Wednesday, April 13, 2016

பயம்...ஒரு எதிரி அல்ல....விளையாட வேண்டிய மைதானம் அது.

Santosh Patel: You think tiger is your friend, he is an animal, not a playmate.
Pi Patel: Animals have souls... I have seen it in their eyes. Animals don't think like we do! People who forget that get themselves killed. When you look into an animal's eyes, you are seeing your own emotions reflected back at you, and nothing else. ...life of pi quotes

பிராணிகளுக்கா அல்லது மனிதர்களுக்கா  பய உணர்வு மிக அதிகம்?
மனிதர்களுக்குதான் பய உணர்வு அதிமாக இருக்கிறது!
மனிதர்கள் ஏன் பிராணிகளை விட அதிகமாக பயப்படுகிறார்கள்?

இந்த கருத்து  உண்மையா என்ற சந்தேகம் உங்களுக்கு ஏற்படவும் கூடும். அடிப்படையில் மனிதர்களும் பிராணிகளும் பல சந்தர்ப்பங்களில் பயம் என்ற பொறிக்குள் அகப்படவேண்டிதான் உள்ளது. 
பயம் உண்டாவதற்கான காரணங்களும் ஏராளமாக உள்ளன.

மனிதர்களின் பய உணர்வுக்கும் பிராணிகளின் பய உணர்வுக்கும் இடையே  உள்ள வேறுபாடு என்னவென்றால் அந்த பயத்தை நாம் எப்படி எதிர்கொள்கிறோம் பிராணிகள் எப்படி எதிர்கொள்கின்றன என்பதில்தான் உள்ளது.

Saturday, April 2, 2016

"ஆத்மீக அறிவு ஒரு பிரமிட் மோசடி "..... அரசியல், வர்த்தகம், கலை, சமுகம், சமயம்....கேள்வி கேள்...சவால் விடு...


உண்மையை தேடல்  என்றாலே அது ஏதோ ஒரு குறிப்பிட்ட ஆத்மீக உண்மையை தேடி ஆராயும் முயற்சி என்றாகிவிட்டது.
உண்மை என்பது உண்மை மட்டுமே. அதில் ஆத்மீக உண்மை அரசியல் உண்மை என்பதெல்லாம் கிடையாது.
சில பெரியவர்கள் ஆத்மீக உண்மை வேறு இதர உண்மைகள் இதர துறைகள் எல்லாம் அநாத்மீகம் என்பதாக கூறுவார்கள்.

இது ஒரு சௌகரியமான பொய்யான முகமூடியாகும்.

நான் சதா மனித வாழ்வின் மர்மங்களை ஆராய்ச்சி செய்பவன்.

என் கண்முன்னே நடக்கும் அரசியல் சமுக நிகழ்வுகளையும் சரி கலை கலாச்சாரத்தையும் சரி மிகவும் ஆர்வத்துடன் படிப்பவன்.
அதில் ஈடுபாடும் கொள்பவன்.
இந்த அதிசயமான உலகில் என்னதான் நடக்கிறது  என்பதை  அறிவதில் அனுபவிப்பதில் எனக்கு  அதீத விருப்பம்.