Sunday, May 25, 2014

பயம் வாழ்வை கொண்டுவராது முடிவைத்தான் கொண்டுவரும், அன்புதான் வாழ்வை கொண்டு வரும் .

எண்ணங்களை விருப்பங்களை தீர்மானங்களை மறைப்பது நமது
சுபாவமாகும் . தவிர்க்க முடியாத நேரங்களில்  மறைப்பது நல்லது என்று நாம் வாதிடகூடும்.
மனிதர்கள் அடிப்படையில் மிகவும் பயந்த ஒரு ஜீவராசியாகும் .
நாம் ஆதியில் வேட்டை ஆடும் கலாசாரத்தை கொண்டிருந்தோம் . அதன் தாக்கம் இன்னும் எமது மனதில் உறங்கி கொண்டுதான் இருக்கிறது.
அதனால்தான் நாம் மிகவும் பயந்த ஒரு பிராணியாக இருக்கிறோம். ஆனால் எமது பயத்தை  வெளியே காட்டி கொள்ளாமல் நடிப்பதில் மிக பெரிய பரிணாம வளர்ச்சியை அடைந்து விட்டோம்.
எமது மனதில் சதா தோன்றும் சிறு சிறு சலனங்களும் கூட பயத்துடன் கலந்தே வருகிறது.
நாம் என்னதான் அறிவு பண்பு  என்றெல்லாம் நீட்டி முழக்கினாலும். நாம் என்னவோ எல்லாவற்றிகும் பயபடுகிறோம்.
இந்த FEAR FACTOR எம்மை சரியான பாதையில் பயணிக்க விடாது,
பயம் என்பது ஒரு சாதாரண உணர்வு அல்ல.
இது ஒரு முக்கியமான காந்தம் போன்ற உணர்வு.  அடுத்த முக்கியமான உணர்வு அன்பு ஆகும் .
நமது சகல எண்ணங்களும் கருமங்களும் பேச்சுக்களும் ஒன்றில் அன்பின் அடிப்படையானதாக இருக்கும் , அல்லது பயத்தின் பால் பட்டதாக இருக்கும்.
இவை இரண்டில் ஏதாவது ஒரு உணர்வின் அடிப்படையிலே நமது சகல காரியங்களும் எண்ணங்களும் உருவாகுகின்றன.
அன்புக்கும் பயத்திற்கும் இடையே நடக்கும் நிரந்தர யுத்தம் எமது ஒவ்வொரு உணர்ச்சியிலும் நடை பெறுகிறது.
எப்பொழுதெல்லாம் அன்பு  வெல்கிறதோ அப்போதெல்லாம் நாம் மகிழ்ச்சியாக வெற்றிகரமாக வாழ்கிறோம்.
 ஆனால் துரதிஷ்ட வசமாக அன்பு அதிகம் வெல்வதில்லை .
பெருவாரியான தருணங்களில் எமது பயம் தான் வெல்கிறது. ஏனெனில் நாம் வாழும் இன்றைய உலகம் பெரும்பாலும் பயத்தின் அடிப்படையிலேயே கட்டி எழுப்பட்டிருக்கிறது.
நாம் அன்பு  காதல்  பாசம்  நேசம்  என்றெல்லாம்  வெளிப்படுத்திகொள்ளும் பலதருணங்களில்  உண்மையில்  அந்த அன்பின் முகமூடியை அணிந்து கொண்டு எமது பயத்தின் அடிப்படையிலேயே இயங்குகிறோம்.

Saturday, May 24, 2014

நமது உடலானது ஒரு கூட்டு நிர்வாக பொறிமுறையில் தான் இயங்குக்கிறது .Collective orgnaism அல்லது Supper Organism

A superorganism is an organism consisting of many organisms. The term was originally coined by
James Hutton (1726-1797), the "Father of Geology" in 1789. See the discussion of Geophysiology for more on the use of this term in geological and ecological contexts.
எங்கள் உடம்பில் எவ்வளவு ஜீவராசிகள் உயிர்வாழ்கின்றன தெரியுமா ?  நமது உடலில் கண்ணுக்கு தெரியாத எத்தனையோ விதமான உயிரனங்கள் வாழ்கின்றன . அவற்றிக்கு எமது உடலே உலகம் அல்லது முழு பிரபஞ்சம் .
தாம் வாழும் உலகம் உண்மையில் ஒரு மனிதனின் உடல்  என்பதை அவைகளால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது,
அப்படி தப்பி தவறி எதோ ஒரு உயிரினம் அறிவாளியாக அல்லது ஞானியாக உருவாகி இது போன்ற கேள்விகளை தனக்கு தானே அல்லது தானே நம்பும் அதன் உலகத்தை அதாவது நமது உடலை கேட்டால் பதில் கிடைக்குமா ?
அந்த உயரினங்கள் கேள்விகள் கேட்டு அவற்றிக்கு பதிலும் கிடைத்தால் கூட அவற்றை அந்த நுண்ணிய உயிர்களால் புரிந்து கொள்ளவே முடியாது.
ஏனெனில் அவை ஒரு போதும் அவர்களின் வாழ்வுக்கு ஆதாரமாக உள்ள மனிதனின் உடலை அதாவது அவற்றின் பிரபஞ்சத்தை / கடவுளை அவை ஒரு போதும் நேரில் காணவில்லை கேட்கவும் இல்லை.
அதீதமான கற்பனை அல்லது அறிவு போன்ற ஏதாவது ஒன்று அளவுக்கு அதிகமாக உள்ள ஜீவன்களால் சிலவேளை  புரிந்து புரியாமலும்  ஏதோ ஒரு விடயம் தங்களை சுற்றி ஒரு மர்மமாக இருப்பதை வியப்போடு நோக்கவும் கூட்டும்.
 உண்மையில் மனிதரின் உடலில் வாழும் அந்த ஜீவராசிகளின் நிலையில்தான் நாம் உள்ளோம் ,
எம்மை சுற்றி உள்ள இந்த உலகத்தை அல்லது முழு பிரபஞ்சத்தை பற்றி எமக்கு என்ன தெரியும் .?
ஏதோ கொஞ்சம் தெரியும்,
நிச்சயமாக தெரிய வேண்டிய விடயங்கள் மிக மிக அதிகமாக இருக்கிறது,
எமது கற்பனைக்கு எட்டாத அளவு  விரிந்த பிரபஞ்சம் எனென்ன கோட்பாடுகள் அல்லது இயற்கை விதிகளின் அடிப்படையில் இயங்குகிறது  என்பது பற்றி நாம் அறிந்திருப்பது வெறும் ஆரம்ப நிலையில் உள்ளனவே ஆகும்.
நாம் எமது பிறவியின் தன்மை பற்றியோ அல்லது நாம் வாழும் இந்த உலகம் பற்றியோ அறியவேண்டியது  மிகவும் அதிகம்.
எமக்கு தெரியாத எதையும் தூக்கி எறிந்து விடும் தற்குறி தனம் தற்காலத்து மனிதரிடம் மிக அதிமாக காணப்படுகிறது,  அதன் காரணமாகவும் பல விடயங்களை நாம் அறிய கூடிய வாய்ப்பை இழந்து விடுகிறோம் .
நமது உடலானது உண்மையில் ஒரு கூட்டு நிர்வாக பொறிமுறையில் தான் இயங்குக்கிறது .Collective orgnaism அல்லது Supper Organism போன்ற  பதங்களால் இது  குறிக்க படுகிறது ,
இந்த கூட்டு நிர்வாக பொறிமுறையில்  ஒவ்வோர் ஜீவராசியும்  தனது  பங்கை மிக சரியாக  நிறைவேற்றும் பொழுதுதான்  எமது  ஒட்டு மொத்த உடலினதும் மனத்தினதும்  வாழ்வு  எமது நோக்கத்தை ஈடேற்றும் விதமாக அமைகிறது,
இதே போன்றுதான் நாம் வாழும் இந்த உலகமும்  இயங்குகிறது. நாம் மட்டுமே சிந்திக்க தெரிந்த பிராணி என்று எண்ணுகிறோம் .எம்மைவிட எமது வாழ்வை பற்றி இந்த பிரபஞ்சத்திற்கு அல்லது உலகத்திற்கு  பெரிய பொறுப்பும் கனவும் இருக்கிறது,
மழையும் வெய்யிலும் காற்றும்  எம்மை  கோடானு கோடி ஆண்டுகளாக தாலாட்டி சீராட்டி வளர்த்து வருகிறதே ?
அது எவ்வளவு புத்திசாலியும் கடமை தவறாத கர்மயோகி என்று ஒரு கணம் சிந்தித்ததுண்டா ?
 எம்மை சுற்றி உள்ள  காற்று வானம் நிலம் நீர்  மற்றும தாவரங்கள்  உயிரனங்கள் எல்லாம் எவ்வளவு அற்புதமாக சிந்தித்து செயலாற்றுகின்றன?
இந்த  அற்புதமான சிறந்த  நிர்வாக  பொறி முறையே கடவுள் என்றும் சொல்லாலாம் . அல்லது இயற்கை என்று சொல்லலாம். விரும்பிய பேர் கொண்டு  குறிப்பிடலாம் .
எம்மை சுற்றி உள்ள இந்த பொறி முறையானது  சகல ஜீவராசிகளின்  வாழ்வை  உறுதி படுத்தும் நோக்கத்தோடு இயங்குவதாக தான் எனக்கு தெரிகிறது.
இந்த நோக்கத்தை நாமும்  பின்பற்றும் வரை  எமது வாழ்வும்  மிகவும் உறுதி படுத்தப்பட்டதாக இருக்கும் .
எப்போது எம்மை சுற்றி உள்ள இந்த பிரபஞ்ச இயங்கியல் பொறி முறைக்கு மாறாக நாம் செயல் படுகிறோமோ அப்போதே இந்த அற்புத பொறி முறையிலிருந்து வழுக்கி விழ தொடங்குகிறோம்