Sunday, June 23, 2013

சகல சம்பவங்களுக்கும் எமக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்கும்

ஒரு சம்பவம் நிகழும் முன்பாக அந்த சம்பவம் நிகழ்வதற்கு  அத்திவாரமாக
பல சம்பவங்கள்  நடை பெறுவதை நாம் கவனித்திருப்போம் ,
உதாரணமாக மழை வரும் சில நேரத்திற்கு முன்பாக வானம் மேகமூட்டமாக இருந்திருக்கும்
எம்மை சுற்றி நடக்கும் சகல சம்பவங்களுக்கும் எமக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்கும் , அது மட்டுமல்ல இந்த பிரபஞ்சத்தில் நடக்கும் சகல நிகழ்வுகளும் ஒன்றோடு ஒன்று தொடர்பு உள்ளவையே.
நடைபெறும் சம்பவங்களை கோர்வை படுத்தி உற்று அவதானித்தால் இந்த பிரபஞ்சம் எப்படி இயங்குகிறது என்பதை ஓரளவு ஊகிக்க முடியும் ,
Science of Events . அடுத்தடுத்து நடைபெறும் சம்பவங்களை  கவனித்து ஓரளவு அதன் மூலம் எதிர்கால சம்பவங்களை அறிய கூடிய ஆற்றல் மனிதர்களுக்கு காலம் காலமாக இருந்திருக்கிறது . ஆனால் அந்த அறிவுக்கு நவீன விஞ்ஞானம் உரிய அந்தஸ்தை அளிக்க வில்லை . அதன் காரணமாகவே  அந்த விஞ்ஞானம் சோதிடம் சார்ந்த கலையாக அடையாளப்படுத்த படுகிறது,
உண்மையில் அது ஒரு Quantum Mechanism தான் ,
இங்கே நான் சம்பவங்கள் என்று குறிப்பிடுவது எம்மை சுற்றி நடக்கும் சகல சம்பவங்கள் மட்டுமல்ல, எமக்கு உள்ளே எமது மனதிற்கு நடக்கும் எண்ணங்களையும் சேர்த்து தான் என்பதை ஞாபகத்தில் கொள்ள வேண்டும் , இந்த விஞ்ஞானத்தை அறிந்த பல சோதிடர்கள் நடக்க இருக்கும் சம்பவங்களை சில வேளைகளில் சரியாகவே சொல்கிறார்கள் , ஆனால் என்ன அவர்கள் பெரும் பாலும் இந்த விஞ்ஞானத்தை ஏதோ ஒரு தெய்வீக அருள் போன்று பாவனை பண்ணுகிறார்கள் ,
இந்த  Science of Events  என்ற புதிய கருத்து விஞ்ஞானிகளிடையே தற்போது ஓரளவு ஏற்று கொள்ளபடுகிறது

Thursday, June 13, 2013

அன்பை வளர்க்காத Bhakthi Cult ஆமாம் சாமிகளையே வளர்த்தது

The modern definition of a mind control cult is any group which employs mind control and deceptive recruiting techniques. In other words cults trick people into joining and coerce them into staying. This is the definition that most people would agree with. Except the cults themselves of course!
கூடுதல் கூட்டம் குழு குலம் போன்ற  சொற்களில்  இருந்துதான்  cult என்ற ஆங்கில சொல் உருவானதோ தெரியவில்லை , இருக்கலாம்,
இந்த  Cult  எனப்படும் அமைப்புக்கள்  தமிழர்களின் வரலாற்றில் தாராளமாகவே காண கிடைக்கின்றது ,  அதிலும் குறிப்பாக கடந்த ஒரு சில ஆயிரம் வருடங்களில் இந்த cult கலாச்சாரம் அதிகமாக மேலோங்கி இருந்திருக்கிறது என்றே கருத வேண்டி உள்ளது , இதற்கு உதாரணமாக பல தகவல்களை கூறலாம் , தமிழர் இலக்கியங்களில் மன்னர்களை புகழ் பாடும் இலக்கியங்கள் எல்லாமே ஏறக்குறைய ஒரு cult கலாச்சாரத்தின் வெளிப்பாடு என்றே கருத வேண்டி இருக்கிறது ,
மன்னர்களையும் போர் வீரர்களையும் அளவுக்கு மீறி புகழ்வது வாந்தி வரும் அளவுக்கு இடம்பெற்று இருக்கிறது,
அவர்களை ஒரு தெய்வ ஸ்தானத்தில் வைத்து வழிபடும் கலாசாரம் வரலாற்றில் நீக்கமற நிறைந்திருக்கும்  சம்பவங்களை தாராளமாக காணலாம் .அந்த மன்னர்களையும் போர் வீரர்களையும் அல்லது செல்வந்தர்களையும் தெய்வ அவதாரங்கள் என்ற அளவில் புகழ்ந்து பாடும் எண்ணற்ற செய்திகள் நமது அடிமை மன நிலையை காட்டுகிறது என்றே கருத வேண்டி உள்ளது,
சில விதி விளக்குகள் உண்டு , குறிப்பாக களப்பிரர் காலத்தில் வெளிவந்ததாக கூறப்படும் சிலப்பதிகாரத்தில் மட்டும் சாதாரண மக்களின் மேன்மையை காட்டும் விபரங்கள் உள்ளன ,
அரசனின் அநியாய ஆட்சியை ஒரு சாதாரண பெண் துவம்சம் செய்த காட்சியானது அன்றைய Cult கலாசார பாரம்பரியத்திற்கு முற்றிலும் மாறான ஒரு செய்தியாக பதிவு செய்யப்பட்டு இருக்கிறது ,
இந்த ஒரே காரணத்திற்காகவே சிலப்பதிகாரத்தை ஒரு உலக புரட்சி நூலாக அறிவித்து விடலாம்.
இந்த CULT  பாரம்பரியம்தான் பிற்காலத்தில்  மக்கள் சுயமரியாதை இழந்து ஒரு அடிமை கூட்டமாக மாறியதற்கு காரணம் 
வல்லானின் காலடியில் தமிழர்கள்  எதோ  தாசிகளாக கிடந்ததாக  காட்டப்பட்டு  கொண்டிருந்த  இலக்கியங்களில்  சிலப்பதிகாரம் மட்டுமே சுயமாக சிந்திது தனது உரிமைக்காக போராடிய ஒரு கதாபாத்திரத்தை படைத்துள்ளது ,