Friday, December 19, 2014

நாம் உலகை ரசிக்க வந்த ரசிகர்கள் ! ஆத்மாக்கள் என்பதெல்லாம் இரண்டாம் பட்சமே!

நான் இப்போது தெரிவிக்க போகும் கருத்து உங்களில் அநேகருக்கு ஏற்றுகொள்ள முடியாத கருத்தாகும் . மிகவும் பழகி போன ஒரு கோட்பாட்டை எழுந்த மானத்தில் தூக்கி எறிவது சுலபம் அல்ல. மிகவும் மெதுவாக படிப்படியாக தான் ஆழமாக பதிந்து விட்ட கோட்பாடுகளை மறு பரிசீலனை செய்ய முடியும் .
அடிப்படையில் எனக்கு பொறுமை இல்லை. தெரிந்ததை அல்லது நான் நம்புவதை எவ்வளவு விரைவாக வெளிப்படுத்த முடியுமோ அவ்வளவு விரைவாக வெளிப்படுத்துவது. எனது சுபாவமாகும் .
அதிகம் யோசிக்கும் பொழுது நான் சுயநலவாதி ஆகிவிடுகிறேன். எனது கருத்தை நான் வெளிப்படுத்துவதால் சமுகத்தில் எனது கருத்துக்கள் நிராகரிக்கப்பட்டு விடும் என்ற பயம் அல்லது தயக்கம் என்னை  மௌனமாக்கி விடும் .
காலாகாலமாக நாம் எமது உடலுக்கு உரிய முதல் இடத்தை கொடுக்கவில்லை. அனேகமாக கடவுளுக்கு அல்லது நமது வழிகாட்டி குருவானவர் போன்றவர்களுக்கு முதல் இடத்தையும் அல்லது நமது ஆத்மாவுக்கு முதல் அல்லது இரண்டாவது இடத்தையும் கொடுத்து வந்துள்ளோம்
உண்மையில் எமது உடலுக்கு மிகவும் கீழான ஒரு ஸ்தானத்தையே வழங்கி வந்துள்ளோம்.
ஏனெனில் உடல் அழியக்கூடியது  ஆனால் ஆத்மா அழியாது கடவுள் அழியாது குருவானவர் அழியாதவர் என்பது போன்ற கோட்பாடுகள் எமது மனதின் ஆழத்தில் பாதிக்கப்பட்டு உள்ளது.
இது உண்மையில் மிகவும் மோசமான தவறான கோட்பாடாகும்.
உடலை மேன்மை படுத்தாமல் ஆத்மாவை அல்லது கடவுளை மேன்மை படுத்துவிட்டோம்.
ஆத்மா அல்லது கடவுள் என்று ஒன்றுமே இல்லை என்று நான் கூறவரவில்லை.
ஆனால் இங்கே இப்போது நாம் வாழ்ந்து கொண்டு இருப்பது எமது உடல் மூலம்தான் .
எமது பிறவியின் நோக்கமும் இந்த அற்புதமான உடல் மூலம் இந்த வாழ்வை வாழ்ந்து எம்மை சுற்றி உள்ள அற்புதங்கள் எல்லாவற்றையும் ரசித்து மகிழ்வதற்கே.
குதிரையின் கழுத்தில் கட்டப்பட்ட காரெட் கிழங்கு போன்று எமது கழுத்துக்கு முன்பும் ஆத்மா கடவுள் சுவர்க்கம் போன்ற சாக்கிலேட்டுக்கள் கட்டப்பட்டுள்ளன .அவற்றை நோக்கி நாம் ஓடிகொண்டே இருக்கிறோம் ,
வாழ்வு முழுவதும் எமக்கு முன்பே கட்டப்பட்டுள்ள  சாக்கிலேட் இனிப்புக்களை நோக்கி ஓடிகொண்டே வாழ்வும் முடிந்து விடுகிறது.
கண்ணுக்கு முன்பே தெரியும் அற்புதத்தை அழகை ரசிக்க மறந்து எங்கே எப்போதோ யாரோ சொன்ன அம்புலிமாமா  கதைகளை நம்பி எல்லோரும் சென்று கொண்டிருக்கிறார்கள் போல தான் தெரிகிறது.
சொல்லப்பட்ட கதைகள் எல்லாம் இரவல் கதைகள்தான்.
ஒருவரினதும் சொந்த அனுபவமோ சொந்த புத்தியோ இல்லை என்பதை இங்கே நான் குறிப்பிட வேண்டிய அவசியம் உள்ளது.
நான் சொல்வது மட்டும் இரவல் அனுபவம் இல்லையா என்று நீங்கள் கேட்டால் அது மிகவும் நியாயமான கேள்விதான்.
நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் பதில் சொல்லவேண்டியது எனது கடமை.
ஆம் எனது சொந்த அனுபவத்தின் அடிப்படையிலேயே சொல்கிறேன்.

Thursday, November 13, 2014

Image Trap ! இமேஜ் பற்றிய பயம் ஒரு பொறி ! இந்த பயம் இருந்தால் No Creativity?

பிறர் நம்மை பற்றி என்ன நினைப்பார்கள் என்ற எண்ணம் பலவேளைகளிலும் எமக்கு ஒரு சிறையாகி விடுகிறது, எம்மை பற்றி நாமே கருதிக்கொள்ளும் தோற்றங்களும் பலவேளைகளில் எம்மை நகரவிடாமல் செய்து விடுகிறது,
பிறரின் அபிப்பிராயங்கள் எமது தீர்மானங்களின் மீது பாதிப்பை உண்டு பண்ணுவது சர்வ சாதாரணமாக நடக்கிறது,
அதன் காரணமாகவே பல சமயங்களில் நாம் நாமாக இல்லாமல் இருக்கிறோம்.
பிறரின் அபிப்பிராயங்கள் நமது மூளையை பல சமயங்களிலும் கழுவி விடுகிறது.நம்மை அறியாமலேயே  நாம் எமது சுய புத்தியை அல்லது சுய விருப்பத்தை மீறி நடந்து கொள்கிறோம்

ஏனெனில் பிறர் எம்மை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதில் எமக்கு அவ்வளவு அக்கறை.
பிறரின் அபிப்பிராயங்களுக்கு நாம் ஏன் பயப்படுகிறோம் ?
நாம் சுயமாக சுதந்திரமாக சிந்திக்கும் போதெல்லாம் சமுகத்தை நாம் வழிநடத்துகிறோம்.
பிறரின் அல்லது சமுகத்தின் அபிப்பிராயங்களுக்கு ஏற்ப சிந்திக்கும் பொழுதெல்லாம் நம்மை சமுகம் வழிநடத்துகிறது.

Monday, October 6, 2014

ஊரில் ஒரு முகம் ! வெளிநாட்டில் வேறொரு முகம் ! ஊருக்கு வேறு ஒரு உபதேசம் வேண்டாம் !

அண்மையில்  பாடகர்  யேசுதாஸ்  இந்திய பெண்கள்  கலாச்சாரத்தை பேணும் முகமாக ஜீன்ஸ் அணியக்கூடாது . ஆண்களின் மனம் கிளர்ச்சி அடையும் வண்ணம் பெண்கள் தங்கள் உடம்பை காட்டாது கூடுமானவரை மறைக்க வேண்டும் என்று தனது  கருத்துக்களை கூறியிருந்தார். இவரோ  வருஷத்தில் பாதி நாட்கள்   அமெரிக்காவில்  ப்ளோரிடா மாநிலத்தில் நன்றாக காலூன்றி இருப்பவர். ஊருக்கு வருவது  பணம் சம்பாதிக்கவும் மற்றும் ஒரு ஜாலி ட்ரிப் ஆகவும்தான் ,
தனது  அமெரிக்க  வாழ்க்கை முறை  இந்திய மக்களுக்கு தெரிந்து விடக்கூடாது என்று இவர் இப்படி  கலாசார பாரம்பரிய வேஷம் போடுகிறார். ஏனென்றால் இவரது  வருமானம் புகழ் எல்லாம் சாஸ்திரீய சங்கீதத்தில் தங்கி இருக்கிறது,  பலர் இவர் மாமிசம் உண்ணாத சுத்த  ஆசார சீலர் என்றுவேற நம்புகிறார்கள் .( சிக்கென் சாப்பிடுவதை நானே கண்டேன் )அதுவே இவருக்கு வியாபாரம்.
நான் சொல்ல வந்த விடயம் யேசுதாஸ் பற்றியது அல்ல . ஆனால் அது சிறந்த ஒரு உதாரணம் .
 நம்மவர் பலரும் வெளிநாடுகளில்  முழுக்க அல்லது பாதி பாதி அளவும் மேலை நாட்டு கலாசார விழுமியங்களின் நல்ல தன்மைகளை புரிந்து வாழுகிறார்கள்.
அவர்களுக்கு ஒரு குற்ற உணர்ச்சி இடையிடையே வருகிறது.
தங்கள்  சுதந்திர மேல்நாட்டு வாழ்க்கை முறை எங்கே ஊரில் உள்ள உறவினருக்கு தெரிந்து விடுமோ என்று ஏனோ பயப்படுகிறார்கள்.

Monday, June 23, 2014

உன்னை சுற்றி உள்ள பிரபஞ்சம் சதா உன்னுடன் பேசிக்கொண்டே இருக்கிறது ! உனக்குத்தான் கேட்கவில்லை ?

நீங்களோ நானோ ஒரு போதும் தனியாக இல்லை. எம்மை சுற்றி உள்ள இந்த பரந்த விரிந்த பிரபஞ்சம் சதா எங்களுடன் பேசுகிறது சிரிக்கிறது இடையிடையே கோபிக்கிறது இன்னும் என்னனவோ உணர்ச்சிகளையும் செய்திகளையும் எம்மை நோக்கி வீசிக்கொண்டே இருக்கிறது.
நாம் தான் கண்களையும் காதுகளையும் மட்டுமல்லாமல் மனதையும் மூடிக்கொண்டு விட்டோம், அதனால் அவற்றின் இனிய சங்கீதத்தை எம்மால் ரசிக்க தெரியாமல் இருக்கிறது.
உண்மையில் நாம் வேறு பிரபஞ்சம் வேறல்ல . இன்னும் சரியாக சொல்லப்போனால் எமது கண்களினூடாக இந்த உலகத்தை பிரபஞ்சம் பார்க்கிறது , எமது காதுகளினூடாக இந்த உலகின் இனிய நாதத்தை அது கேட்கிறது, எமது மனதின் ஊடாக அதுவும் தனது உணர்வுகளை சிந்தனைகளை அனுபவிக்கிறது.
கோடானு கோடி உயிரனங்கள் எல்லாம் பிரபஞ்சத்தின் ஒவ்வொரு பக்கங்களாகும் .
எமக்கும் இந்த பிரபஞ்சத்திற்கும் இடையே உள்ள உறவு அதி அற்புதமானது .அதை புரிந்துகொண்டவர்கள் அதிஷ்டசாலிகள்.
எமது ஒவ்வொரு அசைவும் பிரபஞ்சத்தின் நோக்கத்திற்கும் எமது நோக்கத்திற்கும் இசைவாக இருக்கும் பொழுது நாம் நினைத்ததெல்லாம் நிறைவேறுகிறது,
எமது வெற்றி தோல்வி எல்லாம் எம்மீது தான் தங்கி இருக்கின்றது.
ஆனால் எமக்குள் இருக்கும் பிரபஞ்சத்தின் உணர்வும் எம்மோடு கலந்து தான் இருக்கிறது,  அதை புரிந்து கொள்ளாவிடில். எமது விருப்பங்களும் விளைவுகளும் ஒன்றோடு ஒன்று முரண்பட்டு கொண்டே தான் இருக்கும்.
நாம் தவறான பாதையில் அடியெடுத்து வைக்கும் போதெல்லாம் எம்மை சுற்றி உள்ள பிரபஞ்சமானது எமக்கு பலவழிகளிலும் நல்ல வழியை காட்ட முயற்சிக்கும் . அதையும் மீறி நாம் தவறான பாதையில் சென்றாலும் எம்மை காப்பாற்ற அது சதா சரியான வழியை காட்டவே முயற்சிக்கும்,  ஏனெனில் அது வேறு நாம் வேறல்ல . ஆனால் தவறையே ரசிக்க நாம் முடிவு செய்துவிட்டால் அதற்கும் அது உதவி செய்யும்,  அந்த தவறில் இருந்து நாம் ஒரு அற்புதமான பாடத்தை படிக்கலாம் அல்லவா ? அதுவும் கூட ஒரு நன்மைதானே ?

Saturday, June 14, 2014

உலகத்தையே உன் தலையில் சுமப்பதாக எண்ணாதே, உண்மையில் உலகம்தான் உன்னை சுமக்கிறது ,

எதிலும் மிகவும் சீரியஸாக இருப்பது என்பது ஒருவரின் நேர்மை , உண்மை , விசுவாசம் பணிவு தன்னம்பிக்கை போன்ற மிக உத்தமமான குணங்களின் அடையாளம் என்று நாம் பொதுவாக எண்ணுகிறோம்.

சீரியஸாக இருபதற்கு பெரும்பாலோர்  கவனமாக இருத்தல் என்ற பொருளை  கொண்டுள்ளனர் .
எந்த விடயத்திலும்  தேவை படும் அளவில் கவனமாக இருக்கிறேன் பேர்வழி என்று கூறிக்கொண்டு எதிலும் மகா சீரியஸாக இருப்பதைதான் நான் இங்கு குறிப்பிட வருகிறேன், 

 அதிலும் குறிப்பாக நான் சார்ந்த மக்களின் ஜனத்தொகையில் கணிசமானோர் பெரும்பாலும்   பொல்லாத சீரியஸ் பிராணிகள்தான் .

படிப்பதிலே கவனம் சாமி கும்பிடுவதில் கவனம் உழைப்பதில் கவனம் பிறரோடு பழகுவதில் கவனம் சம்பாதித்த காசை சொத்துக்களை சேமித்து வைப்பதில் கவனம் என எதிலும் கவனம் கவனம் கவனம்தான் ,

Sunday, May 25, 2014

பயம் வாழ்வை கொண்டுவராது முடிவைத்தான் கொண்டுவரும், அன்புதான் வாழ்வை கொண்டு வரும் .

எண்ணங்களை விருப்பங்களை தீர்மானங்களை மறைப்பது நமது
சுபாவமாகும் . தவிர்க்க முடியாத நேரங்களில்  மறைப்பது நல்லது என்று நாம் வாதிடகூடும்.
மனிதர்கள் அடிப்படையில் மிகவும் பயந்த ஒரு ஜீவராசியாகும் .
நாம் ஆதியில் வேட்டை ஆடும் கலாசாரத்தை கொண்டிருந்தோம் . அதன் தாக்கம் இன்னும் எமது மனதில் உறங்கி கொண்டுதான் இருக்கிறது.
அதனால்தான் நாம் மிகவும் பயந்த ஒரு பிராணியாக இருக்கிறோம். ஆனால் எமது பயத்தை  வெளியே காட்டி கொள்ளாமல் நடிப்பதில் மிக பெரிய பரிணாம வளர்ச்சியை அடைந்து விட்டோம்.
எமது மனதில் சதா தோன்றும் சிறு சிறு சலனங்களும் கூட பயத்துடன் கலந்தே வருகிறது.
நாம் என்னதான் அறிவு பண்பு  என்றெல்லாம் நீட்டி முழக்கினாலும். நாம் என்னவோ எல்லாவற்றிகும் பயபடுகிறோம்.
இந்த FEAR FACTOR எம்மை சரியான பாதையில் பயணிக்க விடாது,
பயம் என்பது ஒரு சாதாரண உணர்வு அல்ல.
இது ஒரு முக்கியமான காந்தம் போன்ற உணர்வு.  அடுத்த முக்கியமான உணர்வு அன்பு ஆகும் .
நமது சகல எண்ணங்களும் கருமங்களும் பேச்சுக்களும் ஒன்றில் அன்பின் அடிப்படையானதாக இருக்கும் , அல்லது பயத்தின் பால் பட்டதாக இருக்கும்.
இவை இரண்டில் ஏதாவது ஒரு உணர்வின் அடிப்படையிலே நமது சகல காரியங்களும் எண்ணங்களும் உருவாகுகின்றன.
அன்புக்கும் பயத்திற்கும் இடையே நடக்கும் நிரந்தர யுத்தம் எமது ஒவ்வொரு உணர்ச்சியிலும் நடை பெறுகிறது.
எப்பொழுதெல்லாம் அன்பு  வெல்கிறதோ அப்போதெல்லாம் நாம் மகிழ்ச்சியாக வெற்றிகரமாக வாழ்கிறோம்.
 ஆனால் துரதிஷ்ட வசமாக அன்பு அதிகம் வெல்வதில்லை .
பெருவாரியான தருணங்களில் எமது பயம் தான் வெல்கிறது. ஏனெனில் நாம் வாழும் இன்றைய உலகம் பெரும்பாலும் பயத்தின் அடிப்படையிலேயே கட்டி எழுப்பட்டிருக்கிறது.
நாம் அன்பு  காதல்  பாசம்  நேசம்  என்றெல்லாம்  வெளிப்படுத்திகொள்ளும் பலதருணங்களில்  உண்மையில்  அந்த அன்பின் முகமூடியை அணிந்து கொண்டு எமது பயத்தின் அடிப்படையிலேயே இயங்குகிறோம்.

Saturday, May 24, 2014

நமது உடலானது ஒரு கூட்டு நிர்வாக பொறிமுறையில் தான் இயங்குக்கிறது .Collective orgnaism அல்லது Supper Organism

A superorganism is an organism consisting of many organisms. The term was originally coined by
James Hutton (1726-1797), the "Father of Geology" in 1789. See the discussion of Geophysiology for more on the use of this term in geological and ecological contexts.
எங்கள் உடம்பில் எவ்வளவு ஜீவராசிகள் உயிர்வாழ்கின்றன தெரியுமா ?  நமது உடலில் கண்ணுக்கு தெரியாத எத்தனையோ விதமான உயிரனங்கள் வாழ்கின்றன . அவற்றிக்கு எமது உடலே உலகம் அல்லது முழு பிரபஞ்சம் .
தாம் வாழும் உலகம் உண்மையில் ஒரு மனிதனின் உடல்  என்பதை அவைகளால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது,
அப்படி தப்பி தவறி எதோ ஒரு உயிரினம் அறிவாளியாக அல்லது ஞானியாக உருவாகி இது போன்ற கேள்விகளை தனக்கு தானே அல்லது தானே நம்பும் அதன் உலகத்தை அதாவது நமது உடலை கேட்டால் பதில் கிடைக்குமா ?
அந்த உயரினங்கள் கேள்விகள் கேட்டு அவற்றிக்கு பதிலும் கிடைத்தால் கூட அவற்றை அந்த நுண்ணிய உயிர்களால் புரிந்து கொள்ளவே முடியாது.
ஏனெனில் அவை ஒரு போதும் அவர்களின் வாழ்வுக்கு ஆதாரமாக உள்ள மனிதனின் உடலை அதாவது அவற்றின் பிரபஞ்சத்தை / கடவுளை அவை ஒரு போதும் நேரில் காணவில்லை கேட்கவும் இல்லை.
அதீதமான கற்பனை அல்லது அறிவு போன்ற ஏதாவது ஒன்று அளவுக்கு அதிகமாக உள்ள ஜீவன்களால் சிலவேளை  புரிந்து புரியாமலும்  ஏதோ ஒரு விடயம் தங்களை சுற்றி ஒரு மர்மமாக இருப்பதை வியப்போடு நோக்கவும் கூட்டும்.
 உண்மையில் மனிதரின் உடலில் வாழும் அந்த ஜீவராசிகளின் நிலையில்தான் நாம் உள்ளோம் ,
எம்மை சுற்றி உள்ள இந்த உலகத்தை அல்லது முழு பிரபஞ்சத்தை பற்றி எமக்கு என்ன தெரியும் .?
ஏதோ கொஞ்சம் தெரியும்,
நிச்சயமாக தெரிய வேண்டிய விடயங்கள் மிக மிக அதிகமாக இருக்கிறது,
எமது கற்பனைக்கு எட்டாத அளவு  விரிந்த பிரபஞ்சம் எனென்ன கோட்பாடுகள் அல்லது இயற்கை விதிகளின் அடிப்படையில் இயங்குகிறது  என்பது பற்றி நாம் அறிந்திருப்பது வெறும் ஆரம்ப நிலையில் உள்ளனவே ஆகும்.
நாம் எமது பிறவியின் தன்மை பற்றியோ அல்லது நாம் வாழும் இந்த உலகம் பற்றியோ அறியவேண்டியது  மிகவும் அதிகம்.
எமக்கு தெரியாத எதையும் தூக்கி எறிந்து விடும் தற்குறி தனம் தற்காலத்து மனிதரிடம் மிக அதிமாக காணப்படுகிறது,  அதன் காரணமாகவும் பல விடயங்களை நாம் அறிய கூடிய வாய்ப்பை இழந்து விடுகிறோம் .
நமது உடலானது உண்மையில் ஒரு கூட்டு நிர்வாக பொறிமுறையில் தான் இயங்குக்கிறது .Collective orgnaism அல்லது Supper Organism போன்ற  பதங்களால் இது  குறிக்க படுகிறது ,
இந்த கூட்டு நிர்வாக பொறிமுறையில்  ஒவ்வோர் ஜீவராசியும்  தனது  பங்கை மிக சரியாக  நிறைவேற்றும் பொழுதுதான்  எமது  ஒட்டு மொத்த உடலினதும் மனத்தினதும்  வாழ்வு  எமது நோக்கத்தை ஈடேற்றும் விதமாக அமைகிறது,
இதே போன்றுதான் நாம் வாழும் இந்த உலகமும்  இயங்குகிறது. நாம் மட்டுமே சிந்திக்க தெரிந்த பிராணி என்று எண்ணுகிறோம் .எம்மைவிட எமது வாழ்வை பற்றி இந்த பிரபஞ்சத்திற்கு அல்லது உலகத்திற்கு  பெரிய பொறுப்பும் கனவும் இருக்கிறது,
மழையும் வெய்யிலும் காற்றும்  எம்மை  கோடானு கோடி ஆண்டுகளாக தாலாட்டி சீராட்டி வளர்த்து வருகிறதே ?
அது எவ்வளவு புத்திசாலியும் கடமை தவறாத கர்மயோகி என்று ஒரு கணம் சிந்தித்ததுண்டா ?
 எம்மை சுற்றி உள்ள  காற்று வானம் நிலம் நீர்  மற்றும தாவரங்கள்  உயிரனங்கள் எல்லாம் எவ்வளவு அற்புதமாக சிந்தித்து செயலாற்றுகின்றன?
இந்த  அற்புதமான சிறந்த  நிர்வாக  பொறி முறையே கடவுள் என்றும் சொல்லாலாம் . அல்லது இயற்கை என்று சொல்லலாம். விரும்பிய பேர் கொண்டு  குறிப்பிடலாம் .
எம்மை சுற்றி உள்ள இந்த பொறி முறையானது  சகல ஜீவராசிகளின்  வாழ்வை  உறுதி படுத்தும் நோக்கத்தோடு இயங்குவதாக தான் எனக்கு தெரிகிறது.
இந்த நோக்கத்தை நாமும்  பின்பற்றும் வரை  எமது வாழ்வும்  மிகவும் உறுதி படுத்தப்பட்டதாக இருக்கும் .
எப்போது எம்மை சுற்றி உள்ள இந்த பிரபஞ்ச இயங்கியல் பொறி முறைக்கு மாறாக நாம் செயல் படுகிறோமோ அப்போதே இந்த அற்புத பொறி முறையிலிருந்து வழுக்கி விழ தொடங்குகிறோம்

Wednesday, April 30, 2014

பழைய கோட்பாட்டு மயக்கம் ? பழமை என்பதாலேயே அவை புனிதம் அல்ல !

பழமையான தத்துவங்கள் பழமையான கோட்பாடுகள் எல்லாமே மிகவும்
புனிதமானவை போற்றுதற்கு உரியவை .
ஒரு போதும் அந்த பழமையான தத்துவங்களை நாம் கைவிடவே கூடாது

சனாதன தர்மங்கள் கேள்விகளுக்கு அப்பாற்பட்ட அற்புத கருத்துக்கள் ஆகும் ,
இதுதான் நமக்கு காலகாலமாக இந்த சமூகமும் சமயமும் நமக்கு கற்று தந்திருக்கும் பாடம்.

இது மிகவும் பிற்போக்கு தனமான ஒரு பாடமாகும் .

சனாதனம் என்றாலே கைகூப்பி தொழவேண்டும் அர்ச்சனை செய்யவேண்டும் என்றால்லாம் பெருசுகள் வரிந்து கட்டி கொண்டு வந்து விடுவார்கள்.
இந்த சனாதனம் என்று இவர்கள் எதை குறிப்பிடுகிறார்கள்?

கணவன் இறந்தால் அவனது எரியும் சவத்தோடு மனைவியும் சேர்ந்து எரிந்து சாம்பலாக வேண்டும் என்பது சனாதன தர்மம், அப்படி எரிந்து சாம்பலானவள் சதிமாதா என்று போற்ற படுவாள் .

ஒவ்வொரு ஜாதியும் ஒவ்வொரு அந்தஸ்தில் வைக்கப்படுவதும் சந்தன தர்மம் அதாவது பிராமணன் கடவுளின் தலையில் இருந்து பிறந்தவனாம்.தாழ்ந்த ஜாதிக்காரன் காலில் இருந்து பிறந்தவனாம் , இது ஒரு சனாதன தர்மம் .இந்த கண்றாவி கோட்பாடுகளையும் நமது தலையில காவுகிறோம் .

Tuesday, March 4, 2014

விஞ்ஞானத்தை விடுதலை செய்யுங்கள் !

True sign of intelligence is not knowledge but imagination. ஆத்மீக போர்வையில் இருக்கும் அறியாமை அல்லது போலியான சாமியார்களை / மனிதர்களை பற்றி எல்லாம் தற்போது அநேகருக்கு தெரிந்திருக்கிறது.
மனிதகுலத்தை எப்படியாவது இருட்டில் வைத்திருக்க விரும்பும் இந்த வியாபாரிகளை பற்றி எல்லாம் எழுதி எழுதி எனக்கு சற்று சலிப்பு ஏற்பட்டுவிட்டது .
எவ்வளவுதான் எழுதினாலும் பேசினாலும் நித்திரையை விட்டு எழுந்திருக்க மாட்டேன் என்று சிலர் பிடிவாதமாக இருப்பது மிகபெரும் அறியாமைதான்.
அவர்களை விட்டுவிடுவோம். இந்த பகுத்தறிவாளர்கள் என்று பெருதும் கருதப்படுபவர்கள் தங்களை அறியாமலேயே வேறு ஒரு இருட்டில் இருப்பதாகத்தான் எனெக்கு எண்ணத்தோன்றுகிறது .
குறிப்பாக தமிழ்நாட்டில் அல்லது இந்திய துணை கண்டத்தில் இருக்கும் பகுத்தறிவாளர்களின் கருத்துக்கள் பலவும் மிகவும் காலம் கடந்த கோட்பாடுகளாகும்.
ஏனெனில் இவர்களால் இடித்துரைக்க படும் மூட நம்பிக்கைகள் பல தடவைகளில் இவர்களுக்கு புரியாத அல்லது இன்னும் அறுதி இட்டு கூற முடியாத விஞ்ஞான உண்மைகளாக இருக்கிறது.
எது மூட நம்பிக்கை என்று விஞ்ஞான பூர்வமாக ஆய்வு செய்வதற்கு ஜாதியும் சமயமும் பெரும் தடையாக இருக்கிறது .

மேல்ஜாதி ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்கு சமயத்தை ஒரு சாதனமாக  பார்பனர்கள் பயன்படுத்தும் காரணத்தால் சமய கோட்பாடுகள் எப்போதும் உண்மையை மனிதன் கண்டறிவதற்கு தடையாகவே இருந்திருக்கின்றன.

Friday, February 14, 2014

நாம் பிரபஞ்சத்தோடு இயங்கும் விதத்தில் எங்கோ ஏதோ தவறு நேர்ந்திருக்கிறது !


இப்பிரபஞ்சம் உங்களுக்கு அற்புதமான
வாழ்க்கையை அளித்துள்ளது.

நமது வாழ்வு ஆனந்தம் உள்ளதாக அமைய நாம்  எப்படி இந்த பிரபஞ்சத்தை அணுக வேண்டும் ?

வாழ்வை செதுக்கும் உளி போன்ற கருவி எம்மிடம்தான் இருக்கிறது .

பிரபஞ்சம் எமக்களித்த அந்த கருவிகளை எப்படி உபயோகிப்பது அல்லது பயன் படுத்துவது என்பது எமக்கு நன்றாக தெரிந்திருக்க வேண்டும் .

இல்லாவிடில் அந்த கருவியால்  எந்தவிதமான பயன்பாடும் இல்லாது போய்விடும் .
அது மட்டுமல்ல மிகவும் வேண்டத்தகாத விளைவுகளும்கூட ஏற்பட்டுவிடும்.

எமக்கு வாய்க்கப்பெற்ற கருவிகள் பல.

எமது உடல் மற்றும் ஐம்புலன்கள் போன்றவை எமது தலையாய கருவிகள் ஆகும் .

இது போன்ற வெளி கருவிகளை விட மனம் அறிவு உணர்சிகள் போன்றவை மிகவும் நுட்பமான கருவிகளாகும் .


நமது மனம் அறிவு அல்லது உணர்சிகள் போன்றவை எவ்வளவு பெறுமதியான சக்தி மிகுந்த உபகரணங்கள் என்பது எமக்கு ஓரளவு தெரிந்தே இருக்கிறது என்று நம்புவோமாக.

எமது அதி உன்னதமான முக்கியமான கருவிகளான மனம் உணர்சிகள் அல்லது உணர்வுகள் எல்லாம் எவ்வளவு தூரம் எமது வாழ்வை தீர்மானிக்கின்றன என்பது பற்றி எமக்கு தெளிவான புரிதல் உண்டா என்ற கேள்வியை கேட்க வேண்டிய கட்டாயம் உள்ளது,

ஏனெனில் , நாம் விரும்பியவாறு எமது வாழ்வு அமைந்துள்ளதா ?

எமக்கு விருப்பமான விடயங்கள் அல்லது பொருட்கள் எல்லாம் எமக்கு கிடைத்துள்ளதா ?

எமது அதி அற்புதமான கருவிகள் எமக்கு விருப்பமான வாழ்வை அல்லது பொருட்களை தந்திருகிறதா ?

இந்த கேள்விகளுக்கு எல்லாம் ஆம் என்று மிகவும் மகிழ்ச்சியாக எம்மால் பதில் கூற முடிந்தால் . எமது கருவிகளை நாம் சரியான முறையில் பயன்படுத்தி  வாழ்கிறோம் என்று அர்த்தமாகும் .

இல்லை எமக்கு திருப்தி இல்லை என்ற நிலைக்கு நாம் வந்தோமானால் எங்கோ எதோ  ஒரு தவறு நிகழ்ந்திருக்கிறது என்றுதான் அர்த்தமாகும்.

அது என்ன தவறாக இருக்க முடியும் ?