
சிறந்த கலைதான் மனதோடு மனம் பேசும் இயல்பு.
மனிதர்கள் கண்டு பிடித்த கருவிகளிலேயே மிகவும் அற்புதமான கருவியாக
சொற்களைத்தான் கூறவேண்டும்.
சொற்கள் ஒரு மொழியாக பரிணாம வளர்ச்சி முன்பே ஏராளமான செய்திகளை உணர்வுகளை சப்தங்கள் மூலமாக மனிதன் பரிமாறி கொண்டான் ,
ஆனால் சப்தங்களோ சொற்களோ மனிதானால் கண்டு பிடிக்க முதல் மனிதன் ஏனைய பிராணிகள் போல உள்ளுணர்வுகளால் மனிதனும் செய்திகளை பரிமாறி கொண்டான் .
பின்பு மொழியறிவு வளர்ந்த பின்பு பாய்ச்சல் வேகத்தில் மனித சமுதாயம் முன்னேறி விட்டது .
இந்த முன்னேற்றத்தில் மனித குலம் ஏதாவது ஒன்றை இழந்து விட்டதா என்றால் ஆம் என்றே கூற கூடிய ஒரு உன்னதமான கலை அல்லது திறமை ஒன்றை குறிப்பிடவேண்டி உள்ளது.
மனதோடு மனம் பேசும் கலையை மனிதர்கள் ஒரு காலத்தில் பெற்றிருந்தார்கள்.
காலப்போக்கில் அந்த திறமை மறைந்து விட்டது . ஆனாலும் வெகு சிலர் தங்களின் சுய மேம்பாடு காரணமாக அந்த திறமையை பெற்றிருந்தார்கள் .