Monday, October 28, 2013

முடிவான அபிப்பிராயங்கள் சிருஷ்டிக்கு எதிரானவை ! never approve or disapprove before starting the process

There are in fact two things, science and opinion; the former begets knowledge, the latter ignorance.”
― Hippocrates
 I never approve or disapprove of anything now !  Is is an absurd  attitude to take  towards LIFE . Oscar Wild

ஒரு  அனுபவத்தை 
அடைய தொடங்கும் முன்பே அது பற்றி அளவுக்கு
அதிகமாக  அபிப்பிராயங்களை  உருவாக்கி கொள்ளும்  பழக்கம் நம்மில் 
ஓரளவு இருக்கிறது,
இது  பாலகாண்டம் ஆரம்பிக்கையிலேயே  சமாதி காண்டத்தை  வாசிப்பது போன்றது,
இறுதி அத்தியாயத்தை முதலில் படித்து விட்டால் பின்பு  ஆரம்பத்தில் இருந்தே படிக்க வேண்டிய  அவசியம்  அவ்வளவாக இருப்பதில்லை ,
இந்த பிரபஞ்சமும் அப்படித்தான் இயங்குகிறது,
இங்கே முடிவுரையாக வருவது எமது  அதீதமான அபிப்பிராங்களும் அதன் காரணமாக நாம்   கொண்டிருக்கும் பழக்கவழக்கங்களும்தான்.
முதலிலேயே ஒன்றை தெரிந்து கொள்வோம் , வாழ்க்கை என்பது  ஒரு process அதாவது  அது ஒரு இயக்கம் , இன்னும் சரியாக சொல்லப்போனால் ஒவ்வொரு கணமும்  வாழ்வானது தன்னை தானே சிரிஷ்டித்துகொண்டு இருக்கிறது,
அதன் சிருஷ்டிக்கு  ஆதார விதையாக இருப்பது எமது மனதில் சதா   எழுந்த வண்ணம் உள்ள எண்ணங்களே ,
சிருஷ்டிக்குரிய  எண்ணங்கள் உருவான அடுத்த கணமே அந்த சிருஷ்டியின்  விளைவாக வரவேண்டிய  இறுதி  பயன் பற்றிய எமது  அபிப்பிராயங்கள்  அந்த சிருஷ்டியின் நோக்கத்தை  சிறுமை படுத்தி விடுகிறது.
அதாவது  ஆரம்பத்தில்  எதிர்பார்த்த  விளைவை இறுதியில்  அனுபவிக்க முடியாமல் போய் விடுகிறது, அபிப்பிராயங்கள் தீர்மானங்களும் உண்மையில் இரண்டு வேறு பட்ட விடயம்தான் , ஆனால் பல சமயங்களில் அவற்றிக்கு இடையே உள்ள இடைவெளி அவ்வளவு தெளிவாக இருப்பதில்லை .
மேலோட்டமான அபிப்பிராயங்கள்  காலப்போக்கில்  எமது குணாதிசயங்களை பொறுத்து அவை முடிவான தீர்மானங்கள் ஆகிவிடுவதுண்டு ,
அவை வெறும் அபிப்பிராயங்களாக இருக்கும் வரைக்கும் பெரிதாக ஒரு தாக்கத்தை அன்றாட வாழ்வில் உண்டாக்காது , அந்த அபிப்பிராயங்கள் ஒரு அழுத்தம் பெற்று ஒரு முடிவான அபிப்பிராயங்களாகி விடும் பொழுது அவை ஒரு வலிமையான உணர்ச்சியாக அல்லது சக்தியாக மாறிவிடுகிறது ,
பெரும் பாலும் எதற்கெடுத்தாலும்  அபிப்பிராயம் மேற்கொள்வது  எமது உலகத்தை  சின்னஞ்சிறிதாக்கி விடும்,
எமது மனதில் உருவாகும் எந்த ஒரு அபிப்பிராயமும் பூரணமான ஒரு சத்தியமாக இருப்பதில்லை, அது மிகவும் அபூர்வமாகவே சம்பவிக்கும்.

எமது சமுதாயம் சமயம் சார்ந்து உருவாக்கப்பட்டதாகவே காணப்படுகிறது ,
அதாவது யாரோ எப்போ  உருவாக்கி வைத்த கோட்பாடுகளை இந்த  நவீன யுகத்திலும்  கண்ணை மூடிக்கொண்டு சார்ந்து இருக்கிறோம் .

மேலை நாடுகள் பலவும் தங்களது சமய சார்ந்த சிந்தனைகளை விட்டு சற்று வெளியே வந்து விட்டன .  Darwin  கலிலியோ  முதலானோர் அடித்த அடியில் அவர்கள் தூக்கத்தை விட்டு எழுந்து விட்டார்கள்.
பரந்த இந்த உலகத்தை மட்டுமல்ல முழு பிரபஞ்சத்தையுமே  விஞ்ஞான அறிவின் மூலம் கண்டறிய தொடங்கி விட்டன,
மேற்கு நாடுகளின் அறிவியல் முதிர்ச்சி காரணமாக அவர்கள் எதையும் ஆராய்ந்து சீர் தூக்கும் பண்பை வளர்த்து கொண்டுள்ளார்கள் என்றே கூற வேண்டும்,
எதிலும் ஒரு விஞ்ஞான ரீதியான பார்வையும் அறிவியல் ரீதியான அணுகு முறையும் அவர்களிடம் வளர்ந்து உள்ளதை யாரும் மறுக்கவே முடியாது ,

நாம் அவர்கள் கண்டு பிடித்த எந்த விஞ்ஞான உண்மையையும் உடனே அது எமது முன்னோர்கள் ஏற்கனவே கண்டு அறிந்ததுதான் என்று அதற்கு உரிமை கொண்டாடிவிடுவோம் ,
நமது முன்னோர்கள் உண்மையிலேயே அவற்றை அறிந்திருந்தார்களா என்பது அல்ல பிரச்சனை ,
நாம் அறிந்திருந்தோமா என்பதே கவனத்தில் கொள்ள வேண்டிய விடயம்.

நாம் எல்லாவற்றிகும் முடிந்த முடிபான ஒரு அபிப்பிராயத்தை வைத்திருப்போம் .
அவற்றில் இருந்து மாறவே மாட்டோம் ,
எமது அளவு கடந்த அபிப்பிராயங்கள் அல்லது தீர்மானங்கள் போன்றவை எம்மை புதிதாக எதையுமே பார்க்க விடாமல் தடுத்து விடுகின்றன ,

அபிப்பிராயங்களும் தீர்மானங்களும் சம்பவங்களின் ஒரு இறுதி அத்தியாயங்களாகும் .
ஒரு ஐஸ்கிரீமை உண்ணும் முன்பே அது இப்படித்தான் இருக்கும் என்ற அழுத்தமான அபிப்பிராயம் அல்லது தீர்மானம் கொண்டு விட்டால்  அந்த ஐஸ்கிரீம் ஒரு புதிய சுவையை தராது .
அது உணமையில் என்ன விதமான சுவையை அல்லது விசேஷ சிறப்பை கொண்டுள்ளது என்று எமக்கு விளங்காமலே போய்விடும்,

தனது சிறப்பை வெளிக்காட்டுவதற்கு  ஐஸ்கிரீமுக்கு நாம் சந்தர்ப்பம் வழங்கவே மாட்டோம் ,

எல்லாம் எமது அபிப்பிராயப்படியே இருக்கும் என்ற எமது பிற்போக்கு சிந்தனை எமக்கு ஒரு பெரிய சிறையை வழங்கியுள்ளது .

தத்துவார்த்த விஞ்ஞான அடிப்படையில் எமது அபிப்பிராயப்படி அல்லது எமது தீர்மானத்தின் படி நிச்சயமாக சம்பவங்கள் அல்லது அனுபவங்கள் இருக்காது ,

எப்படியும் ஏதாவது ஒரு எதிர்பாராத வித்தியாசம் இருந்தே தீரும் , ஆனால் எமது துருப்பிடித்த அபிப்பிராயம் அந்த வித்தியாசத்தை உணர தடையாகி விடுவதுண்டு,
 ஒரு சம்பவம் நடை பெறுவதற்கு காரணமும் அதன் காரணமாக உருப்பெற்ற இயங்கு சக்தியும் ஒருமித்து சுயமான ஒரு சிருஷ்டி நடைபெறும் பொழுதுதான் அந்த சம்பவம் நிதர்சனமாகிறது ,
காரணம் எமது மனதில் இருப்பது !
அந்த மனதால் தூண்ட்டப்பட்ட இயங்கு சக்திக்கு நாமே எதிர்மறையான காரணத்தையும் கொடுத்துவிட்டால் அது முதலில் எதிர்பார்த்தது போல நடைபெறாமல் போய்விட வாய்ப்புகள் அதிகம் ,
 அதாவது கடற்கரைக்கு போகவேண்டும் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று நாம் விரும்பும் போது இந்த முழு பிரபஞ்சமமும் எமது அந்த விருப்பத்தை நிறைவேற்ற தொடங்குகிறது ,
எமது ஒவ்வொரு எண்ண அலைகளையும்  சுற்றிதான் இந்த முழு பிரபஞ்சமும் இயங்குகிறது
கடற்கரை உல்லாசம் என்று  நல்ல  ஆணைகளை  பிரபஞ்சதிடம்  கொடுத்த  நாம்  எமது  தவறான  சிந்தனை  அணுகு முறை காரணாமாக  சிலவேளைகளில்  ம்ம்ம் அங்கு எமக்கு தெரிந்த  கடலும் அலையும் தானே இருக்க போகிறது ?
போன்ற  அபிப்பிராயங்கள் அல்லது  தீர்மானங்கள்  வந்தால் .அந்த  அபிப்பியாயங்களினால் தூண்டப்பட்ட  பிரபஞ்ச  இயங்கு சக்தி  அப்படியே  எதிர்மறையாக இயங்க தொடங்குகிறது .
ஒரே விடயத்திலேயே  ஒன்றுக்கு ஒன்று  முரண்பட்ட விதமாக  எமது சிந்தனை ஓட்டம்  சென்றால்  சம்பவங்களும்  அதே விதமாக தான் செல்லும்
இயங்கு சக்திக்கு ஒரு தேவை இல்லாத  தடையாக தான் எமது  அபிப்பிராயங்கள் அல்லது  தீர்மானங்கள்  செயல் படுகின்றன,
எந்த விடயத்திலும்  அபிப்பிராயங்கள் தோன்றி கொண்டுதான் இருக்கும் ,  அப்படியே தோன்றிக்கொண்டு இருப்பது இயற்கையே !
ஆனால் நாம் என்ன செய்கிறோம் ?
எப்போதோ  தோன்றிய அபிப்பிராயத்தை மாறாமல் அப்படியே பின்பற்றுவது , அல்லது  எம்முள் உருவாகிவிட்ட  பழமைவாத ,  சமயம், கலாச்சாரம்,  பாரம்பரியம்,  நாலு பேர் கூறும் அபிப்பிராயங்கள் போன்ற  கலர் கண்ணாடிகள் மூலம் இந்த உலகத்தை பார்க்கிறோம் .
கண் முன்னால் தெரியும்  பிரபஞ்சத்தை  அப்படியே உள்ளது உள்ளபடி பார்க்க முயற்சிக்க வேண்டும் அல்லது பழக வேண்டும்,
ஆயிரம் வருஷ பழமையான கண்ணாடியால் உலகை பார்த்தால் ஒன்றும் தெளிவாக தெரியாது.
Opinions and Judgements எல்லாம் நிதர்சனங்களின் முடிவில் வருபவை ,
வாழ்க்கை என்பது ஒரு இயங்கியல் ஒரு process. அது ஒரு முடிவு result அல்ல .
ஒரு கருமத்தின் ஆரம்பத்திலேயே  முடிவில் வரவேண்டியவற்றை எண்ணினால் அந்த கருமம் பூரணத்துவம் அடையாமலேயே போய்விடும் ,

No comments: