரு வகை ,
அதாவது  நமது Comfort  Zone எனப்படும் மிக சுகமான ஒரு மன நிலையில் எம்மை ஆறுதல் படுத்தும் வழிகாட்டிகள் இவர்களாவர்,

அடுத்த வகையான வழிகாட்டிகள் நம்மை மிகவும் தொந்தரவு செய்யும் மனிதர்களாவர் ,
நாம் நீண்ட நாட்களாக சுமந்து  கொண்டிருக்கும் சுகமான நம்பிக்கைகளை அல்லது கோட்பாடுகளை உடைத்து நம்மை மிகவும் குழப்பத்திற்கு உள்ளாக்கி  விடுவார்கள் ! தீவிரமாக யோசிக்க வைத்துவிடுவார்கள் !
இவ்வகையான மனிதர்கள் நமது நிம்மதியையும் சிலவேளைகளில் தொலைத்துவிடுவார்கள் ,
Ignorance is Bliss அதாவது அறியாமையே ஆனந்தம் என்பது போல நாம் மிகவும் சரியான பாதையில் செல்வதாக எண்ணி கொண்டிருக்கையில் இந்த Disturb வழிகாட்டிகள் எமது கனவு சொர்க்கத்தை தகர்த்து விடுவார்கள்.

கனவு சொர்க்கத்தை கலைக்கும் காரியத்தை செய்யும் அறிஞர்களை மனித சமுதாயம் அவ்வளவு நிம்மதியாக இருக்க விட்டதில்லை ,

டார்வின், கலிலியோ, கோர்ப்பனிக்கஸ், சோக்கிரட்டீஸ் மற்றும் ஏராளமான Disturb காரரை மனித குல வரலாறு கண்டிருக்கிறது ,

நமது கனவுகளை கலைக்காமல் மேலும் மேலும் அக்கனவுகளில் ஊறி நம்மை மறந்து ஒரு சுகமான நம்பிக்கையில் நம்மை செலுத்தும் அறிஞர்களையும் ஏராளாமாக நாம் கண்டுள்ளோம்,
அநேகமான சமய அல்லது சமுக தலைவர்கள் பலரும் இந்த வகையை சார்ந்தவர்கள்தான் ,

இதில் யார் சரி அல்லது யார் தவறு என்பது அல்ல பிரச்சனை ,

கனவுகளை இறக்குமதி செய்யும் பலரும் தாங்கள் அந்த கனவுகளை நம்பி அதில் எதோ ஒரு புளகாங்கிதம் அடைந்து அதைபற்றி பிரசங்கம் செய்கிறார்கள் !

Friday, October 11, 2013

கடவுளை விட உடலே சிறந்தது ! எல்லா வாய்ப்புக்களையும் தந்திருப்பது எது ?

வாழ்க்கைக்குள் இருந்து கொண்டே வாழ்கையை திட்டிதீர்ப்பதை
என்னெவென்று சொல்வது?
வாழ்க்கை ஒரு பாபகரமானது அது ஒரு அசிங்கம் அது மிகவும் கேவலமானது போன்ற படு மோசமான அபிப்பிராயங்கள் மனிதர்களின் மனதிற்குள் விதைப்பது யார் ?
ஏதாவது ஒரு நல்ல நோக்கத்திற்காக எமது வாழ்வை நாமே அழித்து கொள்வது ஒரு ஒப்பற்ற தியாகம் என்று இல்லாத
ஊருக்கு போகும் வழியை காட்டுவது யார்?
ஒரு நியாயமான நோக்கத்திற்காக பிறரின் வாழ்வை அழிப்பது கூட மிகவும் உன்னதமான செயல் என்று இந்த மனித சமுதாயத்தை நம்ப வைப்பது யார்?
எமது வாழ்வை எமக்கு தரும் எமது உடல் ஒரு பெறுமதி அற்ற பொருள் என்றும் அதை நல்ல ஒரு காரியத்திற்காக நாசப்படுத்துவது தியாகம் என்றும் படு மோசமான மார்க்கத்தை போதிப்பது யார்?
எமது உடலை நாம் விரும்பக்கூடாது ! அதனுள் உறைந்து இருக்கும் அல்லது மறைந்து இருக்கும் பொருளே உயர்ந்தது எனவே நமது உடலை கூடுமானவரை அழகு படுத்தி ரசிப்பது வெறும் மாயை அது ஒரு பொருட்டே அல்ல என்பது போன்ற துர்போதனைகளை உபதேசிப்பவர்கள் யார்?

Wednesday, September 18, 2013

முட்டாள்தனத்தில் இருந்து விடுதலை பெறுங்கள் , அதுதான் உண்மையான விடுதலை

ஆண்டாண்டு காலமாக அடிமைத்தனத்தில் ஊறியவர்கள் சுயமாக
சிந்திக்கவும் சுயமாக சொந்த அபிபிராயங்களை உருவாக்கவும் தெரியாதவர்களாக இருக்கிறார்கள் . படித்தவர் பாமரர் பேதமின்றி  இந்த இரவல் சிந்தனை வியாதி நமது சமுகத்தில் வேரோடி போய்விட்டது. இந்த இழிநிலைக்கு எம்மை இட்டு சென்ற காரணிகளில் முதலாவது காரணியாக இருப்பது, எம்மீது அழுத்தமாக பதியப்பட்ட சமயம் சார்ந்த நம்பிக்கைகளாகும் , இரண்டாவது கலாசாரம் அல்லது அரசியல் போன்ற காரணிகளால் எம்மீது திணிக்கப்பட்ட கோட்பாடுகளாகும் .
எமது சுய சிந்தனை  மேற்காணும் காரணிகளால் பறிபோய் விட்டது என்பது ஒரு வேதனைக்குரிய உண்மையாகும் .
அதனால்தான் நாம் எதைகண்டு பயப்படுகிறோமோ அதையே கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கிறோம் , பயங்கரவாதிகளை நாம் ஆதரிப்பது அல்லது ரவுடிகளை  ஆதரிப்பது அல்லது பணக்காரனை ஆதரிப்பது எல்லாமே இந்த வியாதியினால்தான் .
நமது கல்விமுறை கூட ஓரளவு பயத்தை காட்டி பாடமாகும் முறையை தான் பின்பற்றுகிறது, இதன்காரணமாக நாம் சிறந்த வேலைக்காரர்களை உருவாக்குகிறோம் ஆனால் சிறந்த சிந்தனை யாளர்களை யோ அல்லது சுயமாக சிருஷ்டி செய்யும் ஆற்றல் உள்ள கலைஞர்களை அல்லது கவிஞர்களை பெரிது உருவாக்க முடியாமல் போய்விட்டது .
இந்த கல்வி முறை எமது பயம் சார்ந்த சமய கோட்பாடுகளிருந்து உருவாகி இருக்கவேண்டும் , ஏனெனில் இரண்டுமே மனிதர்களை வெறும் robot களாக தான் தயாரித்து உள்ளது .
மனிதருக்கு உரிய சுயம் என்ற ஒன்றை நாம் ஏற்று கொள்வதே இல்லை , அது மட்டுமல்ல சுயம் உள்ளவனை எமக்கு பிடிப்பதும் இல்லை ,
கும்பல்லை கோவிந்தா போட்டு ஊரோடு ஒத்து போகும் ஒரு சராசரி முட்டாளை தான் எமக்கு பிடிக்கும் , அவனே சிறந்த அறிவாளி என்றும் கூட எண்ணுவோம் , ஊரோடு ஒத்துபோகும் கலைதான் சிறந்தது என்பதுதான் எமது கோட்பாடு ,
சரி நாம் சுயமாக சிந்திக்காவிடில் உனக்கென்ன கேடு என்று நீங்கள் ஒருவேளை கேட்கலாம் ?
நமது கடந்த சரித்திரம் ஏன் படுமோசமாக இருந்தது என்பதற்கு பதிலை நீங்கள் இப்போது தேட வேண்டும் ,
இனியாவது சுயமாக தேடுங்கள் , உங்களுக்காக இன்னொருவர் சிந்திக்கும் முட்டள்தனத்தில் இருந்து விடுதலை பெறுங்கள் , அதுதான் உண்மையான  விடுதலை

Friday, July 26, 2013

எனது உறவு எனது சொந்தம் எனக்கே சொந்தமான LOVE ?


பரஸ்பரம் அன்பான
உறவுகள் மிகவும் இனிமையானவையாகும் , நாம்
அனுபவிக்கும் உறவுகள் பெரும்பாலும் பிறரை ஒரு கட்டுப்பாட்டு வளையத்திற்குள் வைத்திருக்க பயன்படும் தந்திரமாகவே கருதுகிறோம் . பெற்றோர் பிள்ளைகளுக்கு இடையே உள்ள உறவானாலும் அல்லது காதலன் காதலிக்கு இடையே உள்ள உறவாக இருந்தாலும் அவை பெருதும் ஒரு சுய நலம் அல்லது (possessiveness) எனது உறவு எனது சொந்தம் எனக்கே சொந்தமான பொருள் போன்ற ஒரு உணர்வின் அடிப்படையில் தோன்றும் காரணமாகவே இருக்கிறது,
இப்படி அன்பின் அடிப்படையே புரிந்து கொள்ளப்படாமல் வெறும் எனது பொருள் போன்ற உணர்வின் அடிப்படையில் உள்ள உறவுகள் உண்மையில் உறவுகளே அல்ல . நம்மில் பெரும்பாலோரின் உறவுகள் இப்படிதான் அமைந்து விடுகின்றது ,
நாம் விரும்பும் பொருள் எமக்கு கிடைக்காவிடின் நாம் ஆத்திரப்பட்டு அதை அழித்துவிடும் அளவுக்கு சென்று விடும் கொடுமை எல்லாம் இந்த possessiveness எனப்படும் சுயநலதினால் தான் உருவாகிறது ,
விலகிப்போகும் காதலிக்கு தீங்கு செய்வது , மகன் வாழ்வு கெட்டாலும் பரவாயில்லை போட்டியாக உள்ள மருமகளுக்கு பாடம் படிப்பிப்பது  போன்று ஏராளமான உதாரணங்களை கூற முடியும் ,
குடும்ப அமைப்பு முறை இறுக்கமாக இருப்பதாக தம்பட்டம் அடித்து கொள்ளும் ஆசிய ஆபிரிகக் நாடுகளில்தான் மனித உறவு முறைகள் எல்லாம் மிகவும் திரிபடைந்து மாசுபட்டு உள்ளது ,
குடும்ப பாரம்பரியம் என்ற பெயரால் எத்தனை கொடுமைகள்?
இந்த குடும்ப உறவு பெருமையை பற்றி  அதிகமாக பேசும் நாடுகளில்தான் கொடுமைகள் இன்னும் குறையவில்லை !
சக உறவினரை அல்லது நண்பரை தனது கட்டு பாட்டு வளையத்திற்குள் வைத்திருக்கவே அன்பு என்று கூறிகொள்ளும் ஒருவித பித்தலாட்ட possessiveness ஐ மனதின் அடியில் புதைத்து வைத்துள்ளார்கள் .

Thursday, July 11, 2013

ஆத்மீக போர்வையில் இருக்கும் ஆஸ்ப்ரின் மாத்திரைகளை தூக்கி எறியுங்கள்

அண்மைக்கால வரலாற்றில் தோன்றிய அறிவாளிகள் அல்லது ஞானிகள் என்று சொல்லப்படுபவர்களின் பட்டியலை எடுத்து கொண்டால் உண்மையில் அது ஒரு சிறிய பட்டியலாகதான் இருக்கும்,
போலி வரலாறுகள் தாராளமாக உண்டு ,   கவனத்தில் கொள்ள கூடிய அளவு முத்திரை பதித்தவர்கள் சிலரே,
அவர்களின் பாதைகள் விதம் விதமாக அமைந்துள்ளன,
எமக்கு ஏற்புடையதாக இல்லாதவிடத்தும் சிலரின் தேடல்களின் ஒரு நேர்மை இருந்தது உண்மையே.
யு.ஜி,கிருஷ்ணமூர்த்தி, ஜே,கிருஷ்ணமூர்த்தி போன்றவர்கள் எமது கவனத்தை சற்று கவர்ந்து உள்ளார்கள்
மனிதனின் பிறப்பு இறப்பு கடவுள் பிரபஞ்சம் போன்ற பெரிய பெரிய கேள்விகளுக்கு கொஞ்சமாவது உண்மையான பதிலை தேட வேண்டும் என்ற அவாவில் மிகவும் விஞ்ஞான பூர்வமாகவும் நேர்மையாகவும் ஆய்வு செய்தவராவர்.
உண்மையில் அவர்கள் எந்த ஒரு கேள்விக்கும் இதுதான் பதில் என்று கூறவே இல்லை என்றுதான் சொல்லவேண்டும் .
 கேள்விகளையே மீண்டும்  பதில்களாக அல்லது பதில்களையே மீண்டும் கேள்விகளாக மாற்றி நம்மை குழப்பிவிடும் கைங்கரியத்தையே செய்துள்ளனர் .
உண்மையில் ஏதாவது ஒரு பதிலை தேடும் எமது கேள்விகள் பெரும்பாலும் சரியான பதில் என்பலும் பார்க்க எமக்கு உகந்ததான பதிலையே எதிர்பார்த்து கேட்கப்படும் கேள்விகளாகும் ,
போலி பதில்கள் தற்காலிக ஆத்மீக வார்த்தைகள் போன்ற இனிப்புக்கள் எதுவும் கிரிஷ்ணமுர்த்திகளிடம் கிடையாது ,
கேள்விகளோடு வருபவர்களுக்கு இதோ நான் பதில் தர காத்திருக்கிறேன் என்று கடை விரித்து காத்திருக்கும் கள்ள சாமிகள் ஆசாமிகள் நிறைந்திருக்கும் உலகில்,
எந்த விதமான தாலாட்டு மருந்துகளும் கிடையாது,
மாறாக கேள்வி கேட்பவரை மேலும் பல கேள்விகள் கேட்க தூண்டும் படியான குழப்ப வேலைகளையே கிரிஷ்ணமுர்த்திகள் செய்தனர் . ஓஷோ கூட இதே போல தூக்கத்தில் இருப்பவரை தட்டி எழுப்பிவிடும் வேலையைத்தான் செய்தார் ,

Sunday, June 23, 2013

சகல சம்பவங்களுக்கும் எமக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்கும்

ஒரு சம்பவம் நிகழும் முன்பாக அந்த சம்பவம் நிகழ்வதற்கு  அத்திவாரமாக
பல சம்பவங்கள்  நடை பெறுவதை நாம் கவனித்திருப்போம் ,
உதாரணமாக மழை வரும் சில நேரத்திற்கு முன்பாக வானம் மேகமூட்டமாக இருந்திருக்கும்
எம்மை சுற்றி நடக்கும் சகல சம்பவங்களுக்கும் எமக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்கும் , அது மட்டுமல்ல இந்த பிரபஞ்சத்தில் நடக்கும் சகல நிகழ்வுகளும் ஒன்றோடு ஒன்று தொடர்பு உள்ளவையே.
நடைபெறும் சம்பவங்களை கோர்வை படுத்தி உற்று அவதானித்தால் இந்த பிரபஞ்சம் எப்படி இயங்குகிறது என்பதை ஓரளவு ஊகிக்க முடியும் ,
Science of Events . அடுத்தடுத்து நடைபெறும் சம்பவங்களை  கவனித்து ஓரளவு அதன் மூலம் எதிர்கால சம்பவங்களை அறிய கூடிய ஆற்றல் மனிதர்களுக்கு காலம் காலமாக இருந்திருக்கிறது . ஆனால் அந்த அறிவுக்கு நவீன விஞ்ஞானம் உரிய அந்தஸ்தை அளிக்க வில்லை . அதன் காரணமாகவே  அந்த விஞ்ஞானம் சோதிடம் சார்ந்த கலையாக அடையாளப்படுத்த படுகிறது,
உண்மையில் அது ஒரு Quantum Mechanism தான் ,
இங்கே நான் சம்பவங்கள் என்று குறிப்பிடுவது எம்மை சுற்றி நடக்கும் சகல சம்பவங்கள் மட்டுமல்ல, எமக்கு உள்ளே எமது மனதிற்கு நடக்கும் எண்ணங்களையும் சேர்த்து தான் என்பதை ஞாபகத்தில் கொள்ள வேண்டும் , இந்த விஞ்ஞானத்தை அறிந்த பல சோதிடர்கள் நடக்க இருக்கும் சம்பவங்களை சில வேளைகளில் சரியாகவே சொல்கிறார்கள் , ஆனால் என்ன அவர்கள் பெரும் பாலும் இந்த விஞ்ஞானத்தை ஏதோ ஒரு தெய்வீக அருள் போன்று பாவனை பண்ணுகிறார்கள் ,
இந்த  Science of Events  என்ற புதிய கருத்து விஞ்ஞானிகளிடையே தற்போது ஓரளவு ஏற்று கொள்ளபடுகிறது

Thursday, June 13, 2013

அன்பை வளர்க்காத Bhakthi Cult ஆமாம் சாமிகளையே வளர்த்தது

The modern definition of a mind control cult is any group which employs mind control and deceptive recruiting techniques. In other words cults trick people into joining and coerce them into staying. This is the definition that most people would agree with. Except the cults themselves of course!
கூடுதல் கூட்டம் குழு குலம் போன்ற  சொற்களில்  இருந்துதான்  cult என்ற ஆங்கில சொல் உருவானதோ தெரியவில்லை , இருக்கலாம்,
இந்த  Cult  எனப்படும் அமைப்புக்கள்  தமிழர்களின் வரலாற்றில் தாராளமாகவே காண கிடைக்கின்றது ,  அதிலும் குறிப்பாக கடந்த ஒரு சில ஆயிரம் வருடங்களில் இந்த cult கலாச்சாரம் அதிகமாக மேலோங்கி இருந்திருக்கிறது என்றே கருத வேண்டி உள்ளது , இதற்கு உதாரணமாக பல தகவல்களை கூறலாம் , தமிழர் இலக்கியங்களில் மன்னர்களை புகழ் பாடும் இலக்கியங்கள் எல்லாமே ஏறக்குறைய ஒரு cult கலாச்சாரத்தின் வெளிப்பாடு என்றே கருத வேண்டி இருக்கிறது ,
மன்னர்களையும் போர் வீரர்களையும் அளவுக்கு மீறி புகழ்வது வாந்தி வரும் அளவுக்கு இடம்பெற்று இருக்கிறது,
அவர்களை ஒரு தெய்வ ஸ்தானத்தில் வைத்து வழிபடும் கலாசாரம் வரலாற்றில் நீக்கமற நிறைந்திருக்கும்  சம்பவங்களை தாராளமாக காணலாம் .அந்த மன்னர்களையும் போர் வீரர்களையும் அல்லது செல்வந்தர்களையும் தெய்வ அவதாரங்கள் என்ற அளவில் புகழ்ந்து பாடும் எண்ணற்ற செய்திகள் நமது அடிமை மன நிலையை காட்டுகிறது என்றே கருத வேண்டி உள்ளது,
சில விதி விளக்குகள் உண்டு , குறிப்பாக களப்பிரர் காலத்தில் வெளிவந்ததாக கூறப்படும் சிலப்பதிகாரத்தில் மட்டும் சாதாரண மக்களின் மேன்மையை காட்டும் விபரங்கள் உள்ளன ,
அரசனின் அநியாய ஆட்சியை ஒரு சாதாரண பெண் துவம்சம் செய்த காட்சியானது அன்றைய Cult கலாசார பாரம்பரியத்திற்கு முற்றிலும் மாறான ஒரு செய்தியாக பதிவு செய்யப்பட்டு இருக்கிறது ,
இந்த ஒரே காரணத்திற்காகவே சிலப்பதிகாரத்தை ஒரு உலக புரட்சி நூலாக அறிவித்து விடலாம்.
இந்த CULT  பாரம்பரியம்தான் பிற்காலத்தில்  மக்கள் சுயமரியாதை இழந்து ஒரு அடிமை கூட்டமாக மாறியதற்கு காரணம் 
வல்லானின் காலடியில் தமிழர்கள்  எதோ  தாசிகளாக கிடந்ததாக  காட்டப்பட்டு  கொண்டிருந்த  இலக்கியங்களில்  சிலப்பதிகாரம் மட்டுமே சுயமாக சிந்திது தனது உரிமைக்காக போராடிய ஒரு கதாபாத்திரத்தை படைத்துள்ளது ,

Monday, May 27, 2013

சிஷ்யர்களை தேடி வலை வீசும் சாமியார்கள்.....

Atmospheric pollution is most harmless when compared to the spiritual and religious pollution that have
plagued the world.There is no such thing as 'knowledge' for the sake of knowledge. Knowledge is power. "I know. You don't know". ug krishnamurthi
அனேகமாக எல்லா சாமியார்களும் சமய வாதிகளும் உபதேசிகளும்  குருமார்களும் பிரசாரகர்களும்  அள்ளி வீசும் கருத்துக்கள் எதுவுமே அவர்களின் சொந்த கருத்துக்கள் அல்ல.
நியு ஏஜ் தத்துவங்கள் என்று கூறப்படும் விடயங்களும் சுய முன்னேற்ற புத்தகங்களில் இருந்து பெறப்படும் உளவியல் மற்றும் பிரபஞ்ச பற்றிய கருத்துக்களே ஆகும் .
அவை நல்ல கருத்துக்களே , யார் குற்றியாவது அரிசியாகட்டும் என்று பேசாமல் இருந்து விடலாம் தான் ,ஆனால் இந்த கூட்டத்திற்கு ஆள்பிடிக்கும் ஆத்மீக உபதேசிகள் எல்லாருமே நல்ல நல்ல கருத்துக்களை எல்லாம் தங்கள் சொந்த கருத்துக்கள் அல்லது அனுபவங்கள் போல பாவனை பண்ணி நடித்து விட்டு சிஷ்யர்களை நிரந்தர கத்துக்குட்டி அடிமைகளாக அல்லவா வைத்திருக்கிறார்கள்?
அத்தனை முடிச்சவிக்கிகளும் பெரும் பெரும் தத்துவங்களை சொல்லி கேட்போரை மயக்கி விட்டு இறுதியில் அவர்களின் பணத்தை எப்படியாவது பிடுங்கி விடுவார்கள் எனக்கு தெரிந்த அளவில் இன்று பிரபலமாக இருக்கும் அத்தனை ஆள்பிடி காரரும் இப்படித்தான் நித்தியானந்தா என்பவர் நன்றாக பேசுவார், எல்லாம் ஓஷோ மற்றும் தீபக் சோப்ரா அல்லது   வைன் டயர் மற்றும் நோர்மன் விஸ்டன் போன்றவர்களின் உபயம்
அடுத்தது அந்த ஜாக்கி வாசுதேவ் என்ற சாமியார், இவர் மனைவியை கொன்றதாக வழக்கு அப்படியே கிடப்பில் கிடக்க கடையை வெற்றி கரமாக திறந்து விட்டுள்ளார், பேசுவதில் ஒன்று கூட ஒரிஜினல் இல்லை , எல்லாம் ஓஷோ வின் second Hand matter தான் ,இவருக்கு ஒரு மகளும் பல பெண் சிநேகிதகளும் ஏராளமான சொத்துக்களும் உண்டு,

Friday, May 24, 2013

விரும்பாத trespassing? விரும்பாத வீட்டின் திறவுகோல்

Trespassing  என்பது பொதுவாக நாம் மற்றவரின் எல்லையை அனுமதி இன்றி
மீறுவது என்று பொருள்படும்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எல்லைகள் இருக்கிறது. ஒவ்வொருவரின் வாழ்வும் அவரது மனதிற்குள்ளும் மனதிற்கு வெளியேயும் இருக்கிறது.
சக மனிதர்களை நாம் துருவி துருவி ஆராய்வது என்பது உண்மையில் ஒரு மோசமான அத்து மீறல் ஆகும்,
ஒருவரின் மன ஓட்டங்களை கூட ஓரளவுக்கு மேல் நாம் ஆராய்வது ஒருவகை trespassing என்று சொல்லலாம்.
இயற்கையில் சகல எண்ணங்களும் செய்திகளும் ஓரளவு வெளிப்படையாகவே இருக்கின்றன என்பது ஒரு பேருண்மையாகும் ,
பிரச்சனை அது அல்ல,
நான் உண்மையில் சொல்ல வரும் விடயம் அதைவிட முக்கியமானது.
எவ்வளவு தூரம் பிறரின் விடயங்களில் ஆர்வம் காட்டுகிறோமோ அவ்வளவு தூரம் அவர்களது வாழ்வை நாம் வாழ முயற்சிக்கிறோம் என்று தான் அர்த்தமாகும் .
உதாரணமாக ஒரு விவசாயியை பற்றியே நாம் எண்ணிக்கொண்டும் ஆராய்ந்து கொண்டும் இருந்தால் நாம் ஓரளவு அந்த விவசாயியின் வாழ்வை ஒரு virtual ஆக வாழ முயற்சிக்கிறோம் என்றுதான் பொருள்.

Thursday, May 16, 2013

இல்லாத ஒன்றையல்லவா தேடவேண்டும்? எங்கும் இருப்பதை ஏன் காண முடிவதில்லை?

As quantum physics can now confirm, the universe we live in is not made up of solid objects but of energy and information. This discovery holds vast implications for understanding the nature of our world and in understanding the true source of vibrant health. It also means that it is possible to encapsulate all the concepts discussed in the world of holistic natural health into a single unified theory
இரசாயனம் பௌதீகம் விஞ்ஞானம் போன்று ஆத்மீகத்தையும் ஒரு தனியான
பாடப்புத்தகம் போன்று கருதுவது மிகவும் தவறான கோட்பாடு என்றெண்ணுகிறேன்,
செய்யும் தொழில், கற்கும் கல்வி, விளையாடும் விளையாட்டு மற்றும் அன்றாடம் நாம் வாழும் வாழ்க்கை போன்ற எல்லாவற்றிலும் கலந்து எதிலும் பிரிக்கவே முடியாமல் இருப்பது தான் ஆத்மீகம் ,
ஆனால் நாம் என்ன செய்கிறோம் ?
ஆத்மீகத்திற்கு அல்லது கடவுளுக்கு  என்று நேரமும் இடமும் ஒதுக்கி வைத்துள்ளோம் . இது எமக்கு மிகவும் வசதியான ஒரு ஏற்பாடாக பழகிவிட்டோம் ,
 உண்மையில் இந்த ஆத்மீகம் அல்லது கடவுள் என்ற சொற்பதங்கள் எல்லாமே ஒரு குழப்பங்கள் நிறைந்த bundle of ideas ஆக இருக்கின்றன , அவரவர்களுக்கு அந்த அந்த நேரங்களில் தோன்றும் கருத்துக்கள் எல்லாவற்றையுமே ஒரு கூடைக்குள் போட்டு தற்காலிக சுகம் காணும் மார்க்கமாகவே இருக்கின்றன,
உண்மையில் இந்த ஆத்மீகம் அல்லது கடவுள் என்ற பதங்கள் மிகவும் serious matters ஆனால் நாமோ இதை சற்று சீரியசாக அணுகுவதில்லை , எமக்கு தேவை ஒரு தற்காலிக அபினி அவ்வளவுதான் ,
யாரை கேட்டாலும் கடவுளை அல்லது ஆத்மீகத்தை தேடுவதாக ஒப்பு கொள்வார்கள் ,
இருக்கும் ஒன்றை ஏன் தேடவேண்டும் ?
இங்கேதான் லாஜிக் இடிக்கிறது .

Wednesday, May 15, 2013

அவன் ஏன் அற்புதம் ஏதும் நிகழ்த்தவில்லை ?

ஏதோ ஒரு காரணத்தால் அந்த  அதிகப்பிரசங்கிக்கு தான் யார்? இறந்த பின்பு
எங்கே போகிறோம் ? கடவுள் என்று உண்மையில் ஏதாவது ஒன்று உண்டா என்பது போன்ற உதவாக்கரை கேள்விகள் அடிக்கடி எழுந்துகொண்டே இருந்தன . புரிந்தும் புரியாமலும் பல பல நூல்களை படிப்பது பலவிதமான குருஜிக்கள் போன்றவர்களின் தத்துவங்கள் எல்லாம் ஓரளவு நுனிப்புல் மேய்ந்து பார்த்தான் ,
ஒரு சமயம் ஏதோ விளங்குவது போலவும் மறுபடி ஒன்றுமே புரியாமலும் காலங்கள் கழிந்தன.
சம்பவம் நடந்த அன்று அவன் வேலை முடிந்து அருகில் இருந்த ரயில் நிலையத்தில் வழக்கம்போல காத்திருந்தான் ,
மனம் ஏராளமான கேள்விகளை கேட்டுகொண்டே இருந்தது .
Not This Not This என்று மனம் காணும் பொருட்களை எல்லாம் மனத்தால் தூக்கி எறிந்து கொண்டிருந்தான் , இதுவும் எங்கேயோ அவன் படித்த ஒரு தியான மார்க்கம்தான் , நான் யார் என்ற கேள்விக்கு நான் இதுவா ? அல்ல இது என் உடம்பு , அப்படியானால் நான் என்று எண்ணி கொண்டிருக்கும் மனம்தான் அந்த நானா ? இல்லை இல்லை அது உன் மனம், இப்படியாக கை கால் விரல்கள் மற்றும் காணும் எல்லாவற்றையும் இது நானா ? என்று கேள்விமேல் கேள்வியாக கேட்டு அவை ஒன்றுமே நான் அல்ல Not This not this நாட் திஸ் என்று கேள்வியும் பதிலும் எல்லையில்லாமல் தொடர்ந்து கொண்டே சென்று இறுதியில் கேட்பதற்கு கேள்விகளே இல்லாமல் போய்விட்டது .

Tuesday, May 14, 2013

வாழ்க்கை அழகானது ஞானத்தை விட மேலானது Life is precious than enlightenment

 ஒருவன் அழகான ஒரு குட்டி  தீவில் இருந்து அதன் ரம்மியத்தை
ரசித்துகொண்டிருந்தான் .
அவனை சந்திக்கும் பலரும் வேறு ஒரு பெரிய கற்பனைக்கு எட்டாத அற்புத தீவை பற்றி புகழ்ந்து புகழ்ந்து பேசிகொண்டேயிருந்தர்னர் . அதைப்பற்றிய வர்ணனைகளால் நாளடைவில் அவனுக்கும் எப்படியாவது அந்த அற்புத தீவுக்கு செல்ல வேண்டும் என்று தோன்றி நாளடைவில் அது அவனது ஒரே நோக்கம் என்றாகி விட்டது ,
தான் குடியிருக்கும் குட்டி தீவின் எந்த அழகும் தற்போது அவனை கவர்வதில்லை, எப்போ அந்த அற்புத தீவை அடைவோம் என்ற ஒரே சிந்தனையில் காலம் கழிந்தது ,
பல நாள் விடா முயற்சியின் பின்பு அவனது எண்ணம் நிறைவேறக்கூடிய தருணம் வந்தது , அந்த அற்புத தீவுக்கு செல்லும் படகில் அவனும் ஏறிக்கொண்டான் , பலவிதமான கற்பனைகளுடன் இறுதியில் அந்த தீவை அடைந்ததும் விட்டான் ,
தனது நோக்கம் நிறைவேறிய மகிழ்ச்சியில் துள்ளி குதித்து ஆனந்தித்தான் ,
எல்லோரும் குறிப்பிட்டது போலவே அழகான மரங்கள் மலர்கள் சின்ன சின்ன மலை குன்றுகள் ஏராளமான பழவகைகள் கொண்ட அற்புத சோலைகள் எல்லாவற்றிலும் மேலாக அழகான மாந்தர்கள் என்று எல்லோரும் குறிப்பிட்ட நல்ல காட்சிகளையே அவன் கண்டான் ,
சில நாட்கள் தன்னை மறந்து தனது பழைய தீவின் சகல ரம்மியங்களையும் மறந்து இருந்தான் ,
எந்த விடயத்திற்கும் காலம் வேறு வேறு விதமான அர்த்தங்களை தந்து கொண்டிருக்கும் தானே ?

Sunday, May 12, 2013

வார்த்தைகளுக்கு வெளியே ஒரு அதிசயம் Words are not a Perfect Tools

வார்த்தைகளிலிருந்து விடுதலை என்ற  பதத்தை பற்றி கேள்வி 
பட்டிருக்கிறீர்களா ?
மிக மிக முக்கியமான  சமாச்சாரமே இதுதான் ,
எமக்கு  இன்னும் சரியாக புரியாத பல விஷயங்களுக்கு அதன்  அர்த்தங்களை குறிக்கும் விதமாக நாம் குறிக்கும் சொல் பிரயோகங்கள் பெரும்பாலும் அர்த்தமற்றவையே .
நாமே கற்பித்து கொண்ட பல  வார்த்தைகள்  அனேகமாக காலாவதியான அர்த்தங்களை சுமந்து கொண்டிருகின்றன
இதை பற்றி இனி நீங்கள் சற்று சீரியசாக சிந்திக்க வேண்டும் ,
ஒரு பொருளை விளங்க ஒரு லேபல் போன்று பயன்பட்ட சொற்கள் பின்பு
காலப்போக்கில் அந்த லேபெல்களே முழு முதற் பொருள் போன்ற தோற்றத்தை நாம் கற்பிதம் செய்து கொள்கிறோம்
ஒரு அர்த்தத்தை கொண்டிருக்கும் வார்த்தையானது வேறு ஒருவருக்கு வேறு ஒரு அர்த்தத்தை வழங்கி கொண்டிருப்பதை அறிவீர்களா ?
எதுவிதத்திலும் வார்த்தைகள் என்பது ஒரு Perfect கருவியே அல்ல ,
கடவுள் என்ற விவகாரத்தில் மட்டுமல்ல பொதுவிலேயே வார்த்தைகள் ஒரு அளவுக்கு உட்பட்ட தற்காலிக உபயோகத்தை மட்டுமே கொண்டுள்ளது ,
வாழ்வின் உன்னதமான பல தருணங்களில் நாம் வார்த்தைகள் அற்று மௌனமாகி விடுவதை நாம் கண்டிருக்கிறோம் அல்லவா ?

Saturday, May 11, 2013

நீங்களாகவே விளங்கி கொள்வதே நல்லது Knowing God is a Perfect Trick.

கடவுள் இருக்கிறாரா அல்லது இருக்கிறதா போன்ற கேள்விகளுக்குள்
செல்வது எந்த வகையிலும் ஈசியான சமாசாரம் அல்ல. கடவுள் நம்பிக்கையாளர்களும் மறுப்பாளர்களும் தங்களுக்கு தெரிந்ததாக தாங்கள் எண்ணிக்கொண்டு இருக்கும் கருத்துக்களை மிக இலகுவில் அள்ளி வீசிவிடுவர்.
இந்த பதில்கள் எல்லாமே ஒரு இரவல் பதில்கள்தான் என்பது அடியேனின் தாழ்மையான அல்லது மிகவும் கர்வமான அபிப்பிராயமாகும் .
யாரோ சொல்லிகொடுத்த அல்லது எங்கோ படித்த கருத்துக்களை தங்கள் சுய கருத்துக்களாக நம்பி கிளிப்பிள்ளை மாதிரி ஒப்படைத்து திருப்தி அடைவது காலா காலமாக நடக்கிறது .
உண்மை என்ன ?
அது என்ற ஒன்று உண்மையில் இருக்கிறதா என்பதைவிட.
 அது என்று எதை நாம் நினைகின்றோம் என்பது மிகவும் முக்கியமானது , எமது கேள்வி எப்போது ஒரு ஒரிஜினல் கேள்வியாக இருக்கிறதோ அப்போதே உண்மையான பதிலை அறிவது இலகு வாகிவிடும் .

Friday, May 3, 2013

Victim Syndrome மகிழ்ச்சியை வெளியே காட்டி கொள்ள பயம்


A condition in which a person uses their suffering, self-sacrifice, and role as a victim to manipulate others into psychologically rewarding them for their ongoing misery
எப்போதும் நாங்கள்
பாவிகள் அல்லது எங்களுக்கு ஏராளமான கஷ்டங்கள்
பிரச்சனைகள் உள்ளன என்பது  போன்ற மனநிலையில் தான் அனேகமாக நம்மவர்கள்  இருக்கிறார்கள் .
இப்படி ஓரளவு  ஒப்பாரி மனோபாவத்தில் இருப்பது மிகவும் பாதுகாப்பானது என்றும்  நம்மவர்கள் நம்புகிறார்கள் ,
அது ஏன் என்று எனக்கு புரியவில்லை?
 கோவில்களில் வழிபடும்போது ஏதோ எல்லாவறையும் பறிகொடுத்து அல்லல் படுபவர்கள்  போல  முகத்தை மிகவும் கடுமையாக வைத்துகொண்டு ஓரளவு சோகத்தையும் காட்டி கொண்டு கடவுளுக்கு தரிசனம் தருகிறார்கள்.
 இதுதான் கடவுளுக்கு பிடிக்கும் என்று நம்புகிறார்களோ?
இந்த அவதி முகபாவ வழிபாடு அல்லது துன்பத்தில் உழலும் முகபாவம்  கடவுளின் இரக்கத்தை பெற உதவியாயிருக்கும் என்று இவர்கள் உண்மையாகவே நம்புவதாக தெரிகிறது.
எல்லாம் இருந்தாலும் அதை வெளிகாட்டி கொள்ளாமல் இருந்தால் மேலும் மேலும் ஏராளாமான சலுகைகள் கடவுளிடம் இருந்து  கிடைக்கும் என்று நம்புமாறு இவர்களுக்கு யார் கற்று கொடுத்தது ?
கடவுள் நம்பிக்கை இருப்பதாக  கூறுபவர்கள் கூட  கடவுளிடம் எதோ கெஞ்சி கூத்தாடி தான் வரங்களை பெறவேண்டும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.
இவர்கள்  கடவுளிடம் கூட பின் கதவால் காரியம் சாதிக்க நினைக்கும் மன நிலையில் உள்ளனர் , இதில் இருந்தான் சமுக மோசடியே ஆரம்பிக்கிறது , இந்த பாதிக்கப்பட்டவன் வியாதி அதாவது Victim Syndrome எனப்படும் வியாதியால் அவதியுறும் மக்கள் தொகை மிகவும் அதிகமாகி விட்டதாக தோன்றுகிறது .
நன்றாக மழை பெய்தால் என்ன இப்படி மழைபெய்கிறதே என்று சோக போஸ் கொடுப்பதும்  பின்பு அதே மழை நின்றுவிட்டால் அடடா இந்த மழை போதாதே என்று பெரும் ஏமாற்ற மடிந்த மாந்தர் போல போஸ் கொடுப்பதும் பெரிய கூத்துதான் .

Monday, April 29, 2013

Thought level conversation மனதோடு மனம் பேச முடியுமா ? நிச்சயமாக!

நாம் அனேகமாக மறந்து விட்ட அல்லது தொலைத்து விட்ட எமது முதல்
சிறந்த கலைதான் மனதோடு மனம் பேசும் இயல்பு. 
மனிதர்கள் கண்டு பிடித்த கருவிகளிலேயே மிகவும் அற்புதமான கருவியாக
சொற்களைத்தான் கூறவேண்டும்.
சொற்கள் ஒரு மொழியாக பரிணாம வளர்ச்சி  முன்பே ஏராளமான செய்திகளை உணர்வுகளை சப்தங்கள் மூலமாக மனிதன் பரிமாறி கொண்டான் ,
ஆனால் சப்தங்களோ சொற்களோ மனிதானால் கண்டு பிடிக்க முதல் மனிதன் ஏனைய பிராணிகள் போல உள்ளுணர்வுகளால் மனிதனும் செய்திகளை  பரிமாறி கொண்டான் .
பின்பு மொழியறிவு வளர்ந்த பின்பு பாய்ச்சல் வேகத்தில் மனித சமுதாயம் முன்னேறி விட்டது .
இந்த முன்னேற்றத்தில் மனித குலம் ஏதாவது ஒன்றை இழந்து விட்டதா என்றால் ஆம் என்றே கூற கூடிய ஒரு உன்னதமான கலை அல்லது திறமை ஒன்றை குறிப்பிடவேண்டி உள்ளது.
மனதோடு மனம் பேசும் கலையை மனிதர்கள் ஒரு காலத்தில் பெற்றிருந்தார்கள்.
காலப்போக்கில் அந்த திறமை மறைந்து விட்டது . ஆனாலும் வெகு சிலர் தங்களின் சுய மேம்பாடு காரணமாக அந்த திறமையை பெற்றிருந்தார்கள் .

Sunday, April 28, 2013

Disempower உங்கள் சுயத்தை உங்களிடம் இருந்து பறிப்பவர்கள் உங்கள் அருகிலேயே

Disempower என்பது ஒருவருக்கு உரிய உரிமையை அல்லது சக்தியை நாம்
பறித்தெடுப்பது என்று கூறலாம்
இந்த சொல் Dis Em powering நமது சமுகத்தில்  மிக அழுத்தமாக மாற்றவே முடியாத அளவு அல்லும் பகலும் நடை பெரும் ஒரு சமாசாரம் தான் . அநேகமானோர் பிறருக்கு உதவி செய்கிறோம் பேர்வழி என்று உண்மையில் அவர்களது சுயத்தை பறிமுதல் செய்யும் காரியத்தை தான் செய்கிறார்கள் .
வாழைபழத்தை உரித்து வாயுக்குள் வைத்தல் உதவி அல்ல
கேட்ட உடனேயே அவற்றை நிவர்த்தி செய்து விடுவது உதவி அல்ல .
அவரே தனக்கு வேண்டிய வாழைப்பழத்தை தான் விரும்பிய நேரத்தில் தான் விரும்பிய விதத்தில் பிறரின் நேர்முக அல்லது மறைமுக வற்புறுத்தல் எது மின்றி உண்பதற்கு நாம் செய்யும் வசதிகளை தான் உதவி என்று கூற முடியும்
தனது சுயத்தை இழந்த மனிதரால் ஒரு போதும் நல்ல ஒரு படைப்பை  ஒரு போதும் உருவாக்கவே முடியாது . சுயம் இழந்த மனிதர் தனது சுயம் எது என்று தேடி திணறுவதிலேயே வாழ்வின் பெரும் பகுதி கழிந்து விடுகிறது .
இந்த சுயம் இழந்த மனிதர்கள் நல்ல வெற்றிகரமான மனிதர்களாக முடியாது என்று கூற முடியாது  .
ஏனென்றால் இங்கே வெற்றிகரமான மனிதர்கள் என்பது வெறும் வெளி தோற்றமாக மட்டுமே அறியப்படுகிறது .
உண்மையான மனிதவளர்ச்சி என்பது அவர் எந்த அளவு சுய சிருஷ்டி கர்த்தாக இருக்கிறார் என்று பார்க்க வேண்டும்
சுயம் இழந்தவர் அதிலிருந்து மீண்டு வரவே முடியாவிட்டால் அவர் ஒரு நல்ல படைப்பாளி ஆகவே முடியாது.

Saturday, April 27, 2013

Desensitization எமது மென்மையான உணரவுகளை மழுங்க அடிக்கும் ஊடகங்கள்

De Sensitization என்பதற்கு சரியான தமிழ் சொல் எனக்கு
தெரியவில்லை ,
ஓரளவுக்கு கூச்சம் தெளிதல் அல்லது குளிர் விட்டுப்போச்சு என்று பேச்சுவழக்கில் குறிப்படுவது போல என்று அர்த்தப்படுத்தி கொள்ளலாம் என்றெண்ணுகிறேன்.
உதாரணமாக ஒரு வன்முறை காட்சியை மீண்டும் மீண்டும் டீவியிலோ திரைப்படத்திலோ பார்த்துகொண்டிருந்தால் அதில் வரும் சம்பவங்கள்  நமக்கு மிகவும் பழக்கப்பட்ட சம்பவங்களாகிவிடும்,
சந்தர்ப் சூழ்நிலை மாறும்போது நாமும் அப்படிப்பட்ட செயல்களை செய்யக்கூடியவர்களாக மாறிவிடுகிறோம் .
ஏனெனில் சதா நாம் பார்க்கும் காட்சிகள் நமது நுண் உணர்வுகளை மழுங்க அடித்து விடுகின்றன .
அது மட்டுமல்ல மீண்டும் மீண்டும் நாம் பார்க்கும் காட்சிகளால் நாம் எம்மையும் அறியாமல் ஈர்க்கப்பட்டு விடுகிறோம் ,
அடிக்கடி வன்முறை படங்களை பார்த்துவிட்டு சிறுவர்கள் சட்ட விரோத காரியங்களில் ஈடுபடுவது அடிகடி நடைபெறுவதை நாம் காணக்கூடியதாக இருக்கிறது ,

Friday, April 19, 2013

புரியாத பெயர்கள் ! தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடு ? தன்னை தானே தாழ்த்தும் Identity Crisis

நம்மவர்கள்  தங்கள் குழந்தைகளுக்கு பெயர் வைக்கும்போது கூடுமானவரை 
எந்த வித அர்த்தமும் இல்லாத பெயர்களாக பார்த்து வைத்துவிடுகிறார்கள் , அதிலும் அந்த பெயர்கள் எந்த விதத்திலும் நமது மொழி கலாசாரம் மதம் போன்றவற்றை காட்டி கொடுத்துவிடக்கூடாது என்பதில் மிக ஜாக்கிரதையாக இருக்கிறார்கள் ,
உதாரணத்திற்கு ஏராளமான பெயர்களை கூற முடியும் , நிகொசன்  டிகொசன் லிகொசன் போன்று ஏதாவது கன்னா பின்னா என்று வைத்துவிடுகிறார்கள் ,
இந்த பெயர்களை கொண்டு யாரும் இக்குழந்தைகள் எந்த நாட்டை அல்லது எந்த இனத்தை சேர்ந்தவர்கள் என்று கண்டு பிடித்து விட முடியாது ,
சிலர் அதிஷ்ட விஞ்ஞானம் என்ற நியு மொராலாஜி யின் தாக்கம் என்றும் கூறுவார் இது ஓரளவு உண்மைதான் என்றாலும் மிகச்சரியான காரணம் வேறு ஒன்று இருக்கிறது
இது ஒருவகை உளவியல் பிரச்சனை .
தங்களை பற்றிய அளவு கடந்த தாழ்வு மனப்பான்மை  தங்கள் அடையாளங்கள் தங்கள் குழந்தைகளை பாதித்து விட கூடாது என்ற  Insecure உணர்வு தான் காரணமோ என்ற சந்தேகம் வருவதை தவிர்க்க முடியாது ,
தங்களை விட தங்கள் சமயம் பெரிது அல்லது கலாசாரம் பெரிது.
இது போன்ற ஏதோ ஒரு அடையாளம் தங்களைவிட பெரிது என்று நம்ப வைக்கப்பட்ட சமூகத்திடம் இந்த குணம் இருப்பது இயற்கையே , ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சுயசிந்தனையை புறந்தள்ளி நம்பிக்கையே நல்லது என்ற கோட்பாட்டினால்  வழிநடத்தப்பட்டு   .
சுயம் என்பதை அடியோடு இழந்து விட்ட ஒரு சமுதாயம்  தான் தனது அடையாளத்தையே  மிகவும் கேவலமாக நினைக்க முடியும்

Sunday, April 14, 2013

உங்கள் மனதை விட உங்கள் உடல் புனிதமானது

நமது உடலை விட மனம் மிக நுட்பமானது அல்லது உயர்ந்தது அல்லது தெய்வீகமானது என்பது போன்ற கருத்துக்கள் கோட்பாடுகள் எம்மனதில் ஆழமாக வேருன்றி இருக்கிறது .
இந்த விதமான கோட்பாடுகள் அனேகமாக மதங்களின் கண்டு பிடிப்பாக தான் இருக்கிறது அல்லது மதம் சார்ந்த கலாச்சார பின்னணியில் இருந்து உருவானவையாக இருக்கிறது .  இந்த கோட்பாடு எமது மனதில் எவ்வளவு தூரம் ஆழமாக பதிந்து உள்ளதோ அவ்வளவோ தூரம் எமது உடலுக்கு நாமே மிகபெரும் எதிரியாக நாம் நடந்து கொள்கிறோம் ,

பிற உயிரினங்களை விட மனிதர்களுக்கு நோய்கள் அதிகமாக வருவதற்கு இதுவே முக்கிய காரணியாக இருக்கலாம் என்று அறிஞர்கள் தற்போது சிந்திக்க தலைப்பட்டுள்ளார்கள் .

மனமே உயர்ந்தது உடல் தாழ்ந்தது என்ற நம்பிக்கை உடலின் சுய மரியாதையை இழக்க செய்து விடுகிறது .

என்ன அன்பர்களே உடலுக்கும் சுய மரியாதை இருக்கிறதா ? என்று நீங்கள் வியப்படைய தேவை இல்லை நிச்சயமாக இருக்கிறது .

Saturday, March 23, 2013

உன் உளவியல் இருப்பை அடிமை சாசனமாக கேட்கும் GURUJI

மனிதகுல வரலாற்றில் குரு பக்தி அல்லது குருவழிபாடு குரு மேன்மை போன்ற சமாச்சாரங்கள் எல்லா மதங்களிலும் காணப்படுகின்றது ,

அரசன் ஆண்டவன் குரு போன்ற சொற்கள் எல்லாமே அனேகமாக மனிதர்களின் பயத்தை அடிப்படையாக வைத்து அவர்களின் சுய தேடலை சிறுமை படுத்திய ஒரு சமாச்சாரமாகவே காணப்படுகிறது .

அறிவை பகிர்வதிலோ அன்பை பகிர்வதிலோ அல்லது மகிழ்ச்சியை பரிமாறுவதிலோ எந்த விதமான தவறும் இல்லை அவை அவசியமானதும் கூட .
ஆனால் உனக்கு நான் அறிவு தருகிறேன் பேர்வழி அதற்கு பிரதிகூலமாக நீ உனது உடல் பொருள் ஆவி எல்லாம்   என் முன்னே சமர்பிக்க வேண்டும் எதிர்பார்க்கும்  குரு அல்லது ஆண்டவன் அல்லது அரசன் எல்லாமே எமக்கு உண்மையில் சரியான வழியை காட்டவில்லை .

இந்த பிரபஞ்சத்தில் உள்ள எல்லா ஜீவராசியும் தங்கள் வாழ்வுக்கும் இருப்புக்கும் உரிய சகல தன்மைகளுடனேயே பிறந்து இருக்கின்றன ,

அதை மறுக்கும் வேலையை தான் அநேகமான குரு என்பவர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள் , சுயசிந்தனை செய்வதே ஏதோ ஒரு பாபகரமான காரியம்போல் அடிமைத்தனத்தை போதிக்கிறார்கள். உடல் ரீதியான அடிமைதனத்தையோ அல்லது பொருள் ரீதியான அடிமைதனத்தையோ விட உளவியல் ரீதியான அடிமைத்தனமே மோசமானது . இந்த புத்திரீதியான அடிமைத்தனம் intellectual slavery படித்தவர் பாமரர் பேதமில்லாமல் எங்கும் நீக்கமற நிறைந்து இருக்கிறது .
சுயமாக தன்னைபற்றிய சுயதேடலுக்கு மிகவும் பயப்படும் அடியவர்கூட்டமாக மனிதர்கள் பலரையும் மாற்றிவிட்டார்கள் இந்த குரு சாயம் பூசிய கபட வேடதாரிகள் 

ஆத்மீக குரு என்று தன்னை தானே விளம்பரப்படுத்தி கொள்ளும் அத்தனை குருமாரும் தாங்கள் ஏதோ எல்லாவிடயத்திலும்  ஒரு பிறப்புரிமை அல்லது ஒரு விதமான தெய்வீக உரிமை கொண்டவர்கள் என்று  எண்ணிக்கொண்டு ஒரு சர்வாதிகாரியாக நடந்து கொள்கின்றனர்  

 செயற்கையாக பாவனை பண்ணிகொண்ட ஒரு சாந்தம் ஒரு செயற்கையான புன்னகை போன்ற சகல மேனா மினுக்கி தனங்களோடு சதா எத்தனை சிஷ்யர்கள் அல்லது அடியவர்கள் வருகிறார்கள் என்று தணியாத தாகத்தோடு இருக்கும் இந்த குருமார்கள் தங்கள் ego வை திருப்தி படுத்த சதா வாடிக்கையாளர்களை   தேடி அலைகின்றனர் .
உண்மையான குருவே இல்லையா என்று நீங்கள் கேட்பது புரிகிறது ,
இந்த பரந்த விரிந்த உலகத்தில் எல்லாமே ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்து ஒன்றோடு ஒன்றுக்கு உதவி புரிந்தே தமைந்து இருப்பை தக்க வைத்து கொள்கின்றன .
அறிவை பகிரும் ஆற்றலை நுட்பத்தை சகல ஜீவராசிகளும் தங்களுக்கு பொது மான அளவில் இயல்பாகவே கொண்டுள்ளன,
ஒரு மரத்தை விட நீ ஒன்றும் பெரிய புத்திசாலி இல்லை என்பதை புரிந்து கொள்ளவேண்டும்
மரமானது தனக்கு தேவையான அறிவுடனும் ஆற்றலுடனும் தான் அவதரித்து தன இருப்பை தக்க வைத்து வாழ்கிறது . அதுபோலவே நீயும் உனக்கு தேவையான அறிவுடனும் ஆற்றலுடனும் அவதரித்து உன் இருப்பை தக்கவைத்து வாழ்கிறாய் .நீயா பெரிது அல்லது மரமா பெரிது என்று ஒன்றும் இல்லை நீயும் பெரிதுதான் மரமும் பெரிதுதான்.

Monday, March 11, 2013

தற்செயலாக எதுவும் நடப்பதில்லை!

ஒன்றோடு ஒன்று தொடர்புடைய நிகழ்சிகள் ஒரு போதும் தற்செயலாக நடைபெறும் நிகழ்வுகளே அல்ல.
பிரபஞ்சம் ஒரு ஒழுங்கு முறையில் தான் இயங்குகிறது . ஒரு சம்பவம் நடை பெரும் முன்பாக அந்த சம்பவம் தொடர்பான பல சம்பவங்கள் நடை பெறுவதை நாம் அவதானிக்கலாம் 
எம்மை சுற்றி நடக்கும் சம்பவங்களின் தன்மைகளை நாம் உற்று அவதானித்தால் அவை எமது சாதாரண அறிவுக்கு புலப்படாத ஒரு வரையறுக்கப்பட்ட ஒழுங்கை நோக்கி இயங்குவதை காணலாம் ,
இதற்க்கு ஏராளாமான உதாரணங்கள் எல்லோரினதும் வாழ்வில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகளாகும் . ஆனால் என்ன நாம் அனேகமாக அவற்றை நுட்பமாக அவதானிப்பதில்லை 
உதாரணமாக மாம்பழத்தை பற்றிய எண்ணம் உருவான சில சமயங்களில் உண்மையாகவே எமது கைக்கு ஒரு மாம்பழம் கிடைக்ககூடும் அல்லது யாரவது ஒருவர் மாம்பழத்தை வைத்திருக்கும் காட்சியை நாம் காணக்கூடும் எப்படியாவது அது சம்பந்தமான செய்திகள் எதோ ஒரு விதத்தில் தொடர்பாக நடை பெறக்கூடும் 
இவை போன்ற பல சம்பவங்களை நாம் அவதானிக்கலாம் . இந்த பிரபஞ்சம் ஒவ்வொரு சிறிய நிகழ்வுகளிலும் மிக சரியான திட்டமிடல் அடிப்படையிலேயே நடைபெறுகிறது 
ஏறக்குறைய எல்லோருக்கும் தெரிந்தத மிக பெரும் விடயங்களை ஆராய்வது மிக எளிதாக இருக்கும் என்று எண்ணுகிறேன் .
இயற்கை அழிவுகள் நடக்கும் நாடுகளில்  அவை நடப்பதற்கு சில நாட்களில் முன்பாக அல்லது பின்பாக பல விதமான அரசியல் குழப்பங்கள் நடைபெறுவது நாம் அறிந்ததே .
மனிதர்களின் மனதில் உண்டாகும் எண்ணங்களே நாடுகளின் அல்லது சமூகங்களின் தலைவிதியை எழுதுகின்றன 
எந்த விதமான எண்ணங்கள் எம்மை காந்தம் போன்று இழுக்கின்றனவோ அந்தவிதமான சம்பவங்களும் எம்மை நோக்கி வருவது நிச்சயம் 
தற்செயலாக எதுவும் நடப்பதில்லை 
எல்லாவற்றிக்கும் ஒன்றோடு ஒன்று தொடர்பாகவே நடக்கின்றன 
எமது மனம்தான் மிக பெரிய கம்ப்யூட்டர் . அதுவும் வாழ்க்கை என்னும் தொழிற்சாலையில் உற்பத்தி ஸ்தானத்தில் கம்பீரமாக வேலை செய்யும் திறமைசாலி 
மனம் விரும்பி நினைப்பது மட்டும் அல்லாமல் விரும்பாமல் ஏனோ தானோ வென்று காரணமே இல்லாமல் நினைப்பதையும்கூட செயல் வடிவமாக நடத்தி காட்டும் பொல்லாத மிக பெரும் பலசாலிதான் எமது மனம் .
எம்மை நோக்கி வரும் சம்பவங்கள் எல்லாமே சரியான சிக்னல்களை காட்டி விட்டே வருகின்றன .
ஆனால் அந்த சிக்னல்களை புரிந்து கொள்ளும் ஆற்றல் நம்மிடம் எவ்வளவு தூரம் உள்ளது?
அந்த ஆற்றலை வளர்க்க உண்மையில் விரும்பினால் நிச்சயம் முடியும் 

Tuesday, March 5, 2013

Intellectual laziness சாமியார்கள் குருமார்கள் வழிகாட்டிகள்

All these godman, gurus and flunkies are offering us a new oasis. You will find out that it is no different from other mirages. .U,G,Krishnamurthi

சதா குரு  பக்தி!   அளவிட முடியாத நம்பிக்கை...போன்ற போதை வஸ்துக்களை ஏறக்குறைய எல்லா சாமியார்களும் எல்லா சமய குருமார்களும் சதா போதித்த வண்ணமே உள்ளனர் . இதில் உள்ள மர்மம் தான் என்ன?
வேறொன்றும் இல்லை இந்த குரு பக்தி ரசிகர்மன்றங்கள் தங்கள் வாழ்க்கையை வசதியாக கொண்டு செல்ல இந்த நம்பிக்கை என்ற மோசடிதான் காலா காலமாக கையாளும் தந்திரமாகும்.
சிலர் நிஜமாகவே இந்த கண்மூடி தனமான நம்பிக்கை நல்லது என்று நம்புகின்றனர் . ஆனால் அடிப்படையில் இது ஒரு தற்காலிக ஏற்பாடாக அல்லது ஒரு திரபி என்று எடுத்து கொள்ளலாமே தவிர இது ஒரு சரியான வழி என்று கொள்ளவே முடியாது .
இந்த குருட்டு நம்பிக்கைதான் மனிதகுலம் முழுதும் பல பயங்கர அழிவுகளுக்கும் மோசடியகளுக்கும் காரணமாக இருந்து இருக்கிறது
மனிதர்களை சுயமாக சிந்திக்க விடாது தமது காரியத்தை சாதித்து கொள்ளும் சாமியார்கள் குருமார்கள் வழிகாட்டிகள் போன்றோர் சதா குரு பக்தி போன்ற ரசிகர்மன்ற வியாதிகளை பரப்பும் துஷ்டர்களாக இருக்கின்றனர் .
இன்று பிரபலமான ஒரு குரு அல்லது சாமியார் அல்லது வழிகாட்டி என்றால் அவரிடம் விமானங்கள் முதல்கொண்டு ஏராளமான சொத்துக்கள் இருக்கும் . கேட்டால் அவற்றிக்கும் ஏதாவது பித்தலாட்ட பதில்களை வைத்திருப்பார்கள் , அவர்களின் சீடர்களிடமோ பேசவே முடியாது . நன்றாக மூளை கழுவப்பட்டு தமது  குரு/ரசிகர் மன்ற வழிகாட்டியை எல்லை கடந்து பாதுகாப்பார்கள் . இந்த மாதிரி பாமர மக்கள் உண்மையில் மிகவும் பரிதாபத்திற்கு உரியவர்கள்தான் .
தமது சுய புத்தியை பாவிக்க மறுத்து சதா எதோ ஒரு முடிச்சவிக்கியின் பின்னால் படித்தவர் படிக்காதவர் பேதமின்றி தமது வாழ்வின் பெரும் பகுதியை வீணாக விரயமாக்குகிறார்கள்
இவர்களை  சுயமாக சிந்திப்பது பாப கரமான செயலென்றும் எந்த கேள்வியும் கேட்காமல் நம்புவதே புண்ணியம் என்றும்  நம்ப பண்ணிவிட்டார்கள் .
 இது ஒரு சிந்தனை சோம்பேறிதனம் என்று இவர்களுக்கு புரிய வைப்பது மகா கடினம் .