Wednesday, February 27, 2019

ஒரு உடல் ... ஒரு உள்ளம் .. ஒரு உலகம் .. உயிர் = உன் இருப்பின் தொடர்ச்சி ..



மனித வாழ்வின் மர்மங்களை அக்கு வேறு ஆணிவேராக பிரித்து மேய்ந்து பார்க்கும் முயற்சியை பொதுவில் யாரும் திறந்த மனதோடு அணுகுவதில்லை.
அதற்கு காரணம் அது பற்றி அவர்கள் ஏற்கனவே கொண்டிருக்கும் நம்பிக்கை சார்ந்த கோட்பாடுகளே.
அவை அவர்களின் அறிவுத்தாகத்தை தீர்த்து கொண்டிருப்பதாக அவர்கள் எண்ணுகிறார்கள்!
இந்த நம்பிக்கைதான் அறிவுக்கு மிகப்பெரும் தடை.
பிறப்பு, இறப்பு, மறுபிறவி , உயிர்,; கடவுள் போன்ற விடயங்களை பற்றி சிந்திக்க தொடங்கும் போதே மதங்கள் அவை பற்றி வகுப்பெடுத்த கதைகள் ஞாபகத்திற்கு வந்துவிடும் .
இந்த கதைகள் எமது ஆய்வுகளை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தவே விடாது.
இது ஒரு ஆபத்து என்றால் அடுத்த ஆபத்து இதை எல்லாம் பொத்தாம் பொதுவாக மூர்க்கமாக மறுத்து வேறொரு பக்கத்தில் இருந்து வாதங்கள் வந்துவிடும் .
இதுவும் உண்மையை அலசி ஆராயும் வாய்ப்புக்களை மறுத்து விடும் தடைதான்.
இந்த இருபகுதியினரின் கோட்பாடுகளையும் மீறித்தான் உண்மையான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. .
இந்த வாழ்க்கைக்கு என்னதான் அர்த்தம் என்ற மிகப்பெரிய கேள்வி இருக்கிறது.
இதற்கு சரியான பதில் கூறக்கூடிய தகுதி அந்த கேள்வியை கேட்பவரை சுற்றி உள்ள பிரபஞ்சத்திற்கு மட்டுமே இருக்கிறது.;
ஆனால் கேள்விக்கு பதிலை ஒருவர் தேடும் முன்பே மதங்களும் இதர நம்பிக்கைகள் சார்ந்த கோட்பாடுகளும் அவருக்குள் வலிமையாக நுழைந்து விடுகிறது.
இதற்குள் இருந்து ஒரு நேர்மையான ஆய்வாளன் சுதந்திரம் பெறுவது மிக பெரும் சவாலான காரியமாகும்.
இந்த பிரபஞ்சத்தில் ஒரு தொடரோட்டம் ஒன்று ஒயாமல் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
இந்த தொடரோட்ட்டத்தின் இயங்கு பொறிமுறை எப்படி பட்டது?
இந்த இயற்கையின் விதிகள் என்பது என்ன?
எம்மை சுற்றி இருக்கும் பிரபஞ்சம் அல்லது அண்டம் என்ற இந்த உலகின் இயங்கியல் எப்படிப்பட்டது ? இதன் நோக்கம் என்னவாக இருக்கும்?
நாம் கவனிக்க மறந்த நாடகங்கள் எல்லாம் எமது கண்முன்னே ஒவ்வொரு கணமும் அரங்கேறிக்கொண்டே இருக்கிறது,
பிரமிப்பு ஊட்டும் அற்புதங்கள் அவை .
ஒவ்வொரு இலையும் அசைவது ஒரு தற்செயலான நிகழ்வு அல்ல. அதன் பின்னணியில் பெரிய பெரிய பொறிமுறைகளும் பெரும் நோக்கங்களும் இருக்கின்றன.
அந்த இலைகளின் அசைவுக்கு என்னனென காரணங்களோ அதற்கு கொஞ்சம் கூட குறையாமல் எமது உடலின் உள்ளேயும் வெளியேயும் உள்ள ஒவ்வொரு உறுப்பும் அசைந்து கொண்டே இருக்கிறது ..
இதை பற்றி எப்பொழுதாவது நாம் சிந்திந்து பார்த்ததுண்டா?
எதுவுமே தற்செயலாகவோ காரணம் இல்லாமலோ அசைவதில்லை அல்லது இயங்குவதில்லை.
இதை புரிந்து கொள்ள எமக்கு போதிய அறிவு இல்லை . ஆனால் இவற்றை ரசிக்க அல்லது வியந்து பிரமிக்க முடியும் .. அதுதான் எமது பிறப்பின் நோக்கமும் கூட.
ஒவ்வொரு உயிரினமும் என்ற வார்த்தை கூட சரியானதா என்ற கேள்வியும் எழுவது இயற்கையே.
ஏனெனில் இந்த உலகின் எது உயிரினம் எது உயிரினம் இல்லை என்பதில் எமக்கு உள்ள புரிதல் ஒரு பூரணத்துவமானதா என்பதில் எனக்கு இன்னும் பதில் இல்லா கேள்விகள் உண்டு.
உயிர் என்பதே உனது இருப்பின் தொடர்ச்சி என்றுதான் அர்த்தம் கொள்ளமுடியும் என்று கருதுகிறேன்.
அதாவது ஐன்ஸ்டீன் கூறிய time- space continnum என்பது போன்ற ஒரு தொடர்ச்சி என்றுதான் எனக்கு தோன்றுகிறது.
ஏனெனில் இந்த பூமி சந்திரன் சூரியன் போன்ற கோளங்கள் எல்லாம் இந்த அண்டவெளியில் சுற்றி கொண்டே இருக்கின்றது அல்லவா?
அவை இயங்கி கொண்டுதானே இருக்கிறது?
இது பதில் அல்ல .இதுவும் ஒரு கேள்வி மட்டுமே.
எனக்கு கண்ணுக்கு தெரிந்த காட்சிகள் செவிக்கு கேட்கும் ஓசைகள் எல்லாம் எதை கூறுகிறது என்ற கேள்விகள் சுற்றி சுற்றி வருகின்றனவே?
எதற்கும் பதில்கள் என்று எதையும் கூற முடியாதே?
பதில்கள் என்று கருதும் ஒவ்வொன்றும் மீண்டும் பல கேள்விகளாக அல்லவா மறுபிறவி எடுக்கின்றன?
உண்மையும் அதுதான்!
ஏனெனில் இது ஒரு தீராத நாடகம்!
இந்த நாடகம்தான் இந்த பிரபஞ்சத்தின் உயிர்த்துடிப்பு!
இதன் நோக்கம்தான் என்ன?
எதற்காக இந்த சூரியன் சந்திரன் உலகம் கோளங்கள் அண்டவெளிகள் காற்று வெளிச்சம் நீர் நிலம் நெருப்பு ஆகாயம் எல்லாம்?
எந்த பதிலும் காணவே முடியாத நாட்டிய நாடகங்கள் இவை!
கேள்வி பதில் என்பது எல்லாம் அபிப்பிராயங்கள் மட்டுமே!
மனிதர்களின் அபிப்பிராயங்களை தாண்டியது வாழ்வின் அர்த்தங்கள்!
இந்த பெரிய பெரிய கேள்விகள் ஆராய்சிகள் எல்லாவற்றிற்கும் ஒரு சிறு முடிச்சு ஒன்று இருப்பது மட்டும் தெரிகிறது .
அந்த சிறு அதி அற்புத முடிச்சுக்கு பெயர் வாழ்க்கை!
மரத்துக்கும் மலைக்கும் காற்றுக்கும் செடிக்கும் கடலுக்கும் குரங்கிற்கும் குதிரைக்கும் மனிதருக்கும் எல்லாவற்றிற்கும் ஒரு அர்த்தம் இருப்பதாக எனக்கு தெரிகிறது.
அந்த அர்த்தம்தான் வாழ்க்கை!
அதில் மட்டும்தான் இந்த பிரபஞ்சத்துக்கு அக்கறை!
பிரபஞ்சத்துக்கு வேறு எந்த அர்த்தமும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை!
உண்மை பொய் தர்மம் அதர்மம், நல்லவன் கெட்டவன் , உயர்ந்தது தாழ்ந்தது .பெரிது சிறிது என்று எதுவுமே இல்லை .
புலப்படுவது எல்லாமே காட்சிகள்தான். கேட்பது எல்லாமே ஓசைகள்தான்.
எல்லாவற்றிலும் தெரிவது வாழ்க்கை மட்டுமே!
எல்லாவற்றிலும் இருக்கும் நோக்கம் வாழ்க்கை மட்டுமே!
இந்த பிரபஞ்சத்துக்கு ஏதாவது நோக்கம் இருக்குமென்றால் அது எங்கும் நிறைந்திருக்கும் வாழ்க்கை என்ற ஒற்றை நோக்கம் மட்டுமே!
அதில் மட்டுமே பிரபஞ்சத்திற்கு அக்கறை!
வேறு ஒன்றிலும் அதற்கு அக்கறை இருப்பதாக ... எனக்கு ... தெரியவில்லை!
பிரபஞ்சத்தின் நோக்கம் என்று மதங்களும் வழிகாட்டிகளும் ஏதோதோ எல்லாம் கூறி உள்ளார்கள் . பொதுவாக அவை ஒன்றிலும் எனக்கு ஒத்திசைவு இல்லை!
அனேகமாக அவர்கள் எல்லாம் இந்த அழகிய பிரபஞ்சத்தின் வாழ்க்கை பற்றி மனிதர்கள் அறிவதை தடுத்கவே பெரிதும் பயன்பட்டார்கள்.
எமது உடலின் பொறிமுறையை கொஞ்சம் உற்று அவதானித்தால் அது எவ்வளவு அற்புதமான பொறிமுறையையும் ரசவாதங்களையும் தனக்குள் வைத்திருக்கிறது என்ற பிரமிப்பு ஏற்படுகிறது?
நாம் எமது உடலை எவ்வளவோ மோசமாக பயன்படுத்தினாலும் அது மீண்டும் மீண்டும் தன்னை புதிப்பித்து கொண்டு எமது நோக்கத்திற்காக உழைக்கிறது?
எமது நோக்கத்திற்காக அது ஏன் கடுமையாக போராடவேண்டும்?
எமது நோக்கம் எது?
எமது நோக்கம் எமது வாழ்க்கை!
எமது நோக்கதிற்காக எமது உடல் மீண்டும் மீண்டும் தயாராவது என்ன செய்தியை எமக்கு கூறுகிறது?
இந்த அதிசயமிக்க உடல் என்ற பொறிமுறை கூறும் செய்தி " வாழ்க்கை "!
இந்த வாழ்க்கை என்ற பொறி முறை மட்டுமே எங்கும் எதிலும் நீக்கமற நிறைந்து இருக்கிறது!
காணும் கல்லிலும் கேட்கும் இடி முழக்கத்திலும் எமக்கு தெரிவது வாழ்க்கை மட்டுமே!
எது வாழ்க்கை எனபதை நாங்கள் பொதுவாகவே மனித வாழ்க்கை என்று மட்டுமே அர்த்தபடுத்தி கொண்டிருக்கிறோம்..
இதில் இருந்து கொஞ்சம் வெளியே வந்து பார்த்தால் தெரியும் கண்ணுக்கு தெரிவது எல்லாமே வாழ்க்கைதான்.
கண்ணுக்கு தெரிவது எல்லாமே பிரபஞ்சம்தான்!
வாழ்க்கை மட்டும்தான் பிரபஞ்சத்தின் நோக்கம்!
பிரபஞ்சம் என்பது வாழ்க்கை மட்டும்தான்!
அந்த வாழ்க்கைக்கு என்னென பொறிமுறை தேவையோ அவற்றைத்தான் பிரபஞ்சம் இயற்றிகொண்டு.. இயங்கி கொண்டு இருக்கிறது!
அந்த நோக்கத்திற்கு இணைவாக இருக்கும் எந்த பொருளும் எந்த சக்தியும் எந்த நோக்கமும் அதனோடு சேர்ந்து இயங்கி கொண்டிருக்கும்!
இந்த பொறிமுறை மட்டுமே எனக்கு தெரிந்த பிரபஞ்ச நோக்கம்!
இந்த வாழ்க்கை என்ற பொறிமுறைக்கு இசைவாக இல்லாதவை எல்லாம் அதன் சிருஷ்டி நோக்கத்தை விட்டு அடுத்த கட்டத்திற்கு சென்று விடும்.
இது ஒரு சுற்று வட்டம் .
எம்மை சுற்றி உள்ள வாழ்க்கை பொறிமுறைக்கு நாம் இசைந்து இயங்குவரை எமது வாழ்க்கையும் இயல்பாகவே இருக்கும் !
ஒரு உடல் ... ஒரு உள்ளம் .. ஒரு உலகம் .. உயிர் = உன் இருப்பின் தொடர்ச்சி ..

Saturday, December 29, 2018

இயற்கை அழிவுகள் கூட உங்கள் மனங்களில் இருந்துதான் ஆரம்பம் ...

Collective Consciousness ... become  Collective Unconsciousness.  Then it will create material realities
தனி மனிதர்களுக்கு இருக்கும் மன நிலை அவர்களை வாழ்வை தீர்மானிக்கும் என்பதை பற்றி பல தடவைகள் எழுதி உள்ளேன்.
அவற்றை பலரும் ஏற்றுகொண்டாலும் ஏற்று கொள்ளாவிட்டலும் அதுதான் உண்மை.
பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் போன்று மனமே வாழ்க்கையை உற்பத்தி செய்கிறது.  இங்கே நான் சொல்ல வரும் விடயம் அது அல்ல.

உலக வரலாற்றில் எங்கெல்லாம் இயற்கை அழிவுகள் நடக்கின்றதோ அங்கெல்லாம் அதை தொடர்ந்து அல்லது அதற்கு முன்பாகவே மக்கள் அமைதி இழந்து  நாட்டில் குழப்பங்கள் நிலவுவதை காணலாம்.
இதை ஒரு தற்செயலான நிகழ்வு என்றுதான் பலரும் எண்ணுகிறார்கள் . பிரபஞ்சம் இயங்கும் பொறி முறையை பற்றிய போதிய புரிதல் இன்றைய உலகுக்கு  கிடையாது என்பதே உண்மை
ஈரான் இந்தோனேசியா இலங்கை இந்தியா பாகிஸ்தான் போன்ற பல நாடுகளில் இயற்கை அழிவுகளும் அந்தந்த நாடுகளில் ஏற்பட்ட அரசியல் சமுக குழப்பங்களும் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்தவை போல தெரிவது எல்லாம் வெறும் தற்செயலான நிகழ்வுகள் அல்ல.


அவை நிச்சயமான தொடர்பு உடைய சம்பவங்கள்தான்.
மக்களின் கூட்டு மன நிலைதான் அவர்களது நாட்டையும் சமுகத்தையும் பாதிக்கிறது. மக்கள் மன நிலை மேம்பட்டால் அந்த நாடும் மேம்படும் .மக்கள் குழம்பினால் இயற்கையும் குழம்பும். இது மிக தெளிவான உண்மை.
இந்த உண்மைகளை இன்றைய விஞ்ஞானம் மறுக்கிறது என்பது கூட உண்மை இல்லை.  மறுப்பது போல நடிக்கிறது என்றுதான் கூறவேண்டும். காரணம் இருக்கிறது .

இன்றைய விஞ்ஞான உலகம் யார் கையில் இருக்கிறது?  முழுக்க முழுக்க ஒரு வியாபார நோக்கம் கொண்டவர்கள் கையில்தான் விஞ்ஞானம் இருக்கிறது.

அவர்கள் புத்திசாலிகள் அல்ல. அவர்கள் புத்திசாலிகள் என்று உலகை நம்பவைத்து விட்டார்கள் . அதுதான் உண்மை நிலை.
இன்றைய விஞ்ஞான உலகம் புத்திசாலி உலகமாக இருந்தால்  உலகின் இயற்கை வளங்களை உயிரினங்களை  இவ்வளவு மோசமாக அழித்து வருங்கால மனிதர்களுக்கு இவ்வளவு பெரிய தீமையை செய்திருக்க மாட்டார்கள் .
மீண்டும் திரும்பவே முடியாத அளவு உலகின் இயற்கையை அழித்து விட்டார்கள். அதுவும் மிகவும் குறுகிய கால பகுதிக்குள்ளேயே.
நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களை  பற்றிய கணக்கெடுப்பும் அது பற்றிய ஆய்வுமே பல உண்மைகளை வெளிச்சம் போட்டு காட்டும்.
...
மனிதர்களின் கூட்டு மன நிலையே உலகின் மனம் போன்று பெரிதும் செயல் படுகிறது. மனிதர்களின் கூட்டு மனோ நிலை என்பது மக்களின் பொதுவான  அபிப்பிராயங்களே .
அரசியல் சமுக பொருளாதார விடயங்களில் மக்களின் மனோ நிலை எப்படி இருக்க வேண்டும் என்று மிக குள்ள நரித்தனமாக திட்டமிட்டு பெரும் ஊடகங்கள் தங்கள் வியாயபரங்களை கட்டமைத்து உள்ளார்கள்.

Monday, October 15, 2018

உங்களை நீங்கள் கண்டுபிடித்து விட்டீர்களா?... ஆரம்பம் இன்றே ஆகட்டும் ..

ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருக்கும் அறிவு மிக மிக அபூர்வமானது. நிச்சயமாக அது ஒரு நிகரற்ற அறிவுதான்.
அவரவர்களுக்கு ஏற்ற தேவையான அறிவு ஒவ்வொரு ஜீவராசிக்கும் மிக சரியாகவே உள்ளது.
நாம் இயற்றி கொண்ட அளவுகோல்கள் மிகவும் குழந்தைத்தனமாக இருப்பது போல்தான் தெரிகிறது.
ஆத்மீக வேட்கை உள்ளவர் எப்பொழுதும் சாந்த சொருபியாக சுயநலம் அற்று பரோபகார சிந்தை உள்ளவராக இருக்கவேண்டும் . அத்தோடு அவர் மிகவும் சக்தி வாய்ந்தவராக இருக்கவேண்டும் . அதாவது அமானுஷ்யமான மர்ம சக்திகள் உள்ளவராகவும் இருக்கவேண்டும் போன்ற எதிர்ப்பார்ப்புக்கள் நமக்குள் குடி கொண்டுவிட்டது.

 நாம் இது போல ஏராளமான கோட்பாடுகளை கண்டு பிடித்திருக்கிறோம்.
இந்த வகை கோட்பாடுகள் ஒரு வகையில் கோழிக்கூடுகள் போன்றவை.
இதில் வளர்க்கப்பட்ட  நாமும் ஒருவகை பிராய்லர் கோழிக்குஞ்சுகள் போலத்தான் வாழ்கிறோம்.
இந்த பிரபஞ்சத்தின் இயக்கம் பற்றியும் நமது பிறப்பு இறப்பு போன்ற வாழ்க்கை சங்கிலி தொடர் பயணம் பற்றியும் எதுவித சுய ஆராய்ச்சியும் மேற்கொள்ள தெரியாமல் இருக்கிறோம்.
எமது அடிப்படை கேள்விகளுக்கு எந்தவித சுய சந்தேகமும் கொள்ளாமல் சமுதாயம் கூறும் பதில்களை அப்படியே விழுங்கி கொண்டிருக்கிறோம்.
அதற்கு காராணம் நாம் சுயமாக வளரவே இல்லை என்பதுதான்.
பிரபஞ்சம் பற்றிய எல்லா கேள்விகளுக்கும் பதில்களை மதங்கள் எறிகின்றன.
அந்த பதில்கள் பிராய்லர் குஞ்சுகளுக்கு போடுவது போன்ற உணவு போன்றதாகும் .
அவற்றை உண்டு உண்டு அதை தாண்டி உணவை தேடவேண்டும் என்ற சிந்தனையோ வேட்கையோ அற்றவர்கள் ஆகிவிட்டோம்.

இதுதான் நமது மிகப்பெரும் பிரச்சனை.
இந்த பிரபஞ்சம் ஒவ்வொரு ஜீவராசிக்கும் ஒரு பெரிய சிங்காசனத்தை  வழங்கி உள்ளது.

Monday, September 17, 2018

இறந்தவர்களோடு பேசுதல் சாத்தியமா? அவர்கள் தொடர்பில் உள்ளார்களா? வழிகாட்டுகிறார்களா?

இறந்தவர்களோடு பேசுதல் அல்லது அவர்களோடு  தொடர்பு
கொள்ளமுடியுமா என்பது பற்றிய விவாதங்கள் மனித இனத்திற்கு புதிது அல்ல .
உண்மையில் மிகவும் ஆச்சரியம் தரத்தக்க செய்திகள் அல்லது நம்பிக்கைகள் வரலாற்றில் தாராளமாக உள்ளன.
எந்த விடயத்தையும் மிகவும் தர்க்க ரீதியாக ஆராய்வதே ஒரு நேர்மையான ஆய்வாளனின் கடமையாகும்.
ஆய்வுகள்  எப்பொழுதும் நேர்மையாக மேற்கொள்ள படுவதில்லை.
பல சமயங்களில் அவை தங்களுக்கு சார்பான கருத்துக்களை நிறுவுவதற்கு செய்யப்படும் ஆய்வாகவே இருந்து விடுவதுண்டு.
பௌதீக இரசாயன கணித ஆய்வுகளை போலவே ஆத்மீகம் கடவுள் போன்ற விவகாரங்களிலும் ஏராளமான போலியான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
இப்படிப்பட்ட போலி ஆய்வாளர்கள் எல்லா மதங்களிலும் தாராளமாக உலா வந்துள்ளனர்.
ஏனைய ஆய்வுகளிலும் பார்க்க மதங்கள் அல்லது கடவுள் பற்றிய போலி  ஆய்வுகள் மிகவும் இலாபம் தரக்கூடிய வியாபாரம் ஆகிவிட்டிருக்கிறது.
.
இன்று மனித குலத்தின் பெரும் துன்பங்களுக்கு இந்த போலி ஆய்வாளர்களும் ஒரு முக்கிய  காரணமாகும். இவர்கள் தங்களை ஆய்வாளர்கள் என்று கூட கூறமாட்டார்கள் .
தாங்கள் உயர்ந்த வழிகாட்டிகள் மேலான பெரியோர்கள் என்றெல்லாம் மக்களை நம்பவைத்து அவர்களின் சுய சிந்தனையை ஒரே அடியாக நொறுக்கி  விட்டனர்.
இந்த விடயத்தை பற்றிய ஆய்வில்  நான் ஒரு மாணவன்.
எந்த பள்ளிக்கூடமும் நான் படிக்க விரும்பிய இந்த பாடத்தை சொல்லி தரவில்லை.
இந்த முழு பிரபஞ்சமும் ஒரு பள்ளிக்கூடம்தான்  என்று புரிய எனக்கு நீண்ட காலம் ஆகிவிட்டது.

நாம் திறந்த மனதோடு கண்ணை திறந்து பார்க்கும் வரை இந்த பிரபஞ்சம் நமக்கு தெரியவராது.
கண்ணிருக்கும் எல்லோரும் பார்க்கிறார்கள் என்று அர்த்தம் அல்ல.

திறந்த மனதோடு அறியவேண்டும் என்ற ஆவலோடு பார்ப்பவருக்கு மட்டுமே சரியான காட்சிகள் தெரியவரும்.
காது இருப்பதானால் மாத்திரம் நாம் இந்த பிரபஞ்சம் பேசுவதை கேட்கிறோம் என்று ஒருபோதும் கூற முடியாது.
கேட்பதற்கு உங்கள் மனம் தயாராக இருந்தால் மட்டுமே அது பேசுவது உங்களுக்கு கேட்கும்.
பிரபஞ்சத்தை அறியும் ஆற்றல் மனிதர்களை விட இதர உயிரனங்களுக்கு மிகவும் அதிகமாக உண்டு.

இது பற்றி ஏராளமான நல்ல புத்தகங்கள் ஆங்கிலத்தில் வெளியாகி உள்ளன,
மத நம்பிக்கை கலக்காத நூல்கள் ஓரளவாவது நேர்மையான ஆய்வுகளை பற்றி கூறி உள்ளன.

தமிழில் ஏனோ சரியான நூல்கள் இல்லை . அல்லது அது பற்றி  எனக்கு சரியாக  தெரியவில்லை.

மதம் சார்ந்த விடயங்களில் ஒருபோதும் நேர்மை இருந்ததில்லை.
மத நம்பிக்கையாளர்களால் எழுதப்பட்ட  ஏராளமான நூல்களை வாசித்துள்ளேன் .
அவை பெரும்பாலும் மிகவும் குழந்தை தனமான அம்புலி மாமா கதைகளாகத்தான் இருக்கின்றன.
அவற்றால் எந்த பயனும் மனித குலத்திற்கு கிடைக்க போவதில்லை.
அழகான பிரபஞ்சத்தின் அற்புதங்களை எல்லாம் தங்கள் மதங்களுக்குள்  அடக்கி  பின்பு அதையும் கூறு போட்டு விற்றுவிடும் முட்டாள்தனமாகவே அவை உள்ளன.

இன்றிருக்கும் பல விஞ்ஞான  வசதிகள் அந்த காலத்தில் இருந்ததில்லை .
அதன் காரணமாக மனிதர்களின் கவனம் பல வழிகளிலும் சிதறுண்டு போகும் ஆபத்து மிகவும் குறைவாக இருந்தது .
ஆனால் இன்று நம்மை சுற்றி உள்ள பொருட்கள் வசதிகள் வாய்ப்பு எல்லாம் கூட கூட அவை எல்லாம் ஒரு பெரிய இயந்திரம் போலாகி விடுகிறது.
இப்படி இயந்திரமாகிவிட்ட சூழல் எமது நுண் உணர்வை மெல்ல மழுங்கடித்து விடும்.
நுண்ணுணர்வுகள் இல்லையேல் மனமும் மெல்ல தனது இருப்பை இழந்து விடும் .

Thursday, February 8, 2018

இயற்கைக்கும் இறைவனுக்கும் இடையே ஓயாத சதுரங்க வேட்டை

அனேகமாக எல்லா மனிதர்களின் மனதிலும்  ஒரு திருட்டு புத்தி எப்பொழுதும்
ஒழித்துகொண்டே இருக்கும். அதற்கு காரணம் மனிதர்களின் சிந்தனைகள் மதங்களால் வடிவமைக்கப்பட்டு இருப்பதுதான் .
அதன் காரணமாகவே ஒரு பயமும் இருக்கிறது . அண்மையில் வெளியான சதுரங்க வேட்டை என்றொரு படம்  .இன்னும் பார்க்காவிட்டால் பாருங்கள் .
அதில் வரும் ஒரு வசனம் , ஒருவரை ஏமாற்றவேண்டும் என்றால் அவரின் ஆசையை முதலில் தூண்டவேண்டும் . அந்த ஆசையினால் அவர் தூண்டப்பட்டால் அவரை ஏமாற்றுவது சுலபம் என்பதாக அந்த வசனம் இருக்கும் .
இதுதான் அனைத்து மதங்களினதும் அடிப்படை தத்துவம் .. இதுமட்டுமல்ல இன்றைய காப்பரெட் கம்பனிகளின் தத்துவமும் இதுதான் ,
இன்னும் சரியாக சொல்லப்போனால் மதங்கள்தான் அன்றைய காபரெட் கம்பனிகள். இரண்டுக்கும் அடிப்படையில் வேறு பாடே கிடையாது.

ஒருவர் தன் வீட்டை ஒழுங்காக அழகாக பார்த்துகொண்டிருப்பதை
பொறுக்காமல் அவரை குழப்பி அவரை அவரது வீட்டில் இருந்து வெளியே அழைத்து தங்கள் மதக்கம்பனிகளின் வருமானத்தை பார்ப்பதுதான் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அவை செய்து கொண்டிருக்கின்றன.

மதங்களால் ஏராளமான நல்ல விடயங்கள் நடந்துள்ளனவே என்று நீங்கள் எண்ணக்கூடும் . ஆனால் உண்மையில் அவை எல்லாவற்றிலும் மதங்கள் ஒருவகை சவாரியே செய்துள்ளதுதான் உண்மை.
நல்லதோ கெட்டதோ மக்களின் அத்தனை விடயங்களிலும் தாங்கள் முன் நிற்கவேண்டும் என்பதுதான் மதங்களின் அண்டர் கிரவுண்ட் கொள்கையாகும்.

திருமணமென்றால் மதம்தான் மணமக்கள் .... இழப்பு வீடு என்றாலும் மதங்கள்தான் மையக்கருவாக இருக்கவேண்டும் என்பதுதான் மதங்களின் நோக்கம்.
இதுதான் கம்பனிகளுக்கும் மதங்களுக்கும் உள்ள அடிப்படை தளம்.

நல்ல காலம் மனிதர்களை விட இதர உயிரனங்கள் ஒன்றும் மதங்களையும் கடவுள்களையும் தேடி அலையவில்லை .
எனவே அவை இந்த அழகிய பிரபஞ்சத்தை கெடுக்கவில்லை.
மனிதர்கள் ஏதோ அளப்பெரிய சாதனையும் கடும் உழைப்பும் மேற்கொண்டு கடவுளை கண்டுபிடிக்க வேண்டும் அல்லது அதே கடவுளை அடையவேண்டும் என்று எண்ணுகிறார்கள்.
அந்த காலத்தில் மிகப் பெரும்  கில்லாடிகள் இருந்திருக்கிறார்கள்.
அடம்பிடிக்கும்  குழந்தைகளுக்கு  அம்புலிமாமா வருவார்  என்று தாய்மார் அளக்கும் கதைகள் போலவே  மனிதர்களுக்கு  ஏராளமான கற்பனைகளை விற்பனை செய்துள்ளனர் .

Monday, January 29, 2018

தியானம் ஒரு பித்தலாட்டம் ... வாழ்வின் மீதான காதலை அழிக்க சொல்லும் மோசடி!

தியானம் மென்மையானது அற்புத சக்திகளை தரவல்லது, மேலான பேரானந்தத்தை தரவல்லது என்று  அனேகமாக  எல்லா மதங்களும் எல்லா வழிகாட்டிகளும் கூறுகிறார்கள் .
அதை  மறுத்து கூறுவது பற்றி சிந்திக்க கூட முடியுமா என்று பலரும் எண்ணக்கூடும்.. தியானத்தை புனிதப்படுத்தி அதைப்பற்றி ஆராய்வதே ஒரு பாவகாரியமாக்கி விட்டார்கள்.

நீண்ட காலமாக மீண்டும் மீண்டும் கூறுவதால் மட்டும் அது பற்றி நாம் பூரணமாக விளங்கி இருக்கிறோம் என்று அர்த்தம் கொள்ள முடியாது.
தியானம் எல்லோரும் கூறுவது போல அது எந்த தீமையும் இல்லாத ஒரு நல்ல பயிற்சி அல்லது முயற்சி அல்லது பாதை என்று நான் கூறமாட்டேன்.
தியானத்தால் அடையக்கூடிய உயர்ந்த பேரானந்த பெருநிலை என்று விதம் விதமாக நூல்களும் உபதேசகர்களும் கூறும் அந்த நிலையை நான் பல வருடங்களுக்கு முன்பு அனுபவித்திருக்கிறேன் என்பதால் அதைப்பற்றிய எனது கருத்து வெறுமனே புத்தகங்களில் இருந்து பொறுக்கியதோ அல்லது பல சுவாமிகள் வழிகாட்டிகளிடம் இருந்து பெற்ற தகவல்களோ அல்ல.
நான் இங்கே எழுதுவது எனது சொந்த அனுபவத்தில் நான் அறிந்த விடயங்கள்தான்.

மீண்டும் மீண்டும் தியானம் என்பது உலகிலேயே மிகவும் உயர்ந்த உன்னதமான விடயம் என்று கூறப்படுவதில் கொஞ்சம் உண்மை இருக்கிறது .
அது என்னவென்றால் மனதின் வேகத்தை குறைத்து கொஞ்சம் அமைதியை தருகிறது . அந்த அமைதியின் காரணமாக உடலின் ஆரோக்கியய்த்தில் சில நல்ல விளைவுகள் ஏற்படுகின்றன. ஆனால் பல தடவைகள் தியானம் செய்வதாலேயே பல விதமான மன உளைச்சலும் உடல் ஆரோக்கியம் கெடும் சந்தர்ப்பங்களும் உண்டு, அவற்றை பற்றி விளக்குவது எனது நோக்கம் அல்ல.
கால்களால் நடப்பதை விட கைகளால் நடப்பதற்கு விசேஷ திறமையும் பயிற்சியும் வேண்டும். ஆனால் அதனால் என்ன பயன் ?
அது போன்ற தேவையே இல்லாத சில இயற்கைக்கு மாறான சில சக்திகள் தியானத்தால் பெற முடியும் என்பது உண்மையே .
ஆனால் அவை எல்லாமே இயற்கைக்கு மாறான திறமைகளே. அவற்றால் ஒரு பிரயோசனமும் இல்லை,
உதாரணமாக தண்ணீரில் நடப்பது அதிசயமானதுதான் ஆனால் அதனால் என்ன பெரிய பிரயோசனம் வந்து விடப்போகின்றது?
ஆனால் அந்த சித்தியை அல்லது திறமையை பெறுவதற்கு ஒரு தியானி இழக்கும் விடயங்கள் ஏராளம்.
இந்த இடத்தில்தான் நாம் கொஞ்சம் சிந்திக்க வேண்டி இருக்கிறது.
தியானம் செய்து பேரானந்தம் வரப்பெற்றதாக கூறுபவர்கள் உண்மையில் மிகவும் இனிமையான இந்த உலகத்தை ரசிக்கும் அற்புத வாய்ப்பை இழந்து விடுகிறார்கள் .

Thursday, October 26, 2017

ரீமிக்ஸ் ஆத்மீக வியாபாரம் ... சுகி சிவம் ... தீபக் சோப்ரா !

சமணம் . பௌத்தம், மற்றும் ஏராளமான் சிறிய பெரிய  வழக்கொழிந்து
போய்விட்ட   சமயங்கள் சார்ந்த கோட்பாடுகள் எல்லாம் தற்போது  இந்து சமயம் என்ற பெயரில்  இருக்கிறது.

நவீன விஞ்ஞான உலகத்துக்கு சமய நம்பிக்கைகள்  மீது ஒரு  அவநம்பிக்கை  இருக்கிறது.
நம்பிக்கை இருப்பதாக பாவனை பண்ணும் பலருக்கும் சந்தேகங்கள்தான் அதிகமாக இருக்கிறது ,
ஆனால்  நடித்து கொண்டிருக்கிறார்கள்.
 அதற்கு காரணம் இல்லாமல் இல்லை.
கடந்த நூற்றாண்டுகளில் இருந்து விஞ்ஞான அறிவு மிகபெரும் அளவில் வளர்ந்து கொண்டிருக்கிறது.
மறு புறம்  எல்லாவிதமான தத்துவங்களும் மீள் பரிசோதனைகளுக்கு உட்பட்டு கொண்டே இருக்கிறது.
மனிதர்கள் கொஞ்சம் சுயமாக சிந்திக்க தொடங்கி உள்ளார்கள்.
மேலை நாடுகளில் மனிதரின் பிறப்பு. இறப்பு மட்டும் அல்லாது , இந்த பிரபஞ்சம் இயங்கும் விதிகளை ஆராய்ந்து  பார்ப்பவர்கள் அதிகமாகிவிட்டார்கள்.
Darwin , Fredric Neitche, Sigmande Freud போன்றவர்கள் தத்துவார்த்த ரீதியிலான புரட்சியை சமகாலத்தில் தொடக்கி வைத்தார்கள் என்றே கூறலாம்.
இவற்றின் வழி பல புதியவர்கள் பல நூல்களை எழுதினார்கள் .
அவற்றில் மிக ஆழமான புரட்சிகரமான பிரபஞ்சவியல் ஆய்வு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
அவற்றில்  எதை குறிப்பிடுவது எதை விடுவது என்ற குழப்பம் எனக்கு உள்ளது.
ஏனெனில் மிக நீண்ட பட்டியலை குறிப்பிடுவது வாசர்கர்களின் பொறுமையை சோதித்து விடுமோ என எண்ணுகிறேன்.
 Jane Roberts என்பவர் எனக்கு  முக்கியமானவர் . இவர் ஏராளாமான நூல்களை அளித்துள்ளார் .

Tuesday, October 24, 2017

ஆத்மீக / மத பேச்சாளர்களின் நவீன விஞ்ஞான பக்தி காக்டெயில் விஸ்கி பிரசாதம் !

தற்போது எல்லா சமயவாதிகளும் தங்கள் பிரசார  தந்திரங்களை  கொஞ்சம்
நவீன மயப்படுத்தி உள்ளார்கள்.
ஜெஹோவா சாட்சிகள்தான் முதல் முதலாக சுய முன்னேற்ற கருத்துக்களை தங்கள் கர்த்தரோடு மிக்ஸ் பண்ணி கொடுத்தவர்கள்,
இப்போது எல்லோரும் இதே டெக்னிக்தான்.
 டபிள் ஸ்ரீ , ஜாக்கி வாசு  போன்ற பார்ப்பனீய கொள்கை பரப்பு செயலாளர்கள் மட்டுமல்லாது உலகில் உள்ள அத்தனை சமயத்தவர்களும் புதிய உலகின் சிந்தனைக்கு ஏற்ப விஞ்ஞான ரீதியான விளக்கங்களோடு ரீல் சுத்துகிறார்கள்.
பல நேரங்களிலும் இவர்கள் கூறும் கருத்துக்கள் நல்லவையாக இருக்கிறது உண்மையே .
ஆனால் இவர்களது நோக்கம் மிகவும் கபடம் வாய்ந்தவையாகும்.
அதனால்தான் இவர்கள் இன்னும் சீனில் நின்று பிடிக்க முடிகிறது. பழைய சினிமா பாடல்களை ரீமிக்ஸ் செய்து இளம் தலைமுறைகளின் காதுகளில் தங்கள் சொந்த சரக்கு போன்று சப்பிளை செய்வது போல இந்தசமய  சொற்பொழிவாளர்களும் இப்போது செய்கிறார்கள் .
 பேரறிஞர்கள் பேசியதை எழுதியதை எல்லாம் தேடி பிடித்து அவற்றை அங்கொன்றும் இங்கொன்றுமாக அள்ளி வீசி தங்கள் பழைய குப்பைகளை புதிப்பிக்கின்றனர்,
வழக்கம் போல பொதுபுத்தி மக்கள் ஆகா கண்டேன் அறிவின் கருவூலத்தை என்பது போல இந்த சமய வியாபாரிகள் பின்னால் செல்கின்றனர் . இந்த பக்தி சரணாகதி உல்டாக்கள் எல்லாம் வெறும் ரீமிக்ஸ் ஆத்மீக போதை வஸ்துக்கள்தான்.

Tuesday, July 4, 2017

சுயமாக சிந்திப்பது பாவம் ஏதாவது ஒரு தலைவனை அல்லது சாமியாரை நம்பி கண்ணை மூடுங்கள் சொர்க்கம் நிச்சயம்

சாமியார்கள் வழிகாட்டிகள் மகரிஷிகள் குருமகராஜிகள் பகவான்கள் பகவதிகள் அம்மாசாமியாரினிகள் எல்லாரும் எப்படியாவது மக்களை காப்பாற்றியே தீருவது என்று விடாப்பிடியாக முயற்சி செய்கிறார்கள். தாராளாமாக முயற்சி செய்யட்டும் .
உலகில் நடக்கும் கொலை கொள்ளைகளை எல்லாம் தடுத்து நிறுத்துவது என்ன நடைபெறக்கூடிய காரியமா?
சில கிரிமினல்கள் அகப்படுவார்கள் சிலர் அகப்படமாட்டார்கள். ஆனாலும் இயற்கையின் விஞ்ஞான விதி ஒன்று உண்டு அதில் எவரும் தப்ப முடியாது. ஊரையெல்லாம் ஏமாற்றுபவன் சொந்த வீட்டிலேயே ஏமாந்த கதையெல்லாம் உண்டு இந்த மாதிரி பித்தலாட்ட சாமிகளிடம் மக்கள் அதிக அளவில் ஈடுபடுகிறார்கள். இது உண்மையில் ஆராயப்பட வேண்டிய விடயமாகும். மிகவும் அறிவாளிகளாக படித்தவர்களாக ஏன் படு சுயநலவாதிகளாக இருப்பவர்கள்கூட இந்த மாதிரி முடிச்சவிழ்கி சாமியார் குருமார்களிடம் சிக்குப்பட்டு விடுகிறார்கள்.

 சுய சிந்தனை இல்லாமல் இருப்பது மிகவும் உயர்ந்த விடயமாக நமது மனதில் பதியப்பட்டு உள்ளது . சமயங்களும் கலாசாரம் என்று நாம் கூறிகொண்டிருக்கும் வாழ்க்கை முறையும் இந்த தவறை கால காலமாக செய்துவருகின்றன. சுயமாக சிந்திக்க தெரிந்தால் அவர்களை அடக்கி ஆளமுடியாதே? குருமார்கள் நிலைத்து நிற்பதே மக்களின் அறியாமையினால்தான். மக்கள் உண்மையை அறியாதவாறு சாமிகளும் ஆசாமிகளும் பல விதமான ஒழுக்க விதிகள் கோட்பாடுகள் எல்லாவற்றையும் பாமர மக்களின் தலையில் திணித்து வைத்துள்ளன.

Saturday, May 13, 2017

உனது உடலைவிட உனக்கு வேறு பெரிய சொத்து கிடையாது.


இந்த உலகில் இருக்கும் ஒவ்வொரு உயிரினத்திற்கும் தங்கள் உடல்தான் அதிக பெறுமதி வாய்ந்த தலையாய சொத்தாகும்.  இந்த உலகத்தில் உனது உடலைவிட உனக்கு பெரிய சொத்து வேறு எதுவும் கிடையாது.
எனவேதான் எல்லா உயிர்களும் தங்கள் உடலை பாதுகாப்பதற்கு எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கின்றன.
ஆனால் மனிதர்கள் மட்டும் இந்த இயற்கை விதியில் இருந்து விலகி தங்களை ஏதோ ஒரு அடிப்படை அறிவாளிகள் என்பதாக எண்ணிக்கொண்டு தங்கள் உடலை தாங்களே மிகவும் பாரதூரமாக சிதைக்கின்றனர்.
மனித உடலின் பெறுமதியை மிகவும் மலினப்படுத்திய முதல் குற்றவாளிகள்  மதவாதிகள்தான்.
மதங்கள் உருவாக்கிய காலச்சாரம் பாரம்பரியம் போன்றவை எல்லாம்  மனித உடலுக்கு உரிய மரியாதையை வழங்கவில்லை.  உடலை விட ஆத்மா உயர்ந்தது அல்லது அந்த ஆத்மாவை விட கடவுள் பெரியது என்பதாகதான் எல்லா மதங்களும் மீண்டும்  மீண்டும் பிரசாரம் செய்கின்றன
இந்த மதங்களின் ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் தொடர்ச்சியான பிரசாரங்களால் மனிதமனத்தின் மிகவும் ஆழத்தில் தனது உடல் ஒரு பெறுமதி இல்லாத பொருள் என்ற எண்ணம் பதிந்து விட்டது.
மனிதர்களை நல்வழிக்கு அழைத்து செல்வதாக கூறிகொள்ளும் மதங்கள் இறுதியில் மனிதனின் உடலை வெறும் வழி தேங்காயை எடுத்து தெருவில் உடைப்பது போன்று மனிதர்களின் உடல் பற்றிய கரிசனையை குழி  தோண்டி புதைத்து விட்டன.
உலகில் உள்ள எந்த விலை உயர்ந்த அதி பெறுமதி வாய்ந்த சிலையையும் விட மனிதனின் உடல் அற்புதமான உயிருள்ள சிலையாகும்..
இறைவனை வணங்குவதை விட தமது உடலை முதலில் வணங்குவதே மிகவும் சரியான ஒரு வழிபாடாக இருக்கமுடியும். அதற்கு அடுத்ததுதான் மீது வழிபாடெல்லாம். உடல் இருந்தால்தானே உன்னால் மீதி வழிபாடெல்லாம் தொடர முடியும் !

Monday, November 14, 2016

Nothing ஐ அடைவதற்கு Things எல்லாவற்றையும் இழக்க சொல்லும் மோசடிதான் தியானம், ஞானம், முக்தி, மோட்சம்....

மனித குலவரலாறு தோறும் ஒரு தொடர்ச்சியான யுத்தம் நடைபெற்று கொண்டுவருகிறது.
மனிதர்களின் சுயசிந்தனையை நிர்மூலமாக்கும் முயற்சிதான் அந்த யுத்தம்.
அதில் பெரும்பாலும் சுயசிந்தனை தோற்ற வண்ணம்தான் உள்ளது. வெளிப்பார்வைக்கு மனிதரின் சுயசிந்தனை வெற்றி பெற்று உள்ளதாக தெரிகிறது.
சில சில அபூர்வமான சந்தர்ப்பங்களில் வெற்றியை பெற்று இருக்கிறது. ஆனால் பெரும்பாலான சந்தர்பங்களில் சுயசிந்தனை தனது இருப்பை தொலைத்துவிட்டு திண்டாடிகொண்டுதான் இருக்கிறது. அதற்கு ஏராளமான உதாரணங்கள் கூற முடியும். அவற்றை விலாவாரியாக எழுதினால் வாசிக்க கொஞ்சம் சிரமமாக இருக்கும். எனவே அதன் அடிப்படையான சில தகவல்களை பற்றி மட்டும் தற்போது அலசுவோம்.

இயற்கையின் மிக அழகான வெளிப்பாடுகளில் மனிதர்களும் ஒரு அற்புத படைப்பே.
இங்கே மனிதர்கள் என்று குறிப்பிடும் பொழுது மனிதர்களின் மனம் உடல் இரண்டையும் சேர்த்தே குறிப்பிடுகிறேன். ஆத்மாவை பற்றிய கேள்வியை கட்டுரையின் முடிவில் பார்ப்போம்.
மனம் software உடல் hardware. மனம் இல்லையேல் உடல் இல்லை.உடல் இல்லையேல் மனம் இல்லை.இரண்டுமே ஒன்றில் ஒன்று தங்கி வாழ்வு என்ற process இல் இயங்குவதே மனிதவாழ்வு எனப்படுகிறது.
மனம் ஒரு மொழிபெயர்ப்பாளர். நாம் காணும் அல்லது கேட்கும் அல்லது ஏதோவொரு புலன்வழியாக உணர்பவற்றை அறியத்தருவது மனம்தான்.
இந்த மனம் எவ்வளவு தூரம் செயலிழந்து போகிறது அவ்வளவு தூரம் நாம் சுய  செயல் அற்றவர்கள் ஆகிவிடுவோம்.
ஒருவரை சுயமாக சிந்திக்க செயல்பட முடியாதவாறு அவரின் மனதை கட்டுப்படுத்தி  விட்டால் அவர் ஒரு உயிரற்ற பொருள் போலாகிவிடுவார்.
மனம் ஏதோவொரு விடயத்தில் தனது சுயத்தை இழந்து விட்டால் அது  ஒரு பெறுமதி அற்ற மனம் என்று ஆகிவிடுகிறது.

Sunday, September 11, 2016

கடவுளும் மருந்தும் விலை உயர்ந்த பிராண்டுகள்....? இந்த இரண்டையும் விட நீங்கள் உயர்ந்தவர் ! நிமிர்ந்து நில்லுங்கள் !


நவீன வாழ்க்கை வட்டம் ஏனோ தெரியவில்லை பயத்தின் அடிப்படையிலேயே பெரிதும் வடிவமைக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது.
இந்த பய உணர்வு மனிதர்களின் இயல்பான ஆனந்தத்தை விழுங்கியே விட்டது.
இந்த வாழ்வு ரசித்து ரசித்து அனுபவிக்க வேண்டிய ஒன்றல்லவா?

 அடிமனதில் தோன்றிய பயத்தின் காரணமாக மனதளவில் ஒழித்து வாழ்ந்து பழகி விட்டார்கள்.;
எதுவித காணரங்களும் இன்றியே பயந்து பயந்து ஒழிக்க இடம் தேடுகின்றனர்.
பயத்தின் காரணமாக சுயமாக சிந்திக்கும் பழக்கத்தை மனிதர்கள் பெரிதும் இழந்து விட்டார்கள். பயம் சிந்திக்கும் ஆற்றலை  கிள்ளி எறிந்துவிட்டது 
இந்த உலகை நேருக்கு நேர் பார்க்க பயந்து போய் ஒழித்து வாழ கண்டுபிடித்த முதல் பங்கர் குகைதான் சமயங்கள் அல்லது கடவுள்கள் என்பது.

அந்த குகைகள் தங்களது பாதுகாப்பு தொட்டில் என்று கருதுகின்றனர்.

அது தரும் தாலாட்டில் கண்ணை மூடிக்கொண்டு வாழ முயற்சிக்கின்றனர்.  இது சரியான வழி அல்லது பிழையான வழி என்று ஒருவித அபிப்பிராயத்தையும் நான் திணிக்க வரவில்லை. அது என் வேலை அல்ல.


மனதளவில் அந்த நிலக்கீழ் குகை வாழ்க்கையில் இருந்து பழகி விட்டார்கள்.
அதை விட்டு வெளியே வந்து பார்க்க பயந்த சமுதாயமாகி விட்டது.

 கற்பனைக்கு எட்டாத அற்புதங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கும் பிரபஞ்சம்  பற்றிய எந்தவித கருத்தும் இல்லாமல் பெருவாரியான மனிதர்கள்  வெறும் அடியவர்கள் ஆகிவிட்டனர்,
ஒரு போதும் உண்மையை  பார்க்க முடியாத அளவு  எங்கோ ஒரு தூரத்தில் இருக்கிறார்கள் .
மனதில் எந்த விதமான சந்தேகம் தோன்றினாலும் கைவசம் பதில்  வைத்திருக்கும் போலி மருந்துகள் சமய வியாபாரத்தில்  தாராளமாக  உண்டு.

Saturday, June 4, 2016

மரங்கள்தான் உண்மையான ஞானகுரு.... அவை உங்களுடன் பேசுவது புரிகிறதா?

நாம் வாழும் இந்த  பூமியை  பற்றி சரியான புரிதல்கள் நமக்கு இருக்கிறதா?

இவ்வுலகிற்கு உரிய வாழும் முறை பற்றி மரங்கள் சொல்வதை விட எந்த ஒரு குருவோ அல்லது வழிகாட்டியோ சிறப்பாக சொல்லி தரமுடியாது.
மரங்கள் தங்களின் சுயதர்மத்தை மிகவும் நேர்த்தியாக நிறைவேற்றுகிறது.
எந்த ஒரு குரு, வழிகாட்டி அல்லது சமுகத்துக்கு நல்ல காரியத்தை செய்திருக்கும் பெரியவர்களின் வாழ்க்கை வரலாற்றை கவனித்து பார்த்தால் அவர்கள் எல்லோருமே மரங்கள் செடி கொடிகளோடு மிகவும்  பரிச்சயம் உள்ளவர்கள்.
மனதை ஒரு முகப்படுத்தி தியானம் அல்லது சுயதேடல் முயற்சி உள்ள  பலர் மர நிழலில் அமர்ந்து இருப்பது வரலாற்றுக்கு முந்திய காலத்தில் இருந்தே நடைமுறையில் இருப்பதை அறிவோம் .

புத்தர் மட்டும் அல்ல அவருக்கு முன்பிருந்தவர்களும் மரத்தின் நிழலில்தான் மன அமைதி பெற்றார்கள் என்பது வரலாறு.
இவற்றில் இருந்து நாம் மிகப்பெரும் பாடத்தை படிக்க வேண்டி உள்ளோம்.
இந்த உலகில் இருக்கும்  எல்லா பொருட்களும் எல்லா  செயல்களும்  உண்மையில் ஒரு  இயங்கு சக்தியின் வெளிப்பாடுதான்.
(இங்கே சக்தி என்றதும் யாராவது அம்பாள் என்று கருத்து கூற முயன்றால் அதற்கு நான் பொறுப்பல்ல  என்பதை தெளிவாக கூறிக்கொள்கிறேன்.)

Wednesday, April 13, 2016

பயம்...ஒரு எதிரி அல்ல....விளையாட வேண்டிய மைதானம் அது.

Santosh Patel: You think tiger is your friend, he is an animal, not a playmate.
Pi Patel: Animals have souls... I have seen it in their eyes. Animals don't think like we do! People who forget that get themselves killed. When you look into an animal's eyes, you are seeing your own emotions reflected back at you, and nothing else. ...life of pi quotes

பிராணிகளுக்கா அல்லது மனிதர்களுக்கா  பய உணர்வு மிக அதிகம்?
மனிதர்களுக்குதான் பய உணர்வு அதிமாக இருக்கிறது!
மனிதர்கள் ஏன் பிராணிகளை விட அதிகமாக பயப்படுகிறார்கள்?

இந்த கருத்து  உண்மையா என்ற சந்தேகம் உங்களுக்கு ஏற்படவும் கூடும். அடிப்படையில் மனிதர்களும் பிராணிகளும் பல சந்தர்ப்பங்களில் பயம் என்ற பொறிக்குள் அகப்படவேண்டிதான் உள்ளது. 
பயம் உண்டாவதற்கான காரணங்களும் ஏராளமாக உள்ளன.

மனிதர்களின் பய உணர்வுக்கும் பிராணிகளின் பய உணர்வுக்கும் இடையே  உள்ள வேறுபாடு என்னவென்றால் அந்த பயத்தை நாம் எப்படி எதிர்கொள்கிறோம் பிராணிகள் எப்படி எதிர்கொள்கின்றன என்பதில்தான் உள்ளது.

Saturday, April 2, 2016

"ஆத்மீக அறிவு ஒரு பிரமிட் மோசடி "..... அரசியல், வர்த்தகம், கலை, சமுகம், சமயம்....கேள்வி கேள்...சவால் விடு...


உண்மையை தேடல்  என்றாலே அது ஏதோ ஒரு குறிப்பிட்ட ஆத்மீக உண்மையை தேடி ஆராயும் முயற்சி என்றாகிவிட்டது.
உண்மை என்பது உண்மை மட்டுமே. அதில் ஆத்மீக உண்மை அரசியல் உண்மை என்பதெல்லாம் கிடையாது.
சில பெரியவர்கள் ஆத்மீக உண்மை வேறு இதர உண்மைகள் இதர துறைகள் எல்லாம் அநாத்மீகம் என்பதாக கூறுவார்கள்.

இது ஒரு சௌகரியமான பொய்யான முகமூடியாகும்.

நான் சதா மனித வாழ்வின் மர்மங்களை ஆராய்ச்சி செய்பவன்.

என் கண்முன்னே நடக்கும் அரசியல் சமுக நிகழ்வுகளையும் சரி கலை கலாச்சாரத்தையும் சரி மிகவும் ஆர்வத்துடன் படிப்பவன்.
அதில் ஈடுபாடும் கொள்பவன்.
இந்த அதிசயமான உலகில் என்னதான் நடக்கிறது  என்பதை  அறிவதில் அனுபவிப்பதில் எனக்கு  அதீத விருப்பம்.

Tuesday, February 9, 2016

கனவுக்கு ஒரு பாலம்......அங்கே உங்களின் ஒரு விசுவரூபத்தை நீங்கள் தரிசிப்பீர்கள்.

கனவுகள் உண்மையானவையா?
இறந்தவர்களுடன் பேச முடியுமா?
ஒருவரோடு ஒருவர் மனத்தால் பேசமுடியுமா?
எதிர்காலத்தில் சந்திக்கபோகும் ஒருவருடன் இப்போதே பேசிக்கொண்டு இருக்கிறோமா?
நேரில் பரிச்சயம் இல்லாத ஒருவரோடு நாம் மனத்தால் பேசமுடியுமா? அல்லது பேசிக்கொண்டுதான் இருக்கிறோமா?
எல்லாவற்றிக்கும் பதில்கள் ஒன்றுதான். ஆம் ஆம் ஆம் .
இந்த கேள்விகள் எல்லாமே சாத்தியம் அற்ற கேள்விகளாக தோன்றக்கூடும்.
உண்மையில் இவை எல்லாமே நிச்சயம் சாத்தியமான விடயங்கள்தான்.
இன்னும் சரியாக சொல்லப்போனால் நாம் எம்மை அறியாமலேயே அடிக்கடி செய்துகொண்டிருக்கும் விடயங்கள்தான் இவை.

Wednesday, January 20, 2016

இயற்கை விதிகளை அறியாமல் நாம் இயற்றிய விதிகள்......

Stephen Hawking says humanity is inching closer to demise, and we are to blame.
We are not going to stop making progress, or reverse it, so we have to recognize the dangers and control them. I'm an optimist, and I believe we can,"  he said.
எமது வாழ்வும் இந்த பிரபஞ்சத்தின் வாழ்வும் ஒன்றில் ஒன்று தங்கியே உள்ளன. இந்த பிரபஞ்சம் என்று நான் குறிப்பிடுவது எம்மை சுற்றி உள்ள இந்த உலகத்தைத்தான்.
எமக்கும் இந்த பிரபஞ்சதிற்கும் உள்ள இயற்கை விதிகள் ஒன்றுதான்.
எமக்கு முன்பாக நடந்து செல்லும் ஒரு வழிப்போக்கனும் நானும் பிரிக்கவே முடியாத படி இணைந்துதான் இருக்கிறோம்.
விஞ்ஞான ரீதியாக மட்டும் அல்ல  மெய்ஞானம் என்று கூறுபவர்களின் கூற்றுப்படியும் இதுதான் உண்மை.
உண்மையில் நான் வேறு அவன் வேறு அல்ல ... அல்லது அவன் வேறு அது வேறு அல்ல.
சற்று முன்பு கூட அவனின் ஒரு அங்கமாக இருந்த பல நுண் அணுக்கள் எனது அங்கமாக சுழற்சி வேகத்தில் மாறிவிடுகிறது.
இது விஞ்ஞான ரீதியான உண்மையாகும்.
இந்த நுண் அணுக்கள் வெறும் பௌதீக சமாசாரம் மட்டும் அல்ல.
அவை ஒவ்வொன்றிலும் செய்திகள் உணர்வுகள் உள்ளன.

அவற்றில் உள்ள செய்திகள் , உணர்வுகள் அல்லது உணர்ச்சிகள் என்பன சதா ஒரு பொருளில் இருந்து இன்னொரு பொருளுக்கு அல்லது இன்னொரு
ஜீவராசிக்கு மாறிக்கொண்டே இருக்கின்றன.

Tuesday, January 5, 2016

சந்தேகம் கொள்....கேள்வி கேள்...சிக்னல்களை சரியாக புரிந்து கொள்......

அழகை ரசிக்கும் ஆற்றல்  எல்லா ஜீவராசிகளுக்கும் உண்டு. அதன் வெளிப்பாடுதான் ஆண் பெண் கவர்ச்சியாக பரிணாம வளர்ச்சி அடைந்து உயிரனங்களின் வாழ்வுக்கும் அதற்கேற்ற வசதிக்கும் உரியதாக இன்றளவும் உலகம் இருக்கிறது.

இன்று நாம் நம்பிக்கை வைத்து பின்பற்றி வரும் கோட்பாடுகள் அல்லது
வாழ்க்கை முறை எல்லாம் எப்படி உருவானது?
பெரும்பாலும் இயற்கையின் அடிப்படை விதிகளை தூக்கி எறிந்து விட்டு சமயங்கள் கூறும் செயற்கையான பொய்யான கோட்பாடுகளின் அடிப்படையில்தான் பெரிதும் இன்றைய வாழ்வு அமைந்துள்ளது.

எமது தேவைகள் என்று எமக்கு தேவையே இல்லாத பல விருப்பங்களை எமது தலைமீது சுமத்தி எம்மை ஒரு பொதி சுமக்கும் கழுதைகளாக உருமாற்றி இருக்கிறது.
எமது உண்மையான தேவைகளை நோக்கி எம் உள்ளுணர்வுகள் ஓயாது குரல் கொடுத்து கொண்டு இருக்கையில் , அதற்கு நேர் எதிர்மாறாக எமது தலையில் சுமத்தப்பட்ட விருப்பங்களை நோக்கி நாம் மனத்தால் ஓடுகிறோம்.
விளைவு இரண்டுக்கும் நடுவில் மாட்டுப்பட்டு அவதிபடுகிறோம்.
எமது உள்ளுணர்வுக்கு நாம் ஒருபோதும் உண்மையாக இருந்ததே இல்லை. எனவே எமது உள்ளுணர்வுகளுக்கு இந்த வாழ்க்கை உகந்ததாகவே இல்லை.

Tuesday, December 8, 2015

நீங்கள் விரும்புவதும் நினைப்பதுவும் ஒன்றா? இதை உறுதிப்படுத்தினால் அது நிச்சயம் நிறைவேறும்...அது ஒரு ரகசியம் அல்ல ...

ஓடிக்கொண்டு இருக்கும் இந்த வாழ்கை ஒவ்வொரு கணமும் உங்களால் தீர்மானிக்கப்பட்டு உருவாக்க பட்டுக்கொண்டே ஓடுகிறது.
நிச்சயமாக உங்களின் வாழ்க்கை வேறு ஒரு சக்தியால்
தீர்மானிக்கப்படவில்லை,
இதை நம்புவது அல்லது ஏற்று கொள்வது மிகவும் கடினமான காரியமாகும்.
நமக்கு இந்த வாழ்க்கையை தீர்மானிக்கும் சக்தி இருந்தால் நாம் ஏன் எமக்கு விருப்பமான விதத்தில் எமது வாழ்க்கையை தீர்மானித்து உருவாக முடியாமல் இருக்கிறது என்ற கேள்வி எழுவதும் தவிர்க்க முடியாது,

எமது வாழ்க்கை  அல்லது எமது நோக்கம்  எமது விருப்பப்படியே  உருவாக்கப்படுகிறது எனில்,
ஏன் நாம் விரும்பியபடி எமது வாழ்க்கை  அமைவது இல்லை?

நிச்சயமாக நாம் விரும்பியபடிதான் எமது வாழ்க்கை அமையும்.
இதில் சந்தேகமே தேவை இல்லை,
நாம் எதை விரும்புகிறோம் என்பது மிகபெரும் உள்ளார்த்தம் உள்ள கேள்வியாகும்.
நாம் விரும்புவது என்று நாம் நினைக்கும் எல்லாவற்றையும் நாம் நிச்சயம் விரும்புகிறோமா?
நாம் விரும்பவில்லை என்று நாம் நினைக்கும் எல்லாவற்றையும் உண்மையில் நாம் விரும்பவில்லையா?
உதாரணமாக நாம் ஒருவரும் விபத்துக்கள் எமக்கு நடக்க வேண்டும் என்று விரும்புவதில்லை .
ஆனாலும் எமக்கு விபத்துக்கள் சிலவேளை நடக்கின்றதே?
அது எப்படி?
எமக்கு ஒரு விபத்து நடந்து விட்டால் அது எப்படி எமக்கு சம்பவித்தது?
நிச்சயமாக நாம் அதை விரும்பி இருக்க முடியாது.
நிச்சயம் நாம் அதை உருவாக்கி இருக்கவும் முடியாது.
எமக்குள் இருக்கும் எது அந்த விபத்தை எம்மை நோக்கி ஈர்த்தது?
நிச்சயமாக அந்த விபத்தை ஈர்க்கும்  ஏதோ ஒரு சக்தி எம்முள் இருந்துதான் உருவாக்கி இருக்கிறது.
எம்மை அறியாமலே நாம் உருவாக்கும் சக்திகளுக்கு இயங்கும் ஆற்றல் இருக்கிறது.

Saturday, November 21, 2015

பகுத்தறிவு பற்றி கொஞ்சம் பேசுவோம் வாருங்கள்!

கடந்த சில ஆண்டுகளாக என்னுள் ஆத்மீகம் பற்றிய பல கேள்விகள் 
உருவானது . அந்த கேள்விகள் உண்மையில் என்னை விடுதலை செய்தது என்றுதான் கூறவேண்டும்.
அடடா இதுவரை காலமும் எனது சிந்தனை என்று நான் எண்ணிக் கொண்டு இருந்தது உண்மையியல் ஒரு இரவல் சிந்தனைதான் என்று புரிந்தது,
கடவுள் இருக்கிறாரா இல்லையா?
கடவுள் என்று எதை நான் கருதுகிறேன்?
என்பது  போன்ற கேள்விகளில் இருந்து நான் கொஞ்சம் விடுதலையானேன்.
அதன் பின்பு சுயமாக சிந்தித்து பார்க்க தொடங்கினேன்,
சுயமாக சிந்தித்தல் அதாவது பகுத்து அறிதல் /பகுத்தறிவு என்பது நமது நாட்டில் எப்போதுமே அதிகம் கேட்டிராத ஒரு விடயமாகும்.
எப்போதும் சதா கந்தசஷ்டி கவசம் அல்லது கர்த்தர் ஊழியம் அதுவும் இல்லாவிட்டால் பள்ளிவாசல் எல்லாவற்றிகும் மேலாக புத்தமேடம்.
இவற்றை எல்லாம் தாண்டி மக்களை சிந்திக்க தூண்டுவது இலகுவான காரியம் அல்ல. அதனால்தானோ என்னவோ மக்களுக்கு மகிழ்வாக வாழ்வதுவும் கூட இலகுவான காரியம் அல்ல என்பதாகி விட்டது,
பகுத்தறிவு கருத்துக்களை நான் சிந்திக்க தொடங்கிய பொழுது எனக்கு சற்று குழப்பம் ஏற்பட்டது.
மேலை நாட்டு பகுத்தறிவு கோட்பாடுகள் அல்லது இயக்கங்கள் எல்லாம் தர்கீக பகுத்தறிவு கோட்பாடுகள் அல்லது அமைப்புக்களாக இருந்தன.

Saturday, October 31, 2015

உண்மையை பார்க்க மறுக்கும் பகுத்தறிவுவாதிகள்....


இன்றைய பகுத்தறிவு வாதம் என்பது சென்ற அல்லது அதற்கு முந்தைய நூற்றாண்டுகளில் உருவான கருத்துக்களில் இருந்து கொஞ்சம் கூட மாறியதாக தெரியவில்லை.
நூற்றாண்டுக்கு முந்தைய பகுத்தறிவு கோட்பாடுகளையே இன்னும் பின் பற்றுகிறார்கள்.

ஆத்மீகவாதிகள் அல்லது சமயவாதிகள் எப்படி எப்படியெல்லாம் அறியாமையில் மூழ்கி உள்ளார்களோ அவர்களை போலவே இந்த பகுத்தறிவுவாதிகளும் ஏதோ ஒரு வகையில் ஒரு இறுகிய  நிலையில் உள்ளதாகவே தெரிகிறது.
இது கொஞ்சம் இடக்கு மிடக்கான கருத்தாக தோன்றலாம்.
 இவர்களின் பகுத்தறிவு பெரும்பாலும் தந்தை பெரியாரின்  கருத்துக்களோடு  ஒத்து  இருக்கிறது,
தந்தை பெரியாரின்  சுயமரியாதை  போராட்டம் ஜாதி அடக்குமுறைக்கு எதிராகவே  ஆரம்பிக்கப்பட்டது.

Thursday, February 19, 2015

Thought is a Invitation எண்ணங்கள் எல்லாமே சம்பவங்களுக்கான அழைப்பிதழ்கள்தான்

உங்களை நோக்கி வரும் நிகழ்சிகள் அல்லது சம்பவங்கள் எல்லாமே உங்கள் அழைப்பிதழை பெற்ற பின்பே வருகின்றன.
உங்களுக்கு கிடைக்கும் பொருட்கள் செல்வங்கள் இன்பங்கள் அல்லது துன்பங்கள் எல்லாமே உங்கள் அழைப்பிதழ் கிடைக்காமல் உங்களை நோக்கி வரமுடியாது. இது நிச்சயமான உண்மையாகும்
ஒருவரின் காதலோ அல்லது கோபமோ மட்டும் அல்லாது விபத்தும் லாட்டரி அதிஷ்டமும் கூட உங்கள் அழைப்பிதழை பெற்று உங்கள் அனுமதியுடன்தான் உங்களை வந்தடைகின்றது.
இதை விளங்கி கொள்வதில் உள்ள சிக்கல் என்னவென்றால் , நீங்கள் உங்களை அறியாமலேயே அழைப்பிதழ்களை அள்ளி வீசி கொண்டிருக்கிறீர்கள்.
உங்களுக்கு விருப்பமான விடயங்களுக்கும் வீசுகிறீர்கள்.
உங்களுக்கு விருப்பமே இல்லாத விடயங்களுக்கும் கூட அழைப்பிதழ்களை அள்ளி அள்ளி வீசுகிறீர்கள்.
நீங்களே அழைப்பை அனுப்பி அனுமதியும் கொடுத்துவிட்டு பின்பு எனக்கு ஏன் இது வரவேண்டும் அல்லது இப்படி நடக்கவேண்டும் என்று உங்களை நீங்களே கேள்வி கேட்டு பதில் கிடைக்காமல் குழம்புகிறீர்கள்.
தெரிந்தோ தெரியாமலோ உங்கள் மனதில் வந்து போகும் எண்ணங்கள் எல்லாமே மின்சாரம்தான் . அவை மிகவும் சக்திவாய்ந்த தொழிற்சாலைகள்தான் .
இந்த பிரபஞ்சத்திற்கு நல்லது கெட்டது விரும்பியது வெறுத்தது என்று ஒன்றும் கிடையாது.
உங்கள் மனம் என்ற தொழிற்சாலையில் வரும் மூலபொருள் அதாவது எண்ணங்கள் எல்லாமே  சம்பவங்கள்  அல்லது பொருட்களாக உருப்பெற்று வெளியேவரும் .

Friday, February 6, 2015

பக்தி என்றால் என்ன? பயம் என்றால் என்ன? இரண்டும் ஒன்றுதான்!

பக்தி என்ற சொல்லை கண்டு பிடித்தவர்தான் மனிதர்களிலேயே மிகவும் போலியான மனிதர். உள்ளுக்குள் இருக்கும் பயத்தை வெறும் மினுங்கல் பூச்சு பூசி வெளிப்படுத்த கண்டு பிடிக்கப்பட்டது தான் இந்த பக்தி என்ற சொல். அன்பு என்பது உண்மையில் தானாகவே வரவேண்டியது அது ஒன்றும் தேவாரம் பாடி வரவழைக்க முடியாது. நெஞ்சு நிறைய பயம் உள்ளவரை நிரந்தர அடிமையாக்க உருவாக்கப்பட்ட சொல் இது. ஒரு வாகனத்தின் உதிரிப்பாகம் அந்த வாகனத்தின் மீது பக்தி கொள்ளுமா? பல உதிரிப்பாகங்களும் சேர்ந்தது அல்லவா ஒரு வாகனம் ? தான் வேறு வாகனம் வேறு என்று உதிரிப்பாகங்கள் எண்ணுவதில்லையே ? அப்படி எண்ணி உதிரிப்பாகங்கள் ஒவ்வொன்றாக பிரிந்து போய்விட்டால் அது ஒரு வாகனம் அல்லவே? முழு பிரபஞ்சமும் ஒரு வாகனம் போல இயங்கும் இயங்கு சக்தி அல்லவா ? அதில் உள்ள சகல உதிரிப்பாகங்களும் பிரபஞ்சத்தின் பங்காளிகள் அல்லவா ? பங்காளிகள் ஒருவருக்கு ஒருவர் அன்புடன் இருப்பது இயல்புதானே? இதில் ஏன் பயம்/பக்தி வரவேண்டும் ? இந்த பயத்தால் யாருக்கு லாபம் ?

எல்லோருக்கும் இறுதியில் இனாமாகவே கிடைக்கப்போகும் காரட் அதுதான்...

ஆத்மானந்தம் ஆத்மானுபூதி அல்லது ஸ்திதப்ரக்ஞை என்றும் ஆங்கிலத்தில் self realization or Enlightenment என்றும் பொதுவாக குறிப்பிடப்படுவது  மனத்தின் இருப்பு  இல்லாத ஒரு நிலையில்  ஆத்ம அனுபவித்தில் லயித்திருக்கும்  நிலையாகும்.
இந்த உன்னத நிலையினை அடைவதற்காக பக்திமார்க்கம்  யோக மார்க்கம் ஞான மார்க்கம் தியான மார்க்கம் என்று பலவிதமான வார்த்தைகளில் குறிப்பிடப்படும்  வழிகளை சிரத்தையாக கடைப்பிடித்து மனித பிறவியின் உன்னத நிலையை அடையவேண்டும் என்றுதான் எல்லோரும் போதிக்கிறார்கள்.
இது  சுத்தமான வடிகட்டின  பித்தலாட்டமாகும்.
இந்த சமய குருமாரும் சாமிகளும்  ஆசாமிகளும் குறிப்பிடும் இந்த ஞானம் அல்லது வெங்காயம் எனப்படுவது அப்படி ஒன்றும் தேட கிடைக்காத பெரும் நிதியம் அல்ல.
எல்லோருக்கும் இறுதியில் இனாமாகவே கிடைக்கப்போகும் காரட் அதுதான், நீங்கள் வேண்டாம் என்றாலும் அந்த காரட் உங்களுக்கு கிடைக்க போகிறது என்பதே உண்மை, இதை மிகவும் Authentic க்காகவே சொல்கிறேன் . நம்புவதும் நம்பாததும் உங்கள் இஷ்டம் , எனக்கு ஒரு நஷ்டமும் இல்லை.

Friday, December 19, 2014

நாம் உலகை ரசிக்க வந்த ரசிகர்கள் ! ஆத்மாக்கள் என்பதெல்லாம் இரண்டாம் பட்சமே!

நான் இப்போது தெரிவிக்க போகும் கருத்து உங்களில் அநேகருக்கு ஏற்றுகொள்ள முடியாத கருத்தாகும் . மிகவும் பழகி போன ஒரு கோட்பாட்டை எழுந்த மானத்தில் தூக்கி எறிவது சுலபம் அல்ல. மிகவும் மெதுவாக படிப்படியாக தான் ஆழமாக பதிந்து விட்ட கோட்பாடுகளை மறு பரிசீலனை செய்ய முடியும் .
அடிப்படையில் எனக்கு பொறுமை இல்லை. தெரிந்ததை அல்லது நான் நம்புவதை எவ்வளவு விரைவாக வெளிப்படுத்த முடியுமோ அவ்வளவு விரைவாக வெளிப்படுத்துவது. எனது சுபாவமாகும் .
அதிகம் யோசிக்கும் பொழுது நான் சுயநலவாதி ஆகிவிடுகிறேன். எனது கருத்தை நான் வெளிப்படுத்துவதால் சமுகத்தில் எனது கருத்துக்கள் நிராகரிக்கப்பட்டு விடும் என்ற பயம் அல்லது தயக்கம் என்னை  மௌனமாக்கி விடும் .
காலாகாலமாக நாம் எமது உடலுக்கு உரிய முதல் இடத்தை கொடுக்கவில்லை. அனேகமாக கடவுளுக்கு அல்லது நமது வழிகாட்டி குருவானவர் போன்றவர்களுக்கு முதல் இடத்தையும் அல்லது நமது ஆத்மாவுக்கு முதல் அல்லது இரண்டாவது இடத்தையும் கொடுத்து வந்துள்ளோம்
உண்மையில் எமது உடலுக்கு மிகவும் கீழான ஒரு ஸ்தானத்தையே வழங்கி வந்துள்ளோம்.
ஏனெனில் உடல் அழியக்கூடியது  ஆனால் ஆத்மா அழியாது கடவுள் அழியாது குருவானவர் அழியாதவர் என்பது போன்ற கோட்பாடுகள் எமது மனதின் ஆழத்தில் பாதிக்கப்பட்டு உள்ளது.
இது உண்மையில் மிகவும் மோசமான தவறான கோட்பாடாகும்.
உடலை மேன்மை படுத்தாமல் ஆத்மாவை அல்லது கடவுளை மேன்மை படுத்துவிட்டோம்.
ஆத்மா அல்லது கடவுள் என்று ஒன்றுமே இல்லை என்று நான் கூறவரவில்லை.
ஆனால் இங்கே இப்போது நாம் வாழ்ந்து கொண்டு இருப்பது எமது உடல் மூலம்தான் .
எமது பிறவியின் நோக்கமும் இந்த அற்புதமான உடல் மூலம் இந்த வாழ்வை வாழ்ந்து எம்மை சுற்றி உள்ள அற்புதங்கள் எல்லாவற்றையும் ரசித்து மகிழ்வதற்கே.
குதிரையின் கழுத்தில் கட்டப்பட்ட காரெட் கிழங்கு போன்று எமது கழுத்துக்கு முன்பும் ஆத்மா கடவுள் சுவர்க்கம் போன்ற சாக்கிலேட்டுக்கள் கட்டப்பட்டுள்ளன .அவற்றை நோக்கி நாம் ஓடிகொண்டே இருக்கிறோம் ,
வாழ்வு முழுவதும் எமக்கு முன்பே கட்டப்பட்டுள்ள  சாக்கிலேட் இனிப்புக்களை நோக்கி ஓடிகொண்டே வாழ்வும் முடிந்து விடுகிறது.
கண்ணுக்கு முன்பே தெரியும் அற்புதத்தை அழகை ரசிக்க மறந்து எங்கே எப்போதோ யாரோ சொன்ன அம்புலிமாமா  கதைகளை நம்பி எல்லோரும் சென்று கொண்டிருக்கிறார்கள் போல தான் தெரிகிறது.
சொல்லப்பட்ட கதைகள் எல்லாம் இரவல் கதைகள்தான்.
ஒருவரினதும் சொந்த அனுபவமோ சொந்த புத்தியோ இல்லை என்பதை இங்கே நான் குறிப்பிட வேண்டிய அவசியம் உள்ளது.
நான் சொல்வது மட்டும் இரவல் அனுபவம் இல்லையா என்று நீங்கள் கேட்டால் அது மிகவும் நியாயமான கேள்விதான்.
நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் பதில் சொல்லவேண்டியது எனது கடமை.
ஆம் எனது சொந்த அனுபவத்தின் அடிப்படையிலேயே சொல்கிறேன்.

Thursday, November 13, 2014

Image Trap ! இமேஜ் பற்றிய பயம் ஒரு பொறி ! இந்த பயம் இருந்தால் No Creativity?

பிறர் நம்மை பற்றி என்ன நினைப்பார்கள் என்ற எண்ணம் பலவேளைகளிலும் எமக்கு ஒரு சிறையாகி விடுகிறது, எம்மை பற்றி நாமே கருதிக்கொள்ளும் தோற்றங்களும் பலவேளைகளில் எம்மை நகரவிடாமல் செய்து விடுகிறது,
பிறரின் அபிப்பிராயங்கள் எமது தீர்மானங்களின் மீது பாதிப்பை உண்டு பண்ணுவது சர்வ சாதாரணமாக நடக்கிறது,
அதன் காரணமாகவே பல சமயங்களில் நாம் நாமாக இல்லாமல் இருக்கிறோம்.
பிறரின் அபிப்பிராயங்கள் நமது மூளையை பல சமயங்களிலும் கழுவி விடுகிறது.நம்மை அறியாமலேயே  நாம் எமது சுய புத்தியை அல்லது சுய விருப்பத்தை மீறி நடந்து கொள்கிறோம்

ஏனெனில் பிறர் எம்மை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதில் எமக்கு அவ்வளவு அக்கறை.
பிறரின் அபிப்பிராயங்களுக்கு நாம் ஏன் பயப்படுகிறோம் ?
நாம் சுயமாக சுதந்திரமாக சிந்திக்கும் போதெல்லாம் சமுகத்தை நாம் வழிநடத்துகிறோம்.
பிறரின் அல்லது சமுகத்தின் அபிப்பிராயங்களுக்கு ஏற்ப சிந்திக்கும் பொழுதெல்லாம் நம்மை சமுகம் வழிநடத்துகிறது.

Monday, October 6, 2014

ஊரில் ஒரு முகம் ! வெளிநாட்டில் வேறொரு முகம் ! ஊருக்கு வேறு ஒரு உபதேசம் வேண்டாம் !

அண்மையில்  பாடகர்  யேசுதாஸ்  இந்திய பெண்கள்  கலாச்சாரத்தை பேணும் முகமாக ஜீன்ஸ் அணியக்கூடாது . ஆண்களின் மனம் கிளர்ச்சி அடையும் வண்ணம் பெண்கள் தங்கள் உடம்பை காட்டாது கூடுமானவரை மறைக்க வேண்டும் என்று தனது  கருத்துக்களை கூறியிருந்தார். இவரோ  வருஷத்தில் பாதி நாட்கள்   அமெரிக்காவில்  ப்ளோரிடா மாநிலத்தில் நன்றாக காலூன்றி இருப்பவர். ஊருக்கு வருவது  பணம் சம்பாதிக்கவும் மற்றும் ஒரு ஜாலி ட்ரிப் ஆகவும்தான் ,
தனது  அமெரிக்க  வாழ்க்கை முறை  இந்திய மக்களுக்கு தெரிந்து விடக்கூடாது என்று இவர் இப்படி  கலாசார பாரம்பரிய வேஷம் போடுகிறார். ஏனென்றால் இவரது  வருமானம் புகழ் எல்லாம் சாஸ்திரீய சங்கீதத்தில் தங்கி இருக்கிறது,  பலர் இவர் மாமிசம் உண்ணாத சுத்த  ஆசார சீலர் என்றுவேற நம்புகிறார்கள் .( சிக்கென் சாப்பிடுவதை நானே கண்டேன் )அதுவே இவருக்கு வியாபாரம்.
நான் சொல்ல வந்த விடயம் யேசுதாஸ் பற்றியது அல்ல . ஆனால் அது சிறந்த ஒரு உதாரணம் .
 நம்மவர் பலரும் வெளிநாடுகளில்  முழுக்க அல்லது பாதி பாதி அளவும் மேலை நாட்டு கலாசார விழுமியங்களின் நல்ல தன்மைகளை புரிந்து வாழுகிறார்கள்.
அவர்களுக்கு ஒரு குற்ற உணர்ச்சி இடையிடையே வருகிறது.
தங்கள்  சுதந்திர மேல்நாட்டு வாழ்க்கை முறை எங்கே ஊரில் உள்ள உறவினருக்கு தெரிந்து விடுமோ என்று ஏனோ பயப்படுகிறார்கள்.

Monday, June 23, 2014

உன்னை சுற்றி உள்ள பிரபஞ்சம் சதா உன்னுடன் பேசிக்கொண்டே இருக்கிறது ! உனக்குத்தான் கேட்கவில்லை ?

நீங்களோ நானோ ஒரு போதும் தனியாக இல்லை. எம்மை சுற்றி உள்ள இந்த பரந்த விரிந்த பிரபஞ்சம் சதா எங்களுடன் பேசுகிறது சிரிக்கிறது இடையிடையே கோபிக்கிறது இன்னும் என்னனவோ உணர்ச்சிகளையும் செய்திகளையும் எம்மை நோக்கி வீசிக்கொண்டே இருக்கிறது.
நாம் தான் கண்களையும் காதுகளையும் மட்டுமல்லாமல் மனதையும் மூடிக்கொண்டு விட்டோம், அதனால் அவற்றின் இனிய சங்கீதத்தை எம்மால் ரசிக்க தெரியாமல் இருக்கிறது.
உண்மையில் நாம் வேறு பிரபஞ்சம் வேறல்ல . இன்னும் சரியாக சொல்லப்போனால் எமது கண்களினூடாக இந்த உலகத்தை பிரபஞ்சம் பார்க்கிறது , எமது காதுகளினூடாக இந்த உலகின் இனிய நாதத்தை அது கேட்கிறது, எமது மனதின் ஊடாக அதுவும் தனது உணர்வுகளை சிந்தனைகளை அனுபவிக்கிறது.
கோடானு கோடி உயிரனங்கள் எல்லாம் பிரபஞ்சத்தின் ஒவ்வொரு பக்கங்களாகும் .
எமக்கும் இந்த பிரபஞ்சத்திற்கும் இடையே உள்ள உறவு அதி அற்புதமானது .அதை புரிந்துகொண்டவர்கள் அதிஷ்டசாலிகள்.
எமது ஒவ்வொரு அசைவும் பிரபஞ்சத்தின் நோக்கத்திற்கும் எமது நோக்கத்திற்கும் இசைவாக இருக்கும் பொழுது நாம் நினைத்ததெல்லாம் நிறைவேறுகிறது,
எமது வெற்றி தோல்வி எல்லாம் எம்மீது தான் தங்கி இருக்கின்றது.
ஆனால் எமக்குள் இருக்கும் பிரபஞ்சத்தின் உணர்வும் எம்மோடு கலந்து தான் இருக்கிறது,  அதை புரிந்து கொள்ளாவிடில். எமது விருப்பங்களும் விளைவுகளும் ஒன்றோடு ஒன்று முரண்பட்டு கொண்டே தான் இருக்கும்.
நாம் தவறான பாதையில் அடியெடுத்து வைக்கும் போதெல்லாம் எம்மை சுற்றி உள்ள பிரபஞ்சமானது எமக்கு பலவழிகளிலும் நல்ல வழியை காட்ட முயற்சிக்கும் . அதையும் மீறி நாம் தவறான பாதையில் சென்றாலும் எம்மை காப்பாற்ற அது சதா சரியான வழியை காட்டவே முயற்சிக்கும்,  ஏனெனில் அது வேறு நாம் வேறல்ல . ஆனால் தவறையே ரசிக்க நாம் முடிவு செய்துவிட்டால் அதற்கும் அது உதவி செய்யும்,  அந்த தவறில் இருந்து நாம் ஒரு அற்புதமான பாடத்தை படிக்கலாம் அல்லவா ? அதுவும் கூட ஒரு நன்மைதானே ?