Friday, November 9, 2012

உங்கள் தலை எழுத்தை நீங்களே எழுதுகிறீர்கள்

உங்கள் மனதிற்குள் வந்து   போகும் ஒவ்வொரு சின்னஞ்சிறு எண்ண துளிகளும் உங்களுக்குள் வெறும் ரசாயன மாற்றங்களை மட்டுமல்ல உங்கள் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு விடயங்களையும் உருவாக்குவது இந்த எண்ணங்களே.
இதில் நாம் மிகவும் கவனிக்க வேண்டிய விடயம் எம்மை அறியாமலே எமது மனத்தின் உள்ளே வந்து குடியிருக்கும் எண்ணங்கள் எல்லாமே சதா வாழ்வின் நிதர்சனங்களாக உருமாரிகொண்டிருக்கின்றன.
பெரும்பாலும் நம்மால் விரும்பப்படாத விபத்து துன்பம் போன்ற விடயங்களையே பற்றியே  நாம் பெருதும் எண்ணுகிறோம் . சந்தேகமே இல்லாமல் அந்த விரும்பத்தகாத சம்பவங்கள் நிச்சயமாக எம்மை நோக்கி வருகின்றன .
இது மிகவும் ஆபத்தான உண்மை. இது புரியாமல் தான் நாம் சதா பிரச்சனைகளில் சிக்கி கொள்கிறோம்.
எதை எண்ணுகிறோமோ அதை எம்மை நோக்கி இழுப்பது எமது எண்ணந்களே.
எமக்கு தெரிந்த எமது எண்ண ங்களும் எமக்கே தெரியாமல் எமது எண்ணத்திற்குள் புகுந்து விட்ட எண்ணங்களுமே எமது தலை எழுத்தை எழுதுகின்றன.
இது ஒரு நிச்சயமான விஞ்ஞான உண்மையாகும்

No comments: