Saturday, December 29, 2018

இயற்கை அழிவுகள் கூட உங்கள் மனங்களில் இருந்துதான் ஆரம்பம் ...

Collective Consciousness ... become  Collective Unconsciousness.  Then it will create material realities
தனி மனிதர்களுக்கு இருக்கும் மன நிலை அவர்களை வாழ்வை தீர்மானிக்கும் என்பதை பற்றி பல தடவைகள் எழுதி உள்ளேன்.
அவற்றை பலரும் ஏற்றுகொண்டாலும் ஏற்று கொள்ளாவிட்டலும் அதுதான் உண்மை.
பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் போன்று மனமே வாழ்க்கையை உற்பத்தி செய்கிறது.  இங்கே நான் சொல்ல வரும் விடயம் அது அல்ல.

உலக வரலாற்றில் எங்கெல்லாம் இயற்கை அழிவுகள் நடக்கின்றதோ அங்கெல்லாம் அதை தொடர்ந்து அல்லது அதற்கு முன்பாகவே மக்கள் அமைதி இழந்து  நாட்டில் குழப்பங்கள் நிலவுவதை காணலாம்.
இதை ஒரு தற்செயலான நிகழ்வு என்றுதான் பலரும் எண்ணுகிறார்கள் . பிரபஞ்சம் இயங்கும் பொறி முறையை பற்றிய போதிய புரிதல் இன்றைய உலகுக்கு  கிடையாது என்பதே உண்மை
ஈரான் இந்தோனேசியா இலங்கை இந்தியா பாகிஸ்தான் போன்ற பல நாடுகளில் இயற்கை அழிவுகளும் அந்தந்த நாடுகளில் ஏற்பட்ட அரசியல் சமுக குழப்பங்களும் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்தவை போல தெரிவது எல்லாம் வெறும் தற்செயலான நிகழ்வுகள் அல்ல.


அவை நிச்சயமான தொடர்பு உடைய சம்பவங்கள்தான்.
மக்களின் கூட்டு மன நிலைதான் அவர்களது நாட்டையும் சமுகத்தையும் பாதிக்கிறது. மக்கள் மன நிலை மேம்பட்டால் அந்த நாடும் மேம்படும் .மக்கள் குழம்பினால் இயற்கையும் குழம்பும். இது மிக தெளிவான உண்மை.
இந்த உண்மைகளை இன்றைய விஞ்ஞானம் மறுக்கிறது என்பது கூட உண்மை இல்லை.  மறுப்பது போல நடிக்கிறது என்றுதான் கூறவேண்டும். காரணம் இருக்கிறது .

இன்றைய விஞ்ஞான உலகம் யார் கையில் இருக்கிறது?  முழுக்க முழுக்க ஒரு வியாபார நோக்கம் கொண்டவர்கள் கையில்தான் விஞ்ஞானம் இருக்கிறது.

அவர்கள் புத்திசாலிகள் அல்ல. அவர்கள் புத்திசாலிகள் என்று உலகை நம்பவைத்து விட்டார்கள் . அதுதான் உண்மை நிலை.
இன்றைய விஞ்ஞான உலகம் புத்திசாலி உலகமாக இருந்தால்  உலகின் இயற்கை வளங்களை உயிரினங்களை  இவ்வளவு மோசமாக அழித்து வருங்கால மனிதர்களுக்கு இவ்வளவு பெரிய தீமையை செய்திருக்க மாட்டார்கள் .
மீண்டும் திரும்பவே முடியாத அளவு உலகின் இயற்கையை அழித்து விட்டார்கள். அதுவும் மிகவும் குறுகிய கால பகுதிக்குள்ளேயே.
நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களை  பற்றிய கணக்கெடுப்பும் அது பற்றிய ஆய்வுமே பல உண்மைகளை வெளிச்சம் போட்டு காட்டும்.
...
மனிதர்களின் கூட்டு மன நிலையே உலகின் மனம் போன்று பெரிதும் செயல் படுகிறது. மனிதர்களின் கூட்டு மனோ நிலை என்பது மக்களின் பொதுவான  அபிப்பிராயங்களே .
அரசியல் சமுக பொருளாதார விடயங்களில் மக்களின் மனோ நிலை எப்படி இருக்க வேண்டும் என்று மிக குள்ள நரித்தனமாக திட்டமிட்டு பெரும் ஊடகங்கள் தங்கள் வியாயபரங்களை கட்டமைத்து உள்ளார்கள்.

Monday, October 15, 2018

உங்களை நீங்கள் கண்டுபிடித்து விட்டீர்களா?... ஆரம்பம் இன்றே ஆகட்டும் ..

ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருக்கும் அறிவு மிக மிக அபூர்வமானது. நிச்சயமாக அது ஒரு நிகரற்ற அறிவுதான்.
அவரவர்களுக்கு ஏற்ற தேவையான அறிவு ஒவ்வொரு ஜீவராசிக்கும் மிக சரியாகவே உள்ளது.
நாம் இயற்றி கொண்ட அளவுகோல்கள் மிகவும் குழந்தைத்தனமாக இருப்பது போல்தான் தெரிகிறது.
ஆத்மீக வேட்கை உள்ளவர் எப்பொழுதும் சாந்த சொருபியாக சுயநலம் அற்று பரோபகார சிந்தை உள்ளவராக இருக்கவேண்டும் . அத்தோடு அவர் மிகவும் சக்தி வாய்ந்தவராக இருக்கவேண்டும் . அதாவது அமானுஷ்யமான மர்ம சக்திகள் உள்ளவராகவும் இருக்கவேண்டும் போன்ற எதிர்ப்பார்ப்புக்கள் நமக்குள் குடி கொண்டுவிட்டது.

 நாம் இது போல ஏராளமான கோட்பாடுகளை கண்டு பிடித்திருக்கிறோம்.
இந்த வகை கோட்பாடுகள் ஒரு வகையில் கோழிக்கூடுகள் போன்றவை.
இதில் வளர்க்கப்பட்ட  நாமும் ஒருவகை பிராய்லர் கோழிக்குஞ்சுகள் போலத்தான் வாழ்கிறோம்.
இந்த பிரபஞ்சத்தின் இயக்கம் பற்றியும் நமது பிறப்பு இறப்பு போன்ற வாழ்க்கை சங்கிலி தொடர் பயணம் பற்றியும் எதுவித சுய ஆராய்ச்சியும் மேற்கொள்ள தெரியாமல் இருக்கிறோம்.
எமது அடிப்படை கேள்விகளுக்கு எந்தவித சுய சந்தேகமும் கொள்ளாமல் சமுதாயம் கூறும் பதில்களை அப்படியே விழுங்கி கொண்டிருக்கிறோம்.
அதற்கு காராணம் நாம் சுயமாக வளரவே இல்லை என்பதுதான்.
பிரபஞ்சம் பற்றிய எல்லா கேள்விகளுக்கும் பதில்களை மதங்கள் எறிகின்றன.
அந்த பதில்கள் பிராய்லர் குஞ்சுகளுக்கு போடுவது போன்ற உணவு போன்றதாகும் .
அவற்றை உண்டு உண்டு அதை தாண்டி உணவை தேடவேண்டும் என்ற சிந்தனையோ வேட்கையோ அற்றவர்கள் ஆகிவிட்டோம்.

இதுதான் நமது மிகப்பெரும் பிரச்சனை.
இந்த பிரபஞ்சம் ஒவ்வொரு ஜீவராசிக்கும் ஒரு பெரிய சிங்காசனத்தை  வழங்கி உள்ளது.

Monday, September 17, 2018

இறந்தவர்களோடு பேசுதல் சாத்தியமா? அவர்கள் தொடர்பில் உள்ளார்களா? வழிகாட்டுகிறார்களா?

இறந்தவர்களோடு பேசுதல் அல்லது அவர்களோடு  தொடர்பு
கொள்ளமுடியுமா என்பது பற்றிய விவாதங்கள் மனித இனத்திற்கு புதிது அல்ல .
உண்மையில் மிகவும் ஆச்சரியம் தரத்தக்க செய்திகள் அல்லது நம்பிக்கைகள் வரலாற்றில் தாராளமாக உள்ளன.
எந்த விடயத்தையும் மிகவும் தர்க்க ரீதியாக ஆராய்வதே ஒரு நேர்மையான ஆய்வாளனின் கடமையாகும்.
ஆய்வுகள்  எப்பொழுதும் நேர்மையாக மேற்கொள்ள படுவதில்லை.
பல சமயங்களில் அவை தங்களுக்கு சார்பான கருத்துக்களை நிறுவுவதற்கு செய்யப்படும் ஆய்வாகவே இருந்து விடுவதுண்டு.
பௌதீக இரசாயன கணித ஆய்வுகளை போலவே ஆத்மீகம் கடவுள் போன்ற விவகாரங்களிலும் ஏராளமான போலியான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
இப்படிப்பட்ட போலி ஆய்வாளர்கள் எல்லா மதங்களிலும் தாராளமாக உலா வந்துள்ளனர்.
ஏனைய ஆய்வுகளிலும் பார்க்க மதங்கள் அல்லது கடவுள் பற்றிய போலி  ஆய்வுகள் மிகவும் இலாபம் தரக்கூடிய வியாபாரம் ஆகிவிட்டிருக்கிறது.
.
இன்று மனித குலத்தின் பெரும் துன்பங்களுக்கு இந்த போலி ஆய்வாளர்களும் ஒரு முக்கிய  காரணமாகும். இவர்கள் தங்களை ஆய்வாளர்கள் என்று கூட கூறமாட்டார்கள் .
தாங்கள் உயர்ந்த வழிகாட்டிகள் மேலான பெரியோர்கள் என்றெல்லாம் மக்களை நம்பவைத்து அவர்களின் சுய சிந்தனையை ஒரே அடியாக நொறுக்கி  விட்டனர்.
இந்த விடயத்தை பற்றிய ஆய்வில்  நான் ஒரு மாணவன்.
எந்த பள்ளிக்கூடமும் நான் படிக்க விரும்பிய இந்த பாடத்தை சொல்லி தரவில்லை.
இந்த முழு பிரபஞ்சமும் ஒரு பள்ளிக்கூடம்தான்  என்று புரிய எனக்கு நீண்ட காலம் ஆகிவிட்டது.

நாம் திறந்த மனதோடு கண்ணை திறந்து பார்க்கும் வரை இந்த பிரபஞ்சம் நமக்கு தெரியவராது.
கண்ணிருக்கும் எல்லோரும் பார்க்கிறார்கள் என்று அர்த்தம் அல்ல.

திறந்த மனதோடு அறியவேண்டும் என்ற ஆவலோடு பார்ப்பவருக்கு மட்டுமே சரியான காட்சிகள் தெரியவரும்.
காது இருப்பதானால் மாத்திரம் நாம் இந்த பிரபஞ்சம் பேசுவதை கேட்கிறோம் என்று ஒருபோதும் கூற முடியாது.
கேட்பதற்கு உங்கள் மனம் தயாராக இருந்தால் மட்டுமே அது பேசுவது உங்களுக்கு கேட்கும்.
பிரபஞ்சத்தை அறியும் ஆற்றல் மனிதர்களை விட இதர உயிரனங்களுக்கு மிகவும் அதிகமாக உண்டு.

இது பற்றி ஏராளமான நல்ல புத்தகங்கள் ஆங்கிலத்தில் வெளியாகி உள்ளன,
மத நம்பிக்கை கலக்காத நூல்கள் ஓரளவாவது நேர்மையான ஆய்வுகளை பற்றி கூறி உள்ளன.

தமிழில் ஏனோ சரியான நூல்கள் இல்லை . அல்லது அது பற்றி  எனக்கு சரியாக  தெரியவில்லை.

மதம் சார்ந்த விடயங்களில் ஒருபோதும் நேர்மை இருந்ததில்லை.
மத நம்பிக்கையாளர்களால் எழுதப்பட்ட  ஏராளமான நூல்களை வாசித்துள்ளேன் .
அவை பெரும்பாலும் மிகவும் குழந்தை தனமான அம்புலி மாமா கதைகளாகத்தான் இருக்கின்றன.
அவற்றால் எந்த பயனும் மனித குலத்திற்கு கிடைக்க போவதில்லை.
அழகான பிரபஞ்சத்தின் அற்புதங்களை எல்லாம் தங்கள் மதங்களுக்குள்  அடக்கி  பின்பு அதையும் கூறு போட்டு விற்றுவிடும் முட்டாள்தனமாகவே அவை உள்ளன.

இன்றிருக்கும் பல விஞ்ஞான  வசதிகள் அந்த காலத்தில் இருந்ததில்லை .
அதன் காரணமாக மனிதர்களின் கவனம் பல வழிகளிலும் சிதறுண்டு போகும் ஆபத்து மிகவும் குறைவாக இருந்தது .
ஆனால் இன்று நம்மை சுற்றி உள்ள பொருட்கள் வசதிகள் வாய்ப்பு எல்லாம் கூட கூட அவை எல்லாம் ஒரு பெரிய இயந்திரம் போலாகி விடுகிறது.
இப்படி இயந்திரமாகிவிட்ட சூழல் எமது நுண் உணர்வை மெல்ல மழுங்கடித்து விடும்.
நுண்ணுணர்வுகள் இல்லையேல் மனமும் மெல்ல தனது இருப்பை இழந்து விடும் .

Thursday, February 8, 2018

இயற்கைக்கும் இறைவனுக்கும் இடையே ஓயாத சதுரங்க வேட்டை

அனேகமாக எல்லா மனிதர்களின் மனதிலும்  ஒரு திருட்டு புத்தி எப்பொழுதும்
ஒழித்துகொண்டே இருக்கும். அதற்கு காரணம் மனிதர்களின் சிந்தனைகள் மதங்களால் வடிவமைக்கப்பட்டு இருப்பதுதான் .
அதன் காரணமாகவே ஒரு பயமும் இருக்கிறது . அண்மையில் வெளியான சதுரங்க வேட்டை என்றொரு படம்  .இன்னும் பார்க்காவிட்டால் பாருங்கள் .
அதில் வரும் ஒரு வசனம் , ஒருவரை ஏமாற்றவேண்டும் என்றால் அவரின் ஆசையை முதலில் தூண்டவேண்டும் . அந்த ஆசையினால் அவர் தூண்டப்பட்டால் அவரை ஏமாற்றுவது சுலபம் என்பதாக அந்த வசனம் இருக்கும் .
இதுதான் அனைத்து மதங்களினதும் அடிப்படை தத்துவம் .. இதுமட்டுமல்ல இன்றைய காப்பரெட் கம்பனிகளின் தத்துவமும் இதுதான் ,
இன்னும் சரியாக சொல்லப்போனால் மதங்கள்தான் அன்றைய காபரெட் கம்பனிகள். இரண்டுக்கும் அடிப்படையில் வேறு பாடே கிடையாது.

ஒருவர் தன் வீட்டை ஒழுங்காக அழகாக பார்த்துகொண்டிருப்பதை
பொறுக்காமல் அவரை குழப்பி அவரை அவரது வீட்டில் இருந்து வெளியே அழைத்து தங்கள் மதக்கம்பனிகளின் வருமானத்தை பார்ப்பதுதான் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அவை செய்து கொண்டிருக்கின்றன.

மதங்களால் ஏராளமான நல்ல விடயங்கள் நடந்துள்ளனவே என்று நீங்கள் எண்ணக்கூடும் . ஆனால் உண்மையில் அவை எல்லாவற்றிலும் மதங்கள் ஒருவகை சவாரியே செய்துள்ளதுதான் உண்மை.
நல்லதோ கெட்டதோ மக்களின் அத்தனை விடயங்களிலும் தாங்கள் முன் நிற்கவேண்டும் என்பதுதான் மதங்களின் அண்டர் கிரவுண்ட் கொள்கையாகும்.

திருமணமென்றால் மதம்தான் மணமக்கள் .... இழப்பு வீடு என்றாலும் மதங்கள்தான் மையக்கருவாக இருக்கவேண்டும் என்பதுதான் மதங்களின் நோக்கம்.
இதுதான் கம்பனிகளுக்கும் மதங்களுக்கும் உள்ள அடிப்படை தளம்.

நல்ல காலம் மனிதர்களை விட இதர உயிரனங்கள் ஒன்றும் மதங்களையும் கடவுள்களையும் தேடி அலையவில்லை .
எனவே அவை இந்த அழகிய பிரபஞ்சத்தை கெடுக்கவில்லை.
மனிதர்கள் ஏதோ அளப்பெரிய சாதனையும் கடும் உழைப்பும் மேற்கொண்டு கடவுளை கண்டுபிடிக்க வேண்டும் அல்லது அதே கடவுளை அடையவேண்டும் என்று எண்ணுகிறார்கள்.
அந்த காலத்தில் மிகப் பெரும்  கில்லாடிகள் இருந்திருக்கிறார்கள்.
அடம்பிடிக்கும்  குழந்தைகளுக்கு  அம்புலிமாமா வருவார்  என்று தாய்மார் அளக்கும் கதைகள் போலவே  மனிதர்களுக்கு  ஏராளமான கற்பனைகளை விற்பனை செய்துள்ளனர் .

Monday, January 29, 2018

தியானம் ஒரு பித்தலாட்டம் ... வாழ்வின் மீதான காதலை அழிக்க சொல்லும் மோசடி!

தியானம் மென்மையானது அற்புத சக்திகளை தரவல்லது, மேலான பேரானந்தத்தை தரவல்லது என்று  அனேகமாக  எல்லா மதங்களும் எல்லா வழிகாட்டிகளும் கூறுகிறார்கள் .
அதை  மறுத்து கூறுவது பற்றி சிந்திக்க கூட முடியுமா என்று பலரும் எண்ணக்கூடும்.. தியானத்தை புனிதப்படுத்தி அதைப்பற்றி ஆராய்வதே ஒரு பாவகாரியமாக்கி விட்டார்கள்.

நீண்ட காலமாக மீண்டும் மீண்டும் கூறுவதால் மட்டும் அது பற்றி நாம் பூரணமாக விளங்கி இருக்கிறோம் என்று அர்த்தம் கொள்ள முடியாது.
தியானம் எல்லோரும் கூறுவது போல அது எந்த தீமையும் இல்லாத ஒரு நல்ல பயிற்சி அல்லது முயற்சி அல்லது பாதை என்று நான் கூறமாட்டேன்.
தியானத்தால் அடையக்கூடிய உயர்ந்த பேரானந்த பெருநிலை என்று விதம் விதமாக நூல்களும் உபதேசகர்களும் கூறும் அந்த நிலையை நான் பல வருடங்களுக்கு முன்பு அனுபவித்திருக்கிறேன் என்பதால் அதைப்பற்றிய எனது கருத்து வெறுமனே புத்தகங்களில் இருந்து பொறுக்கியதோ அல்லது பல சுவாமிகள் வழிகாட்டிகளிடம் இருந்து பெற்ற தகவல்களோ அல்ல.
நான் இங்கே எழுதுவது எனது சொந்த அனுபவத்தில் நான் அறிந்த விடயங்கள்தான்.

மீண்டும் மீண்டும் தியானம் என்பது உலகிலேயே மிகவும் உயர்ந்த உன்னதமான விடயம் என்று கூறப்படுவதில் கொஞ்சம் உண்மை இருக்கிறது .
அது என்னவென்றால் மனதின் வேகத்தை குறைத்து கொஞ்சம் அமைதியை தருகிறது . அந்த அமைதியின் காரணமாக உடலின் ஆரோக்கியய்த்தில் சில நல்ல விளைவுகள் ஏற்படுகின்றன. ஆனால் பல தடவைகள் தியானம் செய்வதாலேயே பல விதமான மன உளைச்சலும் உடல் ஆரோக்கியம் கெடும் சந்தர்ப்பங்களும் உண்டு, அவற்றை பற்றி விளக்குவது எனது நோக்கம் அல்ல.
கால்களால் நடப்பதை விட கைகளால் நடப்பதற்கு விசேஷ திறமையும் பயிற்சியும் வேண்டும். ஆனால் அதனால் என்ன பயன் ?
அது போன்ற தேவையே இல்லாத சில இயற்கைக்கு மாறான சில சக்திகள் தியானத்தால் பெற முடியும் என்பது உண்மையே .
ஆனால் அவை எல்லாமே இயற்கைக்கு மாறான திறமைகளே. அவற்றால் ஒரு பிரயோசனமும் இல்லை,
உதாரணமாக தண்ணீரில் நடப்பது அதிசயமானதுதான் ஆனால் அதனால் என்ன பெரிய பிரயோசனம் வந்து விடப்போகின்றது?
ஆனால் அந்த சித்தியை அல்லது திறமையை பெறுவதற்கு ஒரு தியானி இழக்கும் விடயங்கள் ஏராளம்.
இந்த இடத்தில்தான் நாம் கொஞ்சம் சிந்திக்க வேண்டி இருக்கிறது.
தியானம் செய்து பேரானந்தம் வரப்பெற்றதாக கூறுபவர்கள் உண்மையில் மிகவும் இனிமையான இந்த உலகத்தை ரசிக்கும் அற்புத வாய்ப்பை இழந்து விடுகிறார்கள் .