Monday, May 27, 2013

சிஷ்யர்களை தேடி வலை வீசும் சாமியார்கள்.....

Atmospheric pollution is most harmless when compared to the spiritual and religious pollution that have
plagued the world.There is no such thing as 'knowledge' for the sake of knowledge. Knowledge is power. "I know. You don't know". ug krishnamurthi
அனேகமாக எல்லா சாமியார்களும் சமய வாதிகளும் உபதேசிகளும்  குருமார்களும் பிரசாரகர்களும்  அள்ளி வீசும் கருத்துக்கள் எதுவுமே அவர்களின் சொந்த கருத்துக்கள் அல்ல.
நியு ஏஜ் தத்துவங்கள் என்று கூறப்படும் விடயங்களும் சுய முன்னேற்ற புத்தகங்களில் இருந்து பெறப்படும் உளவியல் மற்றும் பிரபஞ்ச பற்றிய கருத்துக்களே ஆகும் .
அவை நல்ல கருத்துக்களே , யார் குற்றியாவது அரிசியாகட்டும் என்று பேசாமல் இருந்து விடலாம் தான் ,ஆனால் இந்த கூட்டத்திற்கு ஆள்பிடிக்கும் ஆத்மீக உபதேசிகள் எல்லாருமே நல்ல நல்ல கருத்துக்களை எல்லாம் தங்கள் சொந்த கருத்துக்கள் அல்லது அனுபவங்கள் போல பாவனை பண்ணி நடித்து விட்டு சிஷ்யர்களை நிரந்தர கத்துக்குட்டி அடிமைகளாக அல்லவா வைத்திருக்கிறார்கள்?
அத்தனை முடிச்சவிக்கிகளும் பெரும் பெரும் தத்துவங்களை சொல்லி கேட்போரை மயக்கி விட்டு இறுதியில் அவர்களின் பணத்தை எப்படியாவது பிடுங்கி விடுவார்கள் எனக்கு தெரிந்த அளவில் இன்று பிரபலமாக இருக்கும் அத்தனை ஆள்பிடி காரரும் இப்படித்தான் நித்தியானந்தா என்பவர் நன்றாக பேசுவார், எல்லாம் ஓஷோ மற்றும் தீபக் சோப்ரா அல்லது   வைன் டயர் மற்றும் நோர்மன் விஸ்டன் போன்றவர்களின் உபயம்
அடுத்தது அந்த ஜாக்கி வாசுதேவ் என்ற சாமியார், இவர் மனைவியை கொன்றதாக வழக்கு அப்படியே கிடப்பில் கிடக்க கடையை வெற்றி கரமாக திறந்து விட்டுள்ளார், பேசுவதில் ஒன்று கூட ஒரிஜினல் இல்லை , எல்லாம் ஓஷோ வின் second Hand matter தான் ,இவருக்கு ஒரு மகளும் பல பெண் சிநேகிதகளும் ஏராளமான சொத்துக்களும் உண்டு,


இன்னும் என்னனவோ பெயர்களில் எல்லாம் இந்த பகல்வேஷ காரர்கள் உண்டு. 
சமயம்  மாற்றும் வேஷதாரிகளின் தில்லாலங்கடி வேலைகளோ சொல்லி மாளாத.  அதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் ஒரு சமயம் மாற்றும் கோஷ்டிக்கு மற்ற சமயம் மாற்றும் கோஷ்டியை பிடிக்காது.   அவர்களை பற்றி இவர்களும் இவர்களை பற்றி அவர்களும் விலாவாரியாக அவிழ்த்துவிடும் சமாசாராங்களை எழுத புறப்பட்டால் இது ஒரு அடல்ஸ் ஒன்லி கட்டுரையாகி விடும்,

ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர்  என்று ஒரு டபுள் ஸ்ரீ சாமியார் உண்டு.
இவரும் ஏனையவர்கள் போலவே ஓஷோ, தீபக் சோப்ரா போன்றவர்களின் மாவை எடுத்து பணியாரம் சுடுபவர்தான். கொஞ்சகாலம் நடிகை  நக்மாவுடன் திரிந்தார் , உலகெங்கும் ஏராளமான சொத்துக்கள் சேர்த்து விட்டார்.

இவர் typical corprate குருஜி ,இவருக்கு இந்தியாவின் சகல அரசியல்வாதிகளும் நல்ல முறையிலான நண்பர், அதைவிட சுவாரசியமான விடயம் விஜய மல்லையா போன்ற எல்லா பெரிய வர்த்தக முதலைகளும் இவரின் broker சேவையை நாடுவார்கள், இந்த சாமியார்கள் வேஷம் புரோக்கர் தொழிலுக்கு பேருதவி புரியும்,

இவர்களை விட பழைய ஒரு ஆசாமி இருக்கிறார் , அவர்தான் குரு மகராஜி என்றும் பின்பு மகராஜி என்றும் தற்போது தனது இயற்பெயரான பிரேம் ராவத் என்றும் அழைக்கப்படுகிறார்.
இவர் திரிக்கும் கயிறு மகா மகா மோசடியானதாகும்.  இவரது பக்தர்கள் இவரின் சொற்பொழிவுகள் பேச்சுக்கள் தவிர வேறு ஒன்றையும் படிக்கவோ கேட்கவோ கூடாது என்று கடிவாளம் போட்டு விடுவார்,
ஆனால் இவர் மட்டுமோ ஓஷோ தொடங்கி கிரிஷ்ணமூர்த்தி மற்றும் நோர்மன் வின்ஸ்டன் போன்ற ஏராளமான நியூ ஏஜ் சமாச்சாரங்களி படித்து விதம் விதமாக கதை சொல்லுவார்,
ஏனைய சாமியார்கள் போலவே தானும் கண்டு பிடித்ததாக ஒரு தியான தீட்சையை தான் விரும்பும் பக்தர்களுக்கு அளிப்பார்,
இவரது பேச்சில் மறந்து போய் கூட ஒரு ஒரிஜினல் விஷயம் இருக்காது .

ஆனால் இவரது பக்தர்களை வேறு எந்த புத்தகமும் படிக்க கூடாது.
இன்று இவர் ஒரு புலிப்பாணி தியரி வைத்திருப்பதால் அவர்களுக்கு இவர் சொல்வதெல்லாம் ஏதோ இவரின் ஞானத்திலேயே உதித்தது என்று நம்பி விடுவர்.
இவருக்கு மனைவி குழந்தைகள் மற்றும் சொந்த விமானம் உட்பட ஏராளமான சொத்துக்கள் உலகெங்கும் இருக்கிறது , எல்லாத்தையும் விட பெரிய ஜோக் இவர்கூட ஒரு காலத்தில் தன்னை ஒரு கிருஷ்ண அவதாரமாக declare பண்ணியவர்தான்

அடுத்த பிராடு இந்த கல்கி சாமி அல்லது தற்போது அம்மா பகவான் என்று couples ஆக கலக்கும் சாமியார் தம்பதிகள்.
தப்பி தவறிக்கூட இவனிடம் இருந்தும் நீங்கள் எந்தவிதமான ஒரிஜினல் கதையும் அறிய முடியாது , எல்லாம் ஓஷோ போன்றோரின் நியூ ஏஜ் மசாலாக்கள்தான் ,இந்த அம்மா பகவான் கோஷ்டியிடம் ஏராளமான் சொத்துக்கள் குவிந்து கிடப்பது மட்டுமல்ல ஏராளமான இந்திய அரசியல் வாதிகளும் கூட சிக்கி உள்ளார்கள், பிரசாதத்துடன் போதை வஸ்த்து கலந்து கொடுப்பதாக வீடியோ ஆதாரங்கள் எல்லாம் கிடைத்தும் எதுவித சட்ட நடவடிக்கையும் இந்த கிரிமினல் மீது எடுக்க படவில்லை,
இந்த பிராடுகளை பற்றி எழுத எனக்கே போரடிக்கிறது , ஏனென்றால் எல்லா ஆசாமிகளுக்கும் ஒரே விதமான தன்மைகள் தான் உண்டு,

எல்லாரும் நன்றாக பேசும் திறன் வைத்தவர்கள்., கவர்ச்சிகரமானவர்கள் எல்லாரும் சாதாரண மனிதர்களை விட அதி கூர்மையான புத்தி சாலிகள், பிறரின் மன ஓட்டத்தை அறியக்கூடிய தந்திர சாலிகள்,
ஏராளமான புத்தகங்களை படித்து பல விடயங்களை தெரிந்து வைத்திருக்கிறார்கள்
மக்களுக்கு போரடித்து விடாமல் இருக்க பல கதைகளை சேர்த்து வைத்திருப்பார்கள் ,
அடி மனதில் இந்த பிராடுகள் எல்லாம் சரியான சர்வாதிகார மன நிலை கொண்டவர்கள் ,
ஒருவர் தனது காலடியில் கிடக்கிறார் என்று நம்பும் போது அவரை சிஷ்யர் என்ற போர்வையில்  செருப்பு போல பயன்படுத்துவார்கள்
ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ள self esteem பற்றி கிஞ்சித்தும் இவர்களுக்கு கவலை கிடையாது ,
தன்னை நம்பும் மனிதர்களை சந்தர்ப்பம் கிடைத்தால் எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவுக்கு தயாராக இருப்பார்கள்
இவர்களின் ஆணவம் சொல்லி மாளாது எப்பொழுதும் எல்லோரும் தம்மை தூக்கி பிடிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.உண்மையில் இவர்களை நம்பும் மனிதர்கள் ஏதோ ஒரு அறியாமையில் இப்படி பட்டவர்களின் வலையில் சிக்கி உள்ளார்கள் .
இதில் பெரிய வேடிக்கை என்ன வென்றால் இந்த பண வெறி புகழ் வெறி தன்னை சிஷ்யர்கள் தூக்கி தலை மேல் வைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் இந்த கிரிமினல்கள் கூட ஒருவிதத்தில் மன நோயாளிகளே

அநேகமான இது போன்ற சாமியார்களின் அந்தரங்க வாழ்கை பெரும்பாலும் மிகவும் இருள் சூழ்ந்ததாக தான் இருந்திருக்கிறது
இக்கட்டுரை எழுதவேண்டிய அவசியம் என்னவென்றால் நியூ ஏஜ் புத்தகங்களிலும் சுய முன்னேற்ற நூல்களிலும் கூறப்பட்டுள்ள நல்ல விடயங்கள் மக்களுக்கு நேரிடையாக போய் சேரவேண்டும்  என்பதே

அந்த நல்ல கருத்துக்களை இவர்கள் ஒரு வகையில் High Jack செய்து தங்கள் கல்லாப்பெட்டியை நிரப்புகிறார்கள் .
இப்படிப்பட்ட போலிகளை விட உண்மையான நாஸ்திக வாதிகள் போற்றுதற்கு உரியவர்களே .
இந்த விதமான போலி மனிதர்களுக்கு பின்னால் சென்று நேரத்தையும் உழைப்பையும் பொருளையும் பறிகொடுக்காமல் காசு கொடுத்து நல்ல புத்தகங்களை வாங்கி படியுங்கள் என்று கேட்டு இக்கட்டுரை மூலம் உங்கள் எல்லோரையும் அன்புடன் கேட்டு கொள்கிறேன்,

உங்களுக்கு அறிவு அல்லது ஞானம் அல்லது கடவுளை காட்டுகிறேன் என்று ஏமாற்றும் கிரிமினல்களிடம் சிக்கியது போதும் உங்களுக்கு நீங்கள்தான் குரு,

உங்களுக்கு உபதேசம் செய்ய கூடிய வேறு ஒருவரும் இன்னும் பிறக்கவில்லை உங்களை நம்புங்கள்.
நீங்கள் அறிவாளிதான் நீங்கள் ஞானம் நிரம்ப பெற்றவர்தான்,
எல்லா அறிவும் உங்களை சுற்றியே இருக்கிறது;
உங்களுக்கு உள்ளேயே  உற்று பாருங்கள் .
உங்கள் பொன்னான நேரத்தையும் பணத்தையும்  வீணர்களிடம் பறிகொடுத்து விடாதீர்கள்

No comments: